நானும் நீயும் இணையாய்
இணைந்தெடுத்த நிழற்படங்கள்
எல்லாம் நிஜமானவைகளாய்..
உயிரில்லா அந்த உருவப்படங்கள்
உயிரோட்டத்தை உணர்த்தும்
உன்னத உணர்வை இன்றுவரை
இரவு உணவருந்துகையில்
அசைபோடும் அழகு.. அடடா அருமை!!
கடுஞ்சொல் என்ற கசப்பை
நம் அகராதியிலிருந்து
நீக்கிய நாள்- நீண்ட பயணம்
தொடங்கிய அந்த நிம்மதி பெருநாள்..
மகிழ்ந்த மணநாள்.. இன்று நினைத்தாலும்
இனிக்கிறது..
கணவன் - மனைவியென்ற
ஒரு பட்டம்தான் கொடுக்கப்பட்டது..
தோழன் - தோழி..
காதலன் - காதலி.. என பல பட்டங்களை
பலரால் சொல்லவைத்த பெருமை
யாரைச்சேரும்?!!
இத்தனை நாளும் இணைபிரியாதிருந்தோம்
இறப்பிலும் இணையத்தான் போகிறோம்..
உடலைவிட்டு உயிர் போனபின்
இருந்தென்ன பயன்?!!..
ஆமாம் நம்மில்
உடல் யார்...
உயிர் யார்??!!
Bookmarks