இன்று கண்ட வலைப்பூவில் இருந்த சிலேடை..! நண்பர்களின் பார்வைக்காக இங்கு தரப்படுகிறது.
-------------------------------------------------------------
கண்ணதாசன் சொன்ன சிலேடை நகைச் சுவை ஒன்று நினைவுக்கு வருகிறது.
உலகெங்கிலுமுள்ள மடங்களின் தலைவர்களின் மாநாடு.
எல்லோரும் வந்து விட்டனர்.
கடைசியாக ஒருவர் வருகிறார்.
அவரது சொந்த ஊர் "கடைமடை."
மடத்தின் தலைவர் வரவேற்கிறார்.
"வாரும் கடைமடையரே!"
(கடைமடை என்கிற ஊரைச் சேர்ந்தவரே வாரும்/ இன்னொரு விதத்தில் கடைசியாய் வந்த மடையரே வாரும், எனவும் அர்தத்ம்)
இப்போது வந்தவர் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, மிகப் பணிவாக சொன்ன பதிலைப் பாருங்கள்.
"வணக்கம்! மடத் தலைவரே!"
இதறகு நான் அர்த்தம் சொல்ல வேண்டியதில்லை.
:-)
-----------------------------------------------------------
நன்றி: நேர்மறைச்சிந்தனைகளின் கிரியா ஊக்கி - வலைப்பூ
Bookmarks