ஐசிஐசிஐ வங்கியும் லண்டனை தலைமையாகமாக கொண்டு இயங்குவரும் ப்ரூடென்சியல் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றன. இக்காப்பீட்டு நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கி 74% மும், ப்ரூடென்சியல் நிறுவனமும் 26% முதலீடு செய்துள்ளன. இவை இந்தியா முழுவதும் 2000 கிளைகளையும், 2 லட்சத்திற்கு மேலான அட்வைசர்களையும் கொண்டு இயங்கிவருகிறது.
அமெரிக்காவில் பெருகிவரும் பொருளாதார நிதி நெருக்கடியால் உலகம் முழுவதும் மந்த நிலை நிலவி வருகிறது. அதொடு அமெரிக்காவில் நாள்தோறும் திவால் ஆகும் நிறுவனங்களும் பெருகிவருகிறது.
தற்போது அந்த வரிசையில் ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் நிறுவனமும் திவாலாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் தங்கள் திவால் நோட்டீசை ஐஆர்டீஏவிடம் சமர்பித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஐசிஐசிஐ வங்கி வட்டாரத்தில் விசாரித்தபோது ஐசிஐசிஐ- ப்ரூடென்சியில் நிறுவனத்தில் ப்ரூடென்சியல் கொண்டுள்ள 26% பங்குகளை இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வாங்கவுள்ளதாக தெரிவித்தனர். அதோடு இந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்தனர்.
இதுபற்றிய* அதிகாரப்பூர்வ* செய்திக*ள் இன்னும் வெளியாக*வில்லை என்ப*து குறிப்பிட*த்த*க்க*து.
Bookmarks