Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: எழுப்பாதீர்கள்!!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12

    எழுப்பாதீர்கள்!!!

    அவனைத் தொந்தரவு செய்யாதீர்கள்
    சற்று உறங்கட்டும்

    ஆடிக் களைத்த உடல்
    அயர்ந்திருக்க
    கூடிப் பேசிய கதைகள் கனவில்

    புரண்டு படுக்கும் அவனிதழ்
    புன்முறுவல்கள்
    நல்ல கனவுதான் எனக்
    குறிப்பால் காட்டுகின்றன

    கொஞ்சம் பொறுமையும்
    கொஞ்சம் கனிவும் கொண்டு
    காத்திருப்போம்
    விழித்ததும்
    அவன் சொல்லப் போகும்
    சொல்லும் கதைகளுக்காக

    அவனைத் தொந்தரவு செய்யாதீர்கள்
    சற்று உறங்கட்டும்
    என் மனதில்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #2
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2008
    Posts
    92
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    35
    Uploads
    0
    அருமையான வரிகள்
    நண்பரே. வாழ்த்துக்கள்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    அண்ணா, ரொம்ப நாளுக்கு பிறகு உங்க கவிதை படிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.நல்ல கனவு என்றாலே ஒரு மாதிரி சந்தோஷம் தானே. பாராட்டுகள் அண்ணா.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    ஒவ்வொருமுறையும் இப்படி நினைவுகளைத் தீண்டித்தான் அழ வைக்கிறார்கள்...

    ஒவ்வொருவர் மனதினுள்ளும் அவனோ அவளோ உறங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    பாராட்டுக்கள் திரு.தாமரை.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    அவன் சொல்லப் போகும்
    சொல்லும் கதைகளுக்காக
    இருமுறை வருகிறதே தாமரை...

    கவிதை... அருமை.. பாராட்ட வார்த்தைகள் இல்லை... அருமையாக உணர்ந்து , அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்...
    அனிருத்தானே கவியின் நாயகன்...????
    கனவெது.. நிஜமெது...
    மாட்ரிக்ஸ் படத்தில் வரும் டயலாக் " நீ கனவில் இருக்கிறாய், அதில் இருந்து நீ எழும்பவேயில்லை, அப்போது எது கவவு, எது நிஜம் என்று உனக்கு எப்படி தெரியும்"
    மெல்லிய புன்னகை கனவு நலமே...
    அதுவே கொடியதாய் இருந்தால், அப்போது எழும்ப முடியாமல் போனால்....
    கடவுள் கொடுத்த நல்வரம் அது... காலையில் கண்விழிப்பது...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    இருமுறை வருகிறதே தாமரை...

    கவிதை... அருமை.. பாராட்ட வார்த்தைகள் இல்லை... அருமையாக உணர்ந்து , அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்...
    அனிருத்தானே கவியின் நாயகன்...????
    கனவெது.. நிஜமெது...
    மாட்ரிக்ஸ் படத்தில் வரும் டயலாக் " நீ கனவில் இருக்கிறாய், அதில் இருந்து நீ எழும்பவேயில்லை, அப்போது எது கவவு, எது நிஜம் என்று உனக்கு எப்படி தெரியும்"
    மெல்லிய புன்னகை கனவு நலமே...
    அதுவே கொடியதாய் இருந்தால், அப்போது எழும்ப முடியாமல் போனால்....
    கடவுள் கொடுத்த நல்வரம் அது... காலையில் கண்விழிப்பது...
    என் மனதில் உறங்கிக் கொண்டு என்பது ஒரு சின்னப் பொறியைக் கிளப்பவில்லையோ?

    கவிதை எழுதி நாளாயிற்றே எங்கேப் போனான் என்னுள் இருந்த அந்தக் கவிஞன் என யோசித்தேன்..

    எழுதி எழுதி களைத்து உறங்குகின்றானோ என எண்ணம் வர..

    முளைத்த கவிதை இது..

    கதைகள் சொல்லப்படுகின்றன்.

    சொல்லப்படுகின்ற கதைகளில் சில மட்டுமே எதையாவது சொல்கின்றன..

    அவைதான் சொல்லப் போகும் சில சொல்லும் கதைகள்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #7
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    17 Jun 2008
    Location
    bangalore
    Posts
    39
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    படித்தவுடன், கண்ணதாசனின் "அவனை உறங்கவிடுங்கள்" கவிதை ஞாபகம் வருகிறது...
    அவர் எழுதிய கவிதை நேரடியாக ஒரு குழந்தை வளர்ந்தவுடன் படும் துன்பங்களை சொல்லும்.
    உங்கள் கவிதை உங்கள் கவிதை சிந்தனையைப்பற்றி கூறுகின்றது.
    நல்ல கவிதை..

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    என் மனதில் உறங்கிக் கொண்டு என்பது ஒரு சின்னப் பொறியைக் கிளப்பவில்லையோ?
    தாமரையை கவிஞனாக பார்க்காமல் நண்பனாக பார்ப்பதால், என் சிந்தனையின் திசையும் அந்த வழியே... mental blocks...

    ஆனால் அனிருத் உறங்குவதை ரசிக்கும் தந்தையாய் உங்களை அந்த கவிதையில் ரசிக்கமுடிந்தது வியப்பே...!!!!
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    உள்வாங்கும் ஒரு கருவினை (கவிதையாய்) பிரசவிக்க காலஅவகாசம் அவசியமே...அத்தியாவசியமே., உள்ளே உறங்கிக் கொண்டிருப்பவனும் இயங்கிக் கொண்டிருக்கிறான் உன் வழியே...

    பாராட்டுக்கள் நண்பரே... தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்..
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    என்னுள்ளும் ஒருவன் உறங்குகிறானென்பதை உணர வைத்த கவிதை...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உறக்கமென்பது -
    களைப்பைக் களைய
    புத்துணர்வடைய -
    என்பது வரைக்கும் என்றால் ---

    உறக்கம் மிக மிக அவசியமே..

    நெடுநீர், மடி சேர்ந்த துயில் என்றால்
    சிறிய தெளிவிப்பு அவசரமே!

    உறக்கத்தின் உள்ளேயும் இருப்பை உணர்த்த
    சலனித்த கவிக்கு வாழ்த்துகள்..

    சலனமிலா உறக்கம் சாக்காடு என்பார்கள்..

    வாழ்த்துகள் தாமரை..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83

    Cool

    Quote Originally Posted by தாமரை View Post
    ஆடிக் களைத்த உடல்
    அயர்ந்திருக்க
    கூடிப் பேசிய கதைகள் கனவில்
    ஆடிய களைப்பா...? : :O
    கனவிலும் கதையளப்பா..?? :P

    ஆடி ஆறாச்சு...!!!!
    ஆறும் ஆடியாச்சு...!!!!

    சுப்ரபாதம் பாடித்தான்
    எழுப்பியது ......... எழுப்பத்தான்... !!!!



    ஏந்திரி அஞ்சலி ஏந்திரி.... !!!!!!!
    Last edited by சாம்பவி; 18-10-2008 at 10:45 AM.
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •