Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 35

Thread: வளைந்தாலும் வில்லாயிரு!!!!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    வளைந்தாலும் வில்லாயிரு!!!!

    பரபரப்பில்லாத ஞாயிற்றுக்கிழமை காலை. சிற்றுண்டியை முடித்துக்கொண்டு ஜன்னலோரம் அமர்ந்து சாலையை நோக்கிக்கொண்டிருந்தார் சுந்தரமூர்த்தி. பதினேழு, பதினெட்டு வயதுடைய இளைஞன் ஒருவன் அவரது வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தான். உடலை வளைத்து கைகளால் முழங்கால்களைத் தாங்கித் தாங்கி சிரமப்பட்டு வந்துகொண்டிருந்தான்.

    சிறிது நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. கதவைத் திறந்த சுந்தரமூர்த்தி அந்த இளைஞனின் கைகளில் வைத்திருந்த காகிதத்தையும், முகத்தில் வழிந்த பரிதாபத்தையும் பார்த்ததுமே தெரிந்துகொண்டார் அவனது வரவின் நோக்கத்தை.

    ”சார்....”

    அவன் தொடங்குமுன்னமே...

    “ இல்லப்பா என்னால உனக்கு எந்த உதவியும் செய்யமுடியாது. தயவு செய்து எதையும் என்கிட்ட எதிர்பார்க்காதே..”

    என்று அவர் சொன்னதும் அந்த இளைஞன்,

    ” என்ன சார் இது வீடு, காருன்னு வசதியா வாழற நீங்களே உதவி செய்யமுடியாதுன்னு சொன்னா எப்படி சார். அதுவும் என்னோட இந்த நிலைமையைப் பாத்தும்.......” என்று தன் வளைந்து சிறுத்திருந்தக் காலகளைக் காட்டியபடி கேட்டதும்,

    “உன்னோட இந்த நிலையைப் பாத்துதாம்ப்பா உதவமுடியாதுன்னு சொல்றேன். இதே வயசுல நானும் உன்னைப் போல அடுத்தவங்க உதவியில வாழ நினைச்சிருந்தா இன்னைக்கும் நான் உன்னை மாதிரியே வீட்டுக் கதவுகளைத் தட்டிக்கிட்டிருந்திருப்பேன். ஆனா உழைச்சு முன்னேறனுன்னு நினைச்சுக் கஷ்டப்பட்டேன். இன்னைக்கு இந்த நிலைமையில இருக்கேன்.” சொன்னவரைப் பார்த்து,

    “சார் நான் இப்படி இருக்கும்போது எப்படி சார் என்னால...” அவனை மேலே பேச விடாமல்,

    “முடியும்ப்பா...முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமில்ல.”

    என்று சொல்லிவிட்டு அதுவரை நிற்பதற்கு உதவியாய் பிடித்துக்கொண்டிருந்தக் கதவிலிருந்து தன் கைகளை எடுத்து, வளைந்து, தன் முழங்கால்களைப் பிடித்துக்கொண்டு, அந்த இளைஞனைவிட சிரமமாய் விந்தலுடன் நடந்து உள்ளே போன சுந்தரமூர்த்தியைப் பார்த்து....அந்த இளைஞன் விக்கித்தான்.

    கையிலிருந்த உதவிக்கேட்கும் காகிதத்தைக் கிழித்தெறிந்துவிட்டு திரும்ப நடந்தவனின் நடையில் முன்னைவிட அதிக உறுதி தெரிந்தது.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    அருமையான குறுங்கதை. நம்பிக்கை என்னும் விளக்கால் தான் வாழ்கை ஒளிரும்.

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அழகான கதை சிவாண்ணா.....!

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அம்பாய் மனதை தைக்கும் கதை!

    பாராட்டு சிவா.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    தவழ்ந்தாலும் தளர்வில்லை என்றத் தங்களின் கவிதையின் இன்னொரு பார்வை சிறுகதை வடிவத்தில் வளைந்தாலும் வில்லாயிரு..... முதலில் என்னைக் கவர்ந்தது தலைப்பு தான்.

    கதை.... நறுக்கென்று தைக்கிறது...

    வாழ்த்துக்கள் அண்ணா.....

    ஆமா அடுத்த தொடர்கதை எப்போ?
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பாராட்டிய தென்றல், மதி, பாரதி மற்றும் செல்வாவுக்கு அன்பான நன்றிகள்.

    ( தொடர் குறித்து இன்னும் சிந்திக்கவில்லை செல்வா.)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    மனதை தொடும் நம்பிக்கை கதை!
    இது கதையல்ல நிஜம்
    இன்னும் தொடருங்கள் சிவா.ஜி
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஊக்கம் தரும் உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி நாரதர். நிச்சயம் முயலுவேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    நல்ல கருத்துள்ள கதை. கடின உழைப்பிற்கு ஈடாக வேறு எதுவும் இல்லை என்ற பாடம் புகட்டும் கதை. வாழ்த்துக்கள்.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பாராட்டுக்கு மிக்க நன்றி மதுரைவீரன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    சிறந்த கதை. பாராட்டுக்கள்.
    அதிலும் உழைப்பால் மட்டுமே சிகரத்தை அடைந்தவன் தன்னையொற்ற இன்னொருவனுக்கு தன்னிலமைக்கான இரகசியத்தை உரைத்திருந்தமை வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக்க நன்றி விராடன். தன்னையொத்த ஒருவரின் வார்த்தைக்கு அவரது வாழ்க்கையே அத்தாட்சியாய் இருப்பதைக் காணும் அந்த இளைஞனைப்போல இருப்பவர்கள் சற்றேனும் சிந்திப்பார்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •