அன்பு நண்பர்களே,
நம் மன்றத்தின் மென்பொருளில் அவ்வபோது நல்மாற்றங்களை
நம் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.
பதிவேற்ற, பயனாளும் வசதிகள், மன்ற மேலாண்மை - இவற்றைச்
செம்மைப்படுத்த நாளும் ஆலோசித்து, தக்க மாற்றங்கள்/ ஏற்றங்களை
செயல்படுத்தும் இப்பணியில் ----
தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் சில புதியன --
http://www.tamilmantram.com/vb/announcement.php?f=39
நம் தமிழ்மன்ற விதிகளை மீறிப் பதிவுகள் வரும்போது,
சக உறுப்பினர்கள், நிர்வாகக் குழுவினரால் நட்புடன் எடுத்துக்கூறுவதே
இங்கே நாம் காணும் முதல் செயல்.
அதை மீறியும் தவறுகள்/தப்புகள் நிகழும்போது, நிர்வாகக்குழுவினர்
அப்பதிவருக்கு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்குவர்.
இந்த எச்சரிக்கைப் புள்ளிகள் கொடுக்கும் முறையில் புதிய மாறுதல்கள் செய்யப்பட்டு, உடன் நடைமுறைக்கு வந்துள்ளது.
முன்பு எச்சரிக்கைப் புள்ளிகள் அளவு ஒவ்வொன்றாக கூடியது. இப்பொழுது ஒரு எச்சரிக்கைக்கு 5 புள்ளிகள் என்று திருத்தப்பட்டுள்ளது.
ஒரு முறை அந்த புள்ளிகள் பெற்றால், தண்டனை கிடையாது. இரண்டாம் முறை எச்சரிக்கைப் புள்ளிகள் பெறும்போதும் தண்டனை கிடையாது. (மொத்தம் 10 புள்ளிகள்).
மூன்றாவது முறை (அதாவது 15 புள்ளிகள்) பெறும்போது ஒருவர் 5 நாட்களுக்கு "மென் தடை" (Soft Ban) செய்யப்படுவார்.
20 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை.
25 புள்ளிகள் பெற்றால் 2 வாரங்கள் மென் தடை.
50 புள்ளிகள் பெற்றால் 1 மாதம் மென் தடை.
இந்த "மென் தடை" என்னும் பதம், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு திட்டம்.
சில சமயங்களில் சிலரை நமது மன்றத்தை பார்க்க முடியாமல் நிரந்தரமாக தடை செய்வதனால், தவறான செய்திகள் பரப்பப் படுகின்றன..
நம் மன்றத்தைத தவறாக புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது..
தொடர்புகள் இல்லையானால், புரிந்துணர்வும் இல்லாது போகும்.
. அதனால், அவர்களை சில காலம் பங்கேற்க மட்டும் அனுமதிக்காமல் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு திட்டம். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், ''ரேட்டிங்'' உரிமையும் உண்டு. பண்பட்டவர் அனுமதி கிடையாது
''தண்டனையும்'' மென்மையாக இருக்க, தவறு செய்தவர்கள் திருத்திக்கொண்டு, மீண்டும் கலந்துலவச் செய்யும் நோக்கமுள்ள திட்டம்.
செவிலி தலைவியை மல்லிகைப்பந்து சுற்றிய கம்பால் அடிக்கும் பாவனை சொல்லும் சங்கப்பாடலின் சாயல் உள்ள திட்டம்.
யாரையும் விலக்கவேண்டும் என்பதல்ல மன்றத்தின் எண்ணவோட்டம்.
எல்லாரையும் அரவணைத்து, ஆக்கபூர்வ சிந்தனைகள், படைப்புகள் நம் உடைமைகளாக
நாம் அனைவரும் இணைந்து இணையக் கடலில் தமிழ்ப்படகில் பயணிக்கவேண்டும் என்பதே
இம்மன்றத்தின் தலையாய நோக்கம்.
அனைவரின் புரிதல், ஒத்துழைப்பை வேண்டுகிறோம். நன்றி!
-- தமிழ்மன்றம்
Bookmarks