போட்டதும் படித்த கதை. படித்ததும் பதிலிட முடியாத நிலை. காரணம் கதையேதான்.
நான் தவழும் வயதில் என் தந்தை தவறினார். இயற்கை எய்தினார் என்று எழுத இயலாத மறைவு அது. மறக்கமுடியாத நிகழ்வும் கூட.
அப்பா பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் நெகட்டிவ் ஆனவை. நெகடிவ்வை பிரின்ட் போட்டுப் பார்க்கும் என் முற்சியை சூடாக்கி பல தெளிவுகளைத் தந்தது இந்தக் கதை. நன்றி மூர்த்தி.
ரகுவின் தாய்க்கு முன்பே காதல் இருந்து இருக்கும், அந்த பெரியவர் தனது அக்கா மகளுக்கு தியாகம் செய்து இருப்பார் என்று முன்பே உணரமுடிந்தாலும்,கதையின் கரு எதையும் அவசரப்பட்டு முடிவு எடுக்க கூடாது என்பதை அழகாக சொல்லி இருந்தது.தொடர் எழுவதைவிட சிறுகதை எழுவதில் தான் அதிக திறமை தேவைப்படும் என்று நினைக்கிறென்.அது உங்களிடம் அதிகம் இருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்
மனதில் நிறைந்த கதை. கதையின் தொடக்கத்திலேயே ரகுவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு பின்னணி கதை இருக்கும் என்பது புலப்பட்டாலும் எதிர்பார்த்த சஸ்பென்ஸுடனேயே கதை மிக அருமையாக நகர்ந்து அசத்தலாக முடிந்துவிட்டது.
எந்த ஒரு சிறுகதை முடிந்தபின்னும் தொடர்வதுபோல் நம் மனதைச் சுற்றிச் சுற்றி வருகிறதோ அந்த சிறுகதை மிகச்சிறந்த கதைதானென்பது என் கருத்து.
மிகச்சிறந்த கதையினைத் தந்த நண்பருக்கு நன்றிகளும் பாராட்டுகளும்..!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks