ஒரு பெண் முதன்முறை காதல் வயப்படும் சூழலை அடிப்படையாகக்கொண்டு புதியதொரு தமிழ் படத்தில் பாடல் எழுத வாய்ப்புக்கிடைத்தது..
இது பாடலாகி படம் திரைக்கு வருமா..என்பது நிச்சயமற்றது..ஆயினும் எனது முயற்சி வெற்றிபெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..
வரிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்..???
பல்லவி
இதயமோ முதன்முறை விழுகிறதே...
என் உயிரிலே உன் திருமுகம் வழிகிறதே..
இரவுகள் தனிமையில் தவிக்கிறதே
பெண் ரகசியம் என்னவென்று புரிகிறதே..
கண்மூடிக்கிடந்தாலும உன் விம்பம் மறைவதில்லை
போ என்று சொல்லி வா என்று அழைத்தேனே
சிரிக்கிறேன் சிரிக்கிறேன்
உன்னை எண்ணி சிலிர்க்கிறேன்
தனிக்கிறேன் தவிக்கிறேன்
வெட்கப்பட்டு சிவக்கிறேன்
சரணம்-01
இரவின் நிழலில்
உன் விரலைப்பற்றிக்கொண்டு
உனக்குள் வாழ்ந்திட ஆசை
விடியும் வரையில்
உன் வதனம் பார்த்துக்கொண்டு
உலகம் மறந்திட ஆசை
இன்னும் என்ன எந்தன் ஆடவா...
என் பெண்மையை நீ ஆளவா..
காதல் கனவுகள் செய்யும் லீலைகள்
பிடிக்குதே ரொம்ப பிடிக்குதே
நெஞ்சுக்குள்ளே காதல் வந்து கத்திச்சண்டை போடுதே.....
சரணம்-02
இடைவிடாமல்
கொட்டும் மழைபோல அன்பை
எனக்குள் பொழிந்திட வாடா...
அருகில் வந்து
நூறு நூறு கவிதைகள்
இதழில் எழுதிட வாடா...
என்னைக்கண்டேன் உந்தன் பார்வையில்
தத்தளித்தேன் நான் போர்வையில்
கூவும் குயிலென காதல் உரைத்திட
துடிக்குதே உள்ளம் துடிக்குதே
கண்களுக்குள் உன்னை வைத்து காதல் பூட்டு பூட்டினேன்....
சரணம்-03
கனவில் உளற
எனக்கிங்கு கற்றுத்தந்து
உறக்கம் பறித்தவன் நீதான்..
மனதில் விரியும்
விண்ணை முட்டும் சிறகுகள்
முளைக்க வைத்தவனும் நீதான்..
திசையெல்லாம் உன்னைத்தேடினேன்
காணவில்லை நான் வாடினேன்.
பூக்கும் பூவிடம் ஜன்னல் நிலவிடம்
புலம்பினேன் சொல்லிப்புலம்பினேன்
உன்னுயிரில் என்று எந்தன் உயிர் வந்து சேருமோ...?
Bookmarks