படிக்க பிரமிப்பாக உள்ளது. திரு.வரதராஜன் அவர்களின் கடின முயற்சிக்கு நல்ல ஆதரவு கிடைத்து அவரது கண்டுபிடிப்பு மக்களுக்கு உதவிட இறைவன் அருள் புரிய வேண்டும். பாரதி அவர்களுக்கு எனது நன்றிகள் பல.
படிக்க பிரமிப்பாக உள்ளது. திரு.வரதராஜன் அவர்களின் கடின முயற்சிக்கு நல்ல ஆதரவு கிடைத்து அவரது கண்டுபிடிப்பு மக்களுக்கு உதவிட இறைவன் அருள் புரிய வேண்டும். பாரதி அவர்களுக்கு எனது நன்றிகள் பல.
அன்புடன்
வெங்கட்
விலைக்கு கிடைத்தால் நாமும் பயன்படுத்திபார்க்கலாமே
உலகிற்கே இந்தியா மின்சாரம் வழங்கலாமே
கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஆரென், வெங்கட், ராஜா.
--------------------------------------------------------------
கேள்வி: ஒண்ணும் ஆகப்போறதில்லதான்.. ஆனா உங்க கண்டுபிடிப்பு மக்கள்கிட்ட போய் சேர வேண்டாமா?
பதில்: பொருள் போய் சேரணும்.. உண்மைதான். நான் பலருடைய கண்காணிப்புல இருக்குறவன். நான் எந்த புதுமைய செஞ்சாலும் சரி... எல்லோருடைய கண்காணிப்பிலயும் நான் இருக்கேன். ஒவ்வொண்ணையும் ரொம்ப உன்னிப்பா கவனிப்பாங்க. இத மாத்திரம் கொஞ்சம் தள்ளி இருந்து பாக்குறாங்க. காரணம் என்னான்ன இது புரியல அவங்களுக்கு. நான் எந்த மெசின செஞ்சாலும் வெளிய அதை செய்வான். நான் பல மெசினுகளை செஞ்சிருக்கேன். குறிப்பா பஞ்சிங் மெசின். ஒரு மார்வாடி கூட்டிட்டுப்போயி காண்பிச்சாரு. இத பஞ்சாபிக ஒன்பது பேரு மூணு வருசமா செஞ்சாங்க. 30குதிரைச்சக்தி மோட்டார் போட்டு கால் இஞ்சு பிளேட்டத்தான் ஓட்டப்போறாங்க. இது மாதிரி மெசின செஞ்சு எங்களுக்குத் தர முடியுமா..? இப்ப சல்லடையெல்லாம் ஜப்பான்ல இருந்து இறக்குமதி பண்றோம். ஆர்டர் போட்டா உடனே கிடைக்க மாட்டேங்குது, பிரச்சினையா இருக்கு. உங்களால செஞ்சு தர முடியுமா?ன்னு கேட்டார்.
அப்படியா...? சிம்பிளா செஞ்சிருவோம்னு சொன்னேன். 25000 ரூபாய்க்கு டிராப்ட் எடுத்துக்கொடுத்தாங்க. வந்து ஒரு குதிரைச்சக்தி மோட்டார போட்டு மெசின செஞ்சோம்.
அவங்களோட 30குதிரை சக்தி மெசின்ல, ஒரு ஷிப்டுக்கு மூன்றரை சல்லடை பஞ்ச் பண்ணாங்க.
நான் செஞ்ச ஒரு குதிரைசக்தி மெசின்ல, மணிக்கு 12 சல்லடை பஞ்ச் பண்ணோம். ஒரு ஷிப்டுக்கு 96 சல்லடை ஆச்சு. அந்த மெசின செஞ்சு ஏத்தி விட்டேன். எல்லோரும் சொன்னங்க.. வரதராஜன் பைத்தியக்காரன்..அப்படீன்னு. தொழில் பரவட்டுமே. எனக்கு கட்டுபடியாகுது, செய்றேன். நல்லாருக்கட்டும்.
அவரே ஜப்பானில் இருந்து புளூபிரிண்ட் வாங்கிக் கொடுத்து புதுமாதிரி சல்லடை செஞ்சுக்கொடுங்கன்னு சொன்னார். 50 ரூபா சார்ஜ் பண்ண வேலைக்கு 25 ரூபா கொடுத்தாங்க. கட்டுபடியாகுது; செய்வோம்.. அப்படீன்னு செய்தேன்.
அதே ஆளு சம்பாரிச்ச பிறகு நன்றி இல்லாம பேசுறார். நன்றி இல்லைங்கிற போது தள்ளிப்போயிருவேன் நானு. என் தாயார் படிக்காதவங்க.. ஆனா ஒரு சொல்லு சொல்லி இருக்காங்க. நன்றிய எந்த நேரத்திலும் மறக்கக்கூடாது மகனே.. நன்றி மறந்தவன மன்னிக்கக் கூடாது... விலகிப்போயிரு. எதுலயும் துரோகம் பண்ணக்கூடாது... அப்படீன்னு படிக்காத தாயார் எனக்கு சொல்லிக்கொடுத்த பாடம். அத இன்னைக்கும் நான் என் மனசுல வச்சுருக்கேன். அது படியே நடந்துகிட்டு இருக்கேன்.
பலருக்கும் பலதும் செய்து கொடுத்திருக்கேன். ஆனா எல்லோரும் அறிவ மட்டும் பெறணும். அன்னப்பட்சி மாதிரி பால மாத்திரம் குடிக்கணும்; தண்ணிய விட்டுரணும் அப்படீங்கிற மாதிரி வரதராஜனோட அறிவை நாம பெறணும் அப்படீன்னு மாத்திரம் நினைக்கிறாங்க.
உள்ளூர் பிரமுகர்கள பத்தி ஒரு எஞ்சீனியர் வந்து சொன்னாரு.. தினமும் உங்க பேச்சுத்தான்... வரதராஜனுக்கு வாய்ப்பு மாத்திரம் கொடுத்த நம்பர் ஒண்ணு ஆயிருவாரு. அப்புறம் நாம எல்லாரும் அவருக்கு பின்னாடி கைய கட்டிகிட்டுப் போகணும்..அப்படீன்னு பேசிகிட்டாங்கன்னு.
நான் அப்படி ஒண்ணும் அகந்தை உள்ளவனும் இல்ல. மத்தவங்கள் மட்டம் தட்டுறவனும் இல்ல. நான் யாரையும் துன்புறுத்தவோ, இன்சல்ட் பண்ணவோ மாட்டேன். அது எனக்குப் பிடிக்காது. நமக்கு இருக்குற உணர்வு எல்லாருக்கும் உண்டு.
நடு ரோட்டில ஆட்கள் நின்னு பேசிகிட்டு இருந்தாலும் ஒதுங்கிப் போறவன் நானு. ஒதுங்குங்க... அப்படின்னு சொல்ல மாட்டேன். ஆனால் என்னை இடறினா பெரிய அதிகாரி ஆனாலும் விட மாட்டேன். மானம் பெரிசுன்னு நினைக்கிறவன் நானு. அப்படியே சில கொள்கைகள் - அப்படியே வாழ்ந்துட்டேன்.
ஒருத்தர் வந்தார் - நான் எம்.பி அனுப்பி வந்தேன், உங்களுக்கு உதவுறதுக்கு அப்படீன்னு வந்தார். நான் சொன்னேன் உதவின்னு கேட்டதுக்கு அப்புறமா செஞ்சாதான் கேக்குறவங்களும் நல்லது - கொடுக்குறவங்களுக்கும் மரியாதை. நீங்க சொல்வரு யாருன்னே எனக்குத்தெரியாது, நான் உதவியும் கேட்கலயே அப்படீன்னு சொன்னேன். வரதராஜன் பொழைக்கத் தெரியாத ஆளுன்னு சொல்லிட்டுப்போயிட்டாரு. தானா வர்ற உதவிகள நான் ஏத்துக்கிறதில்ல.
உதவின்னா கேட்டுப்பெறணும். ஆனா இந்த மெசின பொறுத்த மட்டும் என்னால அந்த மாதிரி செய்ய முடியல.
சிலரு சொல்றாங்க - சர்வசாதரணமா பார்முலாவ கண்டுபிடிச்சுட்டீங்க வரதராஜன். நீங்க கண்டு பிடிச்சது எவ்வளவு பெரிசு தெரியுமா? பங்கு மார்க்கெட் எல்லாம் விழுந்து போகும்யா..
சர்வ சாதாரணமா மின்சாரத்த கண்டுபிடிச்சுட்டேன்னு சொல்றீங்க! இது எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா? அப்படீன்னு ஒருத்தர் சொல்றார். இங்கேயே ஒரு ஆல்ட்டர்னேட்டரை நிறுவினீங்கன்னா இங்க இருக்குற பேக்கடரிக்கெல்லாம் நீங்களே தாராளமா கரண்ட் சப்ளை பண்ணலாம். ஈ.பி..யில இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரெண்டரை ரூபாய்க்கு வாங்குறோம். உங்களுக்கென்னா பத்து பைசா வரும் - ஒரு யூனிட் மின்சாரத்துக்கு. ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் யூனிட் மின்சாரம் தயார் பண்ண முடியும். ஒரு மணி நேரத்துக்கு ஊர்ப்பட்ட பணம்! அப்படி சம்பாதிக்கலாமே...? எளிய முறைதானே..? அதான் எஞ்சின கண்டுபிடிச்சிட்டீங்கள்ள... எளிதா செய்திடலாம்தானே அப்படீன்னு ஒரு அதிகாரி சொல்றார். நல்ல யோசனதான். நான் யார்கிட்டே....பேங்குல போயி லோனு கேக்கலாமா? அதை நம்புவாங்களா? நம்ப மாட்டாங்க.
ரெண்டாவது என்னோட அடிப்படை நோக்கம் என்னன்னா எல்லா மக்களும் அதனால பயனடையணும். நம்ம படிச்சது அடுத்தவங்களுக்குப் போயி சேரணும். அதே நேரம் நல்லவங்க எல்லாரும் பயனடையணும். யாருக்கு எங்க வேணுமோ அங்க அவங்களே உற்பத்திப்பண்ணிக்கலாம். ஹும்... நோக்கம் என்னவோ நல்ல நோக்கம்தான். ஆனால் எல்லாத்துக்கும் மேல கொடுமை - இந்த வறுமை, கால தாமதம்.. இதுதான். பத்தாவது மெசின முடிச்சுப்புடணும்னு வெறி பிடிச்ச மாதிரி இருக்கேன். அத நெனச்சே தூக்கம் வரமாட்டேங்குது, சாப்பாடு செல்ல மாட்டேங்குது, முடிச்சிரணும். அது இன்னும் எளிய முறையா இருக்கணும். மெக்கானிசம் குறைவா இருக்கணும். சக்தி கூட்டறதுன்னா கூட்டிக்கலாம்.
கேள்வி: நீங்க எல்லாமே அலுவலகங்களுக்கு உபயோகிக்கிற மாதிரி த்ரீ பேஸ் மெசின் தான் தயார் செய்திருக்கிறீங்களா..? அதையே வீடுகளுக்கு உபயோகிக்கிற மாதிரி செய்திருக்கலாமே..?
பதில்: த்ரீ பேஸ் மெசின்லேயே தனித்தனியா பிரிச்சி வீடுகளுக்கும் கொடுத்திடலாம். இல்ல வேணும்னா சிங்கிள் பேஸாவே கூட தயார் செய்திடலாம். அது ஒண்ணும் பெரிய விசயம் இல்ல. நீங்க சொன்னதுக்கு பின்னாடி எனக்கு என்ன தோணுதுன்னா - இத எதுக்கு இண்டஸ்ரியல் மெசின் மாதிரி பெரிசா செய்யணும்? சின்னதா வெட்கிரைண்டர் மாதிரி வீடுகளுக்கு உபயோகிக்கிற மாதிரி சின்னதா செய்திருக்கலாமேன்னு தோணுது. அத பரப்புறதுக்கு வேணா லேசா இருக்கும். காப்பி செய்யறவன் ஈஸியா பண்ணிட்டுப் போயிடுவான். ஏன்னா இதுல பெரிசா மெக்கானிசம் ஒண்ணும் இல்ல. பெரிய மெக்கானிசமோ அறிவுக்கு வேலையோ அதுல ஒண்ணும் இல்ல. ஓடுற வரைக்கும் என்னமோ மாதிரித்தெரியும். ஆனா பிரிச்சுப் பார்த்துட்டா ..ஃபூ..இம்புட்டுத்தானா..? அப்படீன்னு சொல்லுவீங்க.
கேள்வி: உங்கள் கண்டுபிடிப்ப விளக்காமல் ஒரு வரியில எதன் அடிப்படையில் இந்த ஆல்ட்டர்னேட்டர் வேலை பாக்குதுண்ணு சொல்லச் சொன்னா நீங்க என்ன சொல்வீங்க?
பதில்: காற்றாலை மின்நிலையம் எப்படியோ, அதேதான் இது.
கேள்வி: ஒரே வரி..!
பதில்: ஆமா. தத்துவம் என்னான்னு பாத்தீங்கன்னா காந்தம் மின்சாரத்தை உண்டாக்கும்; மின்சாரம் காந்தத்தை உண்டாக்கும். இப்படியே மாறி.. மாறி.... அப்ப இந்த மின்சாரத்தை உண்டாக்குறதுக்கு சுத்துறதுக்கு பிரைமூவர்ன்னு பேரு. ஒரு அடிப்படையில ஒரு சக்தி வேணும். அந்த அடிப்படை சக்திய கொண்டு வர்றதுக்கு நீர், அனல், அணு, காற்று மின்நிலையம்னு உண்டாக்கி இருக்காங்க. டர்பைனை எது கொண்டாவது சுத்தணும். சுத்துனா அதோட இருக்குற ஆல்ட்டர்னேட்டர்ல மின்சாரம் வரும். விஞ்ஞானிகள் பலதையும் கண்டுபிடிச்சுட்டு போயிருக்காங்க. ஆனா அத முடிவான முடிவல்ல ; இது யூகமே அப்படீன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. அப்ப நான் எதுல நின்னு யோசிக்கிறேன்னா... காத்து இல்லன்னா காத்தாலை நின்னு போயிரும். தண்ணி இல்லைன்னா நீர்மின்நிலையம் நின்னு போயிரும். எரிபொருள் இல்லைன்னா
அனல்மின்நிலையம் நின்னு போயிரும்.
இதுல இந்த அனல்மின்சாரம் இருக்கு பாருங்க; இதை கடற்கரைப்பிரதேசத்துலதான் உண்டாக்கணும். ஏன்னா கப்பல்ல
நிலக்கரி வந்துகிட்டே இருக்கணும். வர்ற நிலக்கரிய நொறுக்கி, சுத்தப்படுத்தி, வடிகட்டி எரிச்சு மின்சாரத்த உண்டாக்குனதுக்குப் பின்னாடி வர்ற சாம்பல் இருக்கு பாருங்க... நெய்வேலியில மட்டும் ஒரு நாளைக்கு 150 லாரி சாம்பல் அள்ளுறாங்களாம்! அந்த சாம்பலால சுகாதாரக்கேடு வேற.
இப்ப பல லட்சம் கோடிக்கு அரபு நாடுகள்ல இருந்து பெட்ரோல், எண்ணெய் வாங்குறாங்க. இங்க ஒரு வாகனத்துல பார்த்தா ரேடியேட்டர்.. எஞ்சினு... அது.. இதுன்னு எல்லாத்தையும் பிரிச்சு கீழ போட்டுட்டு இதே மாதிரி ஒரு டி.ஸி மெசின வச்சி மாத்திட்டோம்னா வேணும்கிற மாதிரி செய்யலாம். சத்தமில்லாம, தூசியில்லாம, அனலும்
இல்லாம ஈஸியா பண்ணிடலாம்.
அப்படி ஒண்ண செஞ்சு, நம்ம பஞ்சம் தீரணும்னு வைங்க... கவர்ன்மெண்டுக்கு கொடுத்துட்டு, அய்யா.. இத வச்சுங்க... இதான் பார்முலா... ராயல்டி மாத்திரம் என் குடும்பத்துக்கு கொடுத்திருங்கன்னு சொல்லிட்டா உலகத்துல இருக்குற கார் கம்பெனியில் எல்லாம் நம்ம ஃபார்முலா உபயோகத்துல வரும். அப்படி வறதுல பத்து பெர்சண்ட் வாங்குனா போதும். பத்துல ஒன்பதை நீங்க வச்சுக்கோங்க. ஒரு பர்சண்ட் எனக்கு போதும்.
இது எண்ணெய் வள நாடுகளை பாதிக்கும் அப்படீன்னு எல்லாரும் சொல்றாங்க. ஆமா... இமயமலைக்கு குளிருதுன்னு கம்பளி போட்டு பொத்த முடியுமா? எண்ணெய் வள நாடுகளை பாதிக்கும் என்பதுக்காக
விஞ்ஞானத்தை நிறுத்த முடியுமா? பல கோடி மக்களுக்கு பயனுள்ள விஞ்ஞானம். வெட்கிரைண்டர் கணக்கா சின்னதா, ஒரு 200 வாட்ஸ் பிரைமூவர், 2000 வாட்ஸ் அவுட்புட் வச்சுக்குவோம். கேஸ் எதுவும் வேண்டியதில்லை.
இது சர்வ சாதாரணமான சமாச்சாரம் அப்படீன்னு அசட்டை பண்ணிறக்கூடாதுன்னு நினைக்கிறேன். சரி.. உங்க மாதிரியானவங்ககிட்ட நான் எதை எதிர்பார்க்க முடியும்? பொருளுதவின்னு ஒருத்தர்கிட்ட வாங்கினா "எனக்கென்ன தருவ?" அப்படீங்கிற கேள்வி இருக்கு? நானே எல்லாத்தையும் அனுபவிக்கப்போறேனா... இல்ல... என்னை சேர்ந்தவங்களும் பயனடையணும். நான் விட்டுட்டு சாப்பிடுற ஆள் கிடையாது. என்னைய நம்புனவங்க எல்லாருமே பயனடையணும். அந்த நோக்கம் எனக்கு உண்டு.
கேள்வி: அது மாதிரி ஏதாவது நிறுவனங்கள் வந்து கேட்டிருக்காங்களா உங்ககிட்ட? பார்முலாவ எங்ககிட்டகொடுங்க... நாங்க பண்றோம்னு..?
பதில்: ஒரு நிறுவனம் வந்தது மெட்ராஸிலிருந்து. ஏன்னா அவங்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் யூனிட் மின்சாரம் தேவையாம். எனக்கு நண்பர்கள் இருக்காங்க.. சிவகாசியில எல்லாம் ஒரு நாளைக்கு அஞ்சு லட்ச ரூபா மின்சாரம் வாங்குறவங்கல்லாம் இருக்காங்க. ஆனா என்ன செய்வாங்க?
நண்பர் ஒருத்தர் ஒரு வக்கீல் இருக்கார் - ரொம்ப பெரிசுபடுத்தி இருக்கீங்க.. உங்களால முடியாதுன்னால்லாம் ஒண்ணும் இல்ல. உங்களால முடியும். ஏன்னா உங்கள் பத்தி ஏ டூ இசட் தெரிஞ்சவன். உங்களால முடியும் அப்படீன்னு சொன்னார்.
ஆனா வெளியில பிரமுகர்கள் எல்லாம் என்ன நினைப்பாங்க? தொழில் முனைவோர், தொழில் செய்யறவங்க எல்லாம்... வரதராஜன் சாதாரண சட்டை, கைலி கட்டுன சாதாரண ஆளு. அஞ்சு கோடி பத்து கோடிங்கிறது ஏராளம் அப்படீன்னு. ஆனா அவங்க எல்லாருக்கும் ஆயிரம்கோடி அவங்களுக்கே வேணும் அப்படீன்னுதான்
நினைப்பாங்க. அதனால பார்முலாவ வித்துரலாம். ஆனா நோக்கம் எல்லாரும் பயனடையணும் அப்படீங்கிற நோக்கம் இருக்கட்டுமே!
எடிசன் காதடச்சு சவ்வு எல்லாம் போச்சு. 89 பொருட்களை கண்டுபிடிச்சு பதிவு செஞ்சு ராயல்டி வாங்குனாரு... இல்லையா? நேரு புத்தகம் எழுதி ராயல்டி வாங்குனாரு. ஏன் அவங்ககிட்ட இல்லாத
கோடியா? அது மாதிரி பலன மக்களும் அடையணும். என் குடும்பம் - குட்டி, என் சந்ததிகளும் பலனடையட்டுமே.
--------------------------------------------------------------
நீண்ட நேரம் அவர் பேசுவதை பதிவாக்கிக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தேன். அவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு அவரது கண்டுபிடிப்பின் சில புகைப்படங்களையும் எடுத்தேன். எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல் சென்றதால் என்னால் சரியான முறையில் கேள்விகளை கேட்க முடியவில்லை. இனிமேல் அவ்விதம்
செல்ல வேண்டுமெனில் சற்றேனும் முன்னேற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து கற்றுக்கொண்டேன்.
பதிவு செய்யாமல் வெறுமனே பேசிக்கொண்டிருந்த போது, அவரது உழைப்பையும் அதன் மேல் அவருக்கிருக்கும் நம்பிக்கையையும் அறிய முடிந்தது. இந்தக்கண்டுபிடிப்பை அவரது மகன்களுக்கு கற்றுத்தந்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு "மொதல்ல, பேசுனா பேசுறத நின்னு கேக்கணும் இல்லீங்களா?" என்று வறட்சியாக புன்னகைத்துக்கொண்டே சொன்னார்.
எத்தனையோ ஏமாற்றுக்காரர்கள் மத்தியில், மக்களுக்கு பலனளிக்கட்டுமே என்ற உந்துதலில், தான் அறிந்ததை வைத்து முயற்சி செய்து, வெற்றி பெற்று விட்டதாக நம்பும் அவரின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நான் பேசிய வரையில் அவர் பொய்யுரைப்பதாக எனக்குத்தோன்றவில்லை.
நான் சென்ற நேரத்தில் மின்சாரம் தடைபட்டிருந்தது...! அவரிடம்... சூரியஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையைக் கையாண்டு அவரது தொழிலுக்குத் தேவையான மின்சாரத்தை அவரே உற்பத்தி செய்து அவரது தொழிலை நடத்தி வந்தாலே போதுமே, அவரது கண்டுபிடிப்பு நீருபிக்கப்பட்டதாகி விடுமே என்ற போது, அவர்
சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு நிறைய இடம் வேண்டும் என்றும், அதற்கு மூலதனம் அதிகம் ஆகும் என்றும் கேள்விப்பட்டதாகக் கூறினார்.
இப்போதைய குடும்ப வாழ்க்கையை நடத்த, உலோகச்சல்லடைகள் தயாரிக்கும் பணிதான் உதவி வருவதாக கூறினார். தனது கண்டுபிடிப்பு கூடிய விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும் என்ற ஆர்வமும், ஏக்கமும் அவரது பேச்சிலும் கண்களிலும் தெரிந்தது. தான் நலமாக இருக்கும் போதே அது நடந்து விட வேண்டும் என்ற தவிப்பும் புரிந்தது.
இந்தக்கண்டுபிடிப்பு உண்மையா, இல்லையா..? உண்மையானால் உலக மக்களுக்கு எல்லாம் நல்லது. அல்லது கண்டுபிடிப்பு உண்மை இல்லையெனில் அதையும் உலகுக்கு தெரிவித்து விடலாம். மத்திய, மாநில அரசுகளுக்கு அதற்கான செலவு ஒன்றும் சுமையாக இருக்காது. ஆனால் அதை அரசுகள் செய்யுமா?
இந்த பேட்டியின் போது மெலிதாக பெய்து கொண்டிருந்த மழை அடைமழையாக மாறி கொட்ட ஆரம்பித்திருந்தது. எல்லோரும் சொன்னது போல "அந்த இயந்திரத்தை பிரித்துக்காண்பியுங்கள்" அல்லது "அந்த பார்முலா என்ன?" என்ற கேள்விகளை மட்டும் கடைசி வரை கேட்க மனம் வரவில்லை.
இந்த இயந்திரம் உண்மையானதா... இல்லையா என்று கண்டறிய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்ற நான், நினைத்ததை கண்டறிய முடியவில்லை என்பது உண்மையே. ஆனால் அப்படி யோசிப்பதை விட... இந்த மனிதரின் கண்டுபிடிப்பு உண்மையானதாக வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே மனதில் கடைசியில் மேலோங்கி நின்றது.
- முற்றும்.
இன்னும் முழுவதும் படிக்கவில்லை.
சிரத்தை எடுத்து பகிர்ந்தமைக்கு மிக நன்றி
கீழை நாடான்
மிக்க நன்றி பாரதி.
சில மாதங்களுக்கு முன்பே இதனை படித்து பதில் தட்டச்சு செய்து முடிக்கும் முன் கணிணி மக்கர் செய்த்ததால் பதிவிட முடியாமல் போனது.
உங்களின் கடைசி வரிகள் மனதில் கனத்தை சேர்த்தது, உங்கள் அக்கறையும் தெரிகிறது. எனக்கும் அதே ஆவல்தான்.
வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் நம் தலைமுறை
----------------------------------
அன்புடன்
இ.த.செ
சென்ற முறைபோல ஆகிவிடக் கூடாது என்று முதலில் நன்றி கூறி பின் இதனை எழுதுகிறேன்.
இவரின் முயற்ச்சிக்கு எனது உளங்கனிந்த பணிவான வணக்கங்கள்.
கல்லூரி முடிக்கும் போது எனக்கும் இதே எண்ணம் தோண்றியது உண்டு. வீட்டில் மின் விசிறி, கிரைண்டர், மோட்டர் ஓடும் போதெல்லாம் தவறாமல் இந்த சிந்தனை எழும். பிறகு இதற்க்காகவே ஒவ்வொரு வீட்டிலும் தனி ஜெனரேட்டர் வைத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றும்.
ஹாப்கின்சன் ஆய்வு என்று நடைமுறை சோதனை ஒன்று மின்னியல் மாணவர்களுக்கு உண்டு. அதில் இவர் கூறியதை போலவே ஒரு மோட்டாரை கொண்டு ஒரு ஜெனரேட்டரை இயக்கி அதிலிருந்து மின் உற்பத்தி செய்து அதில் ஒவ்வொரு பேசிற்க்கும் சீகுவன்ஸ் சோதனை செய்து கடைசியில் ஜெனரேட்டரை இயக்கும் மோட்டரை உற்பத்தியாகும் மின்சாரத்தில் இயக்க வேண்டும்.
தெருவில் பாம்பிற்க்கும் கீரிக்கும் சண்டை காட்டுவதாக கூறி கடைசிவரை சண்டையே காட்டாமல் பெட்டி கட்டுவதைப் போல, ஒரு படத்தில் வடிவேலு கடைசி வரைக்கும் எதுக்கு லாயக்கில்லன்னு சொல்லவே இல்லையே என்பது போல “ஆய்வுகூடத்தில் அந்த ஒரு சிவிட்சை மட்டும் ஆன் செய்யவே மாட்டாங்க......”. கடைசி வரைக்கும் அந்த மோட்டரை அதன் மூலம் உற்பத்தி செய்த மின் சக்க்தியில் இயக்காமலேயே படிப்பை முடித்து வெளிவந்தாகிவிட்டது.
ஆனாலும் மனதில் அப்படி செய்தால் என்ன? மற்றவர்கள் கூறுவதைப் போல இழப்பை (ஆற்றல் மாற்றத்தினால் ஏற்படும் இழப்பை) உற்பத்தியில் ஈடு செய்து (அதிகம் உற்பத்தி செய்து) முயல எண்ணம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது.
இவரின் முயற்ச்சியை பார்க்கும் போது சாத்தியம் சற்று தூரத்தில் தான் என்ற எண்ணம் தோண்றுகிறது.
பாரதி அவர்களின் முயற்ச்சிக்கும் சிரத்தைக்கும் வாழ்த்துக்கள். அடுத்த முறை தேனி சென்றால் அவரை சந்திக்கிறேன்.
வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் நம் தலைமுறை
----------------------------------
அன்புடன்
இ.த.செ
****இந்த இயந்திரம் உண்மையானதா... இல்லையா என்று கண்டறிய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்ற நான், நினைத்ததை கண்டறிய முடியவில்லை என்பது உண்மையே. ஆனால் அப்படி யோசிப்பதை விட... இந்த மனிதரின் கண்டுபிடிப்பு உண்மையானதாக வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே மனதில் கடைசியில் மேலோங்கி நின்றது. *****
எண்ணங்கள் நல்லனவாக இருப்பது நன்றே.
நடைமுறையில் மெய்ப்பிக்காதவரை நாம் என்ன சொல்ல முடியும்?
மெய்ப்பித்துக்காட்டுமாறு அவருக்கு ஊக்கம் தரலாம்.
நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்கும் ஈடுபாட்டுக்கும் நன்றி.
கருத்துகளுக்கு நன்றி கீழைநாடன், இ.த.செ, குணமதி.
பாரதிஜி
இரண்டாண்டுகளுக்குப்பின் இந்த தங்களது நேர்காணல் படித்தேன். வியக்க வைக்கிறது வரதராஜன் அவர்களின் சோதனை. அதைவிட வியக்க வைக்கிறது தங்களது பதிப்பு.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் ஒரு லட்சம் மெகாவாட்டுகள் தயாரிக்க அடுத்த 5 ஆண்டுகளில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன, சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்கள் செலவில்.
திருச்சியில் இருக்கும் பிஎச்இல் ஏன் இதைப் பற்றி எந்த ஆர்வமும் காட்டவில்லை? சூப்பர் க்ரிடிகல் எனப்படும் புதிய தொழில் நுட்பத்தை இந்த ஆண்டு முதல் பெரும் பொருட்செலவில் பயன்படுத்தத் துவங்கி இருக்கிறார்கள். என் டி பி சியும் இந்த கண்டுபிடிப்பை ஒரு பொருட்டாக எண்ணவில்லையே? ஏன்?
===கரிகாலன்
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks