Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 19

Thread: தேவை சில சுத்திகரிப்பான்கள்..!!!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    தேவை சில சுத்திகரிப்பான்கள்..!!!

    சொன்னதை செய்யென நிர்பந்திக்கப்பட்டு
    தின்னதை செரித்துக்கொண்டு
    பின்னதை யோசிக்கா பெருங்கூட்டம்....
    முன்னவன் சொன்னதை ஏற்று
    என்ன அவன் சொன்னானெனவும் சிந்திக்காத
    மன்னவன் அடிமைகளாய்
    மண்னிதன் மேல் அலையும் நடைப்பிணங்கள்....


    குஷ்டரோகியின் விரல்களைப்போல
    மத ரோகிகளின் குறை இதயங்கள்..
    மறை வார்த்தைகளுக்கு
    மாற்றுப் பொருள் கற்பித்து,
    இறைவெறி கொண்டு, சார்ந்த
    இனம் அழிக்கும் ஈனங்கள்......


    விளைவித்தவனின் வியர்வையை
    விலைபேசி வளம் கொழிக்கும்
    இடைத் தரகரைப் போல
    இல்லா இறைவனின்
    அருள் வாங்கித் தருவதாய் சொல்லி
    பொருள் சேர்க்கும்
    பொல்லா இறைத்தரகர்கள்.....


    இவர்களைப்போல.....
    சிதைந்த சடலம் சுமக்கும்
    பிணந்தூக்கியாய் அலைவதில் விருப்பமில்லை
    மரணித்த மதத்தை முதுகில் சுமக்கும்
    மடத்தனத்தில் சம்மதமில்லை


    படபடத்து எரியும் சுடலையில் கருகும்
    மனிதத்தைக் காண மனமில்லை
    விதிர்விதிர்த்து விழிக்கும்
    சாமான்ய மக்களின் அன்றாட
    அவலம் காண அவகாசமில்லை....

    உடனடித் தேவை....

    உள்ளுக்குள் சங்கடம் தரும்
    மதம் விலக்க...
    மதமிளக்கி வில்லைகள்...


    கஷ்டப்பட்டேனும் கழுவ வேண்டும் இந்த
    கடவுளின் கறைகளை...
    அதற்குக் கொஞ்சம்
    உள்சுத்தி அமிலமும்....
    உற்பத்தி செய்ய வேண்டும் உடனே.....


    உலகின் மதம் விரும்பா மனிதர்கள்,
    இன பேதமில்லா இதயங்கள்,
    இன்றே ஒன்று சேர வேண்டும்
    ஒன்றே ஒன்றை செய்யவேண்டும்...

    மத நேயர்களால்
    மனிதநேயமழியாமல் காக்க வேண்டும்...!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    மத நேயர்களால்
    மனிதநேயமழியாமல் காக்க வேண்டும்...!!
    என்ன கொடுமையண்ணா இது.. மனிதனை நெறிப்படுத்த மனிதனால் உருவாக்கப்பட்ட மதத்திடமிருந்தே இன்று மனிதனை காக்கவேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறதே..??

    இக்கவிதையில் சொற்களின் ஆளுமை கவிதைக்கு பலம் சேர்க்கிறது.. வாழ்த்துக்கள் சிவா அண்ணா..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அதேக் கொடுமைதான் சுபி என்னை ஆத்திரப்படுத்துகிறது. தேவையற்ற மதத்தை பிணங்களைப் போலத் தூக்கித் திரியும் அவ(ல)ர்களைக் காணும்போது கோபம் வருகிறது. நன்றி சுபி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    மதம் இருக்கட்டும் - அது அவசியம்
    மதம் பிடிக்காது பார்த்துக் கொள்வது மட்டுமே முக்கியம்.

    //குஷ்டரோகியின் விரல்களைப்போல
    மத ரோகிகளின் குறை இதயங்கள்..
    //
    இதற்கு மேல் ஒப்புமை தேவையில்லை என்று நினைக்கிறேன்.

    //உலகின் மதம் விரும்பா மனிதர்கள்,
    இன பேதமில்லா இதயங்கள்,
    இன்றே ஒன்று சேர வேண்டும்
    ஒன்றே ஒன்றை செய்யவேண்டும்...
    //

    இன்றைய இந்திய தேசத்தின் ஒட்டு மொத்த பிரார்த்தனை இது
    மட்டுமாகத் தான் இருக்க முடியும்..

    நன்றி சிவா.ஜி.. உங்கள் சுத்திகரிப்பான்களோடு முற்றிலும்
    உடன்படுகிறேன்..





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    ஒன்று மட்டும் உண்மைதான் சிவா...

    போலியான அல்லது வெறித்தனமான மத நம்பிக்கை உள்ளவர்களால்தான் மனித நேயத்திற்கு பங்கம் விளைகிறது.

    மனிதத்தை நேசிப்பவர்கள் மாற்று மதத்தையும் சரி, மதமில்லாதவரையும் சரி... நிச்சயம் நேசிப்பார்கள்.

    ஆங்காங்கே நடந்து வரும் வன்முறைகளைக் கண்டு மனம் சஞ்சலமடைகிறது.

    உங்கள் அமில வார்த்தைகளில் 'மதம்' அழிந்து போகட்டும்.

    பாராட்டு சிவா.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    மதம் பிடித்த யானைகளிலிருந்து விடுதலை தேவை....

    பாரதி சொல்வது போல் போலித்தனமான, குருட்டுத்தனமான மதமே பிரச்சனைக்கு வழி வகுக்கிறது.

  7. #7
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    சொற்களால் சுயமிழந்தேன் அண்ணா. கருத்தினால் அதை மீட்டேன். அழகிய கவிதை இது.

    @@பிச்சி
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    [quote=poornima;387285]
    இன்றைய இந்திய தேசத்தின் ஒட்டு மொத்த பிரார்த்தனை இது
    மட்டுமாகத் தான் இருக்க முடியும்..
    quote]

    பிரார்த்தனைகளுடன் சில பிரயத்தனங்களும் மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நாமிருக்கிறோம் சகோதரி. இன்றைய இளம் தலைமுறைகளுக்கு அதில் ஈடுபாடு இருப்பது குறித்து மிக மகிழ்ச்சி.

    பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றி பூர்ணிமா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    ஒன்று மட்டும் உண்மைதான் சிவா...

    போலியான அல்லது வெறித்தனமான மத நம்பிக்கை உள்ளவர்களால்தான் மனித நேயத்திற்கு பங்கம் விளைகிறது.
    வெகு சத்தியமான வார்த்தைகள் பாரதி. அந்த வெறிதான் அவர்களை நெறி பிறழச் செய்கிறது. மனிதம் தழைக்க அவர்களையும் மனிதர்களாக மாற்ற வேண்டியது அவசியமாகிறது.

    உங்களின் ஆழமான பின்னூட்டத்துக்கும், அன்பளிப்புக்கும் மிக்க நன்றி பாரதி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர் View Post
    மதம் பிடித்த யானைகளிலிருந்து விடுதலை தேவை....

    பாரதி சொல்வது போல் போலித்தனமான, குருட்டுத்தனமான மதமே பிரச்சனைக்கு வழி வகுக்கிறது.
    ஆம் அறிஞர். அந்தக் குருட்டுத்தனத்துக்கு வைத்தியம் பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. குளிகையோ அல்லது அறுவையோ...சிகிச்சை அவசியம்.

    மிக்க நன்றி அறிஞர்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by பிச்சி View Post
    சொற்களால் சுயமிழந்தேன் அண்ணா. கருத்தினால் அதை மீட்டேன். அழகிய கவிதை இது.

    @@பிச்சி
    மனம் நிறைந்த நன்றி தங்கையே. ஒரு தேர்ந்த கவிதாயினியின் பாராட்டைப் பெற்றதில் மகிழ்ச்சி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    அழகான சொல்லாடல்..

    ஆழமான கருத்து

    சிந்திக்கவைக்கும் கேள்விகள்..

    அற்புதமான கவிதைக்கு நன்றிகள் சிவா.ஜி
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •