Results 1 to 12 of 12

Thread: நிறம் மாறும் நிஜங்கள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1

    நிறம் மாறும் நிஜங்கள்

    ஏதோவொரு தருணத்தில் என்னை
    நானே ஏமாற்றிக் கொள்கிறேன்..!!
    இல்லையெனில்-என்னிடம் நானே
    ஏமாந்து போகிறேன்..!!


    ஏய்பவனைவிட ஏமாறுபவனே
    குற்றவாளி எனில் எனக்கு
    கிடைக்கும் இரட்டை தண்டணை..!!


    என் நீதிமன்றத்தில்
    நீதிபதியும் நானே..
    குற்றவாளியும் நானே..!!


    வழக்கை விசாரிக்கவென சிலர்
    சாட்சியாக நின்றனர் பலர்..!!


    என் மன்றத்தின் ஒவ்வொரு
    அங்கமும் என் பிம்பமே - இதில்
    நிழல் எது..? நிஜம் எது..?
    நித்தம் எழும் கேள்வியிது..!!


    குழப்பத்தினூடே முடிந்தது
    வழக்கின் விசாரணை..!!


    தீர்ப்பு நாளில் எனக்கு
    நானே எழுதிய தீர்ப்பில்
    எனக்கே உடன்பாடில்லை..!!


    இருந்தும் ஏற்றுக்கொண்டேன்..
    நிறம் மாறும் நிஜங்களையும்
    நிலை மாறும் மனிதர்களையும்
    குற்றவாளிக்கே உரிய குறுகுறுப்புடன்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #2
    புதியவர் subas's Avatar
    Join Date
    07 Aug 2008
    Location
    Chennai
    Posts
    22
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0
    உண்மை....!! உண்மை......!! ''ஏதோவொரு தருணத்தில் என்னை
    நானே ஏமாற்றிக் கொள்கிறேன்..!!
    இல்லையெனில்-என்னிடம் நானே
    ஏமாந்து போகிறேன்..!! ''
    வரிகளில் என்னைசொல்வதாகவே உணர்கிறேன்!!.அனுதாபமும் வியப்பும் கலந்த விஷயம் தான்!,ஆனாலும் உண்மை!! - நட்பும் நம்பிக்கையுமாய் சுபாஷ்-

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஏமாறுபவன்தான் குற்றவாளியென்றால் நாம் அனைவருமே அந்த இனம்தான். சில நேரம் தெரிந்து, பல நேரங்களில் தெரியாமல்.

    நிஜங்கள் நிறம் மாறுவதில்லை.....மாற்றப்படுகின்றன, பொருத்தமான பொய் அலங்காரத்தோடு. அதையும் ஏற்றுக்கொண்டு குறுகுறுப்போடு வாழத்தான் வேண்டியிருக்கிறது. அப்படியே வாழ்ந்து முடிப்போம். வேறென்ன செய்வது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.


    நல்ல கருத்து சொல்லும் கவிதைக்கு வாழ்த்துகள் சுபி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    இந்த பொய்முகத்தோடு வாழும் வாழ்கையில் நானும் ஒருவன்..
    வாழ்த்துக்கள் சுபி.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    நிறம் மாறும் நிஜங்கள்..

    எந்த நிறம் நிஜமாம்?

    முன்பிருந்ததா?
    இன்று வந்ததா?
    நாளை வருவதா?


    நேற்று அது நிஜம்..
    இன்று இது நிஜம்..
    நாளை எது நிஜம்?

    எதுவும் கடந்துபோகும்!
    இதுவும்.....



    ------------------------
    ஆழமான உள்மன விசாரணைக்குத் தன்னை ஆட்படுத்திய அந்த..ஒருவனின்
    அனைத்து பக்கத்துக்கும் பிரதிநிதியாய் அவனின் பல பிரதிகள்..
    கூடுதலாய் விலகிப் பார்த்துப் பதிவெடுக்க இன்னொரு சிறப்புப் பிரதி!

    அசாத்தியத்தைச் சாத்தியமாக்கிய கவிதை!

    வாழ்த்துகள் சுகந்தா!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    வாழ்த்தி பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றி..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post

    ஏதோவொரு தருணத்தில் என்னை
    நானே ஏமாற்றிக் கொள்கிறேன்..!!
    இல்லையெனில்-என்னிடம் நானே
    ஏமாந்து போகிறேன்..!!

    [
    COLOR]
    யதாரத்தம் நிரம்பி வழியும் அழகிய கவிதை நண்பரே..

    வெகுவாக ரசிக்கத்தக்க இந்தக்கவிதையின் ஆரம்ப வரிகள் அற்புதமான சிந்தனை..

    வாழ்த்துக்கள் சுகந்தப்ரீதன்..
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  8. #8
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் சுகந்தா.. நம்மை சுற்றி நிறைய
    அழுக்குகள்.. முடிந்தவரை நாம் சுத்தமாகத்தான் இருக்க பார்க்கிறோம்..!
    நமக்குள் இருக்கும் கடவுளையும் மிருகத்தையும்
    வெளிகொணர்வது இந்த உலகமே.. என நான் சொல்வேன்...!
    அற்புதமான ஒரு கவி படைத்திருக்கிறாய் சுகு.., பாராட்டுக்கள் பல...
    வர வர உன் எழுத்துக்களில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது...!
    சீக்கிரம் டாக்டர் பட்டம் வாங்கி விடுவாய் போல தெரிகிறதே...!!! ஹீ.... ஹீ... ஹீ....
    துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
    மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!

  9. #9
    இளையவர் பண்பட்டவர் பாபு's Avatar
    Join Date
    03 Jan 2008
    Location
    Hong Kong
    Posts
    79
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    ஒவ்வொருவனும் உண்மையும் பொய்யும் கலந்தவன் தான். ஒவ்வொருவனும் பல மனிதர்களை கொண்ட ஒரு கலப்பினம் தான்.

    அருமையான கவிதை நண்பரே !!
    குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
    பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
    இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
    மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே !

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by shibly591 View Post
    யதாரத்தம் நிரம்பி வழியும் அழகிய கவிதை நண்பரே..
    வெகுவாக ரசிக்கத்தக்க இந்தக்கவிதையின் ஆரம்ப வரிகள் அற்புதமான சிந்தனை..
    வாழ்த்துக்கள் சுகந்தப்ரீதன்..
    வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே..!!
    Quote Originally Posted by வசீகரன் View Post
    ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் சுகந்தா.. நம்மை சுற்றி நிறைய
    அழுக்குகள்.. முடிந்தவரை நாம் சுத்தமாகத்தான் இருக்க பார்க்கிறோம்..!
    நமக்குள் இருக்கும் கடவுளையும் மிருகத்தையும்
    வெளிகொணர்வது இந்த உலகமே.. என நான் சொல்வேன்...!
    வசீ.. இதைத்தான் நட்பென்பதோ... நான் சொல்ல வந்ததும் அதுதான்டா நண்பா..!!
    Quote Originally Posted by பாபு View Post
    ஒவ்வொருவனும் உண்மையும் பொய்யும் கலந்தவன் தான். ஒவ்வொருவனும் பல மனிதர்களை கொண்ட ஒரு கலப்பினம் தான். அருமையான கவிதை நண்பரே !!
    பாராட்டியமைக்கு மிக்க நன்றி பாபு..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  11. #11
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    வித்தியாசமாக இருக்கிறது உங்கள் கவிதை.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by பிச்சி View Post
    வித்தியாசமாக இருக்கிறது உங்கள் கவிதை.
    பின்னூட்டத்திற்க்கு நன்றி..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •