ஏதோவொரு தருணத்தில் என்னை
நானே ஏமாற்றிக் கொள்கிறேன்..!!
இல்லையெனில்-என்னிடம் நானே
ஏமாந்து போகிறேன்..!!
ஏய்பவனைவிட ஏமாறுபவனே
குற்றவாளி எனில் எனக்கு
கிடைக்கும் இரட்டை தண்டணை..!!
என் நீதிமன்றத்தில்
நீதிபதியும் நானே..
குற்றவாளியும் நானே..!!
வழக்கை விசாரிக்கவென சிலர்
சாட்சியாக நின்றனர் பலர்..!!
என் மன்றத்தின் ஒவ்வொரு
அங்கமும் என் பிம்பமே - இதில்
நிழல் எது..? நிஜம் எது..?
நித்தம் எழும் கேள்வியிது..!!
குழப்பத்தினூடே முடிந்தது
வழக்கின் விசாரணை..!!
தீர்ப்பு நாளில் எனக்கு
நானே எழுதிய தீர்ப்பில்
எனக்கே உடன்பாடில்லை..!!
இருந்தும் ஏற்றுக்கொண்டேன்..
நிறம் மாறும் நிஜங்களையும்
நிலை மாறும் மனிதர்களையும்
குற்றவாளிக்கே உரிய குறுகுறுப்புடன்..!!
Bookmarks