மீண்டும் 87 இற்கு கொண்டு சென்ற மறத்தமிழனுக்கு நன்றி
எனது இந்த முதல்பதிவினுாடாக திலீபனின் தியாகத்ததுக்கு வணக்கம் தெரிவிக்கின்றேன்
மீண்டும் 87 இற்கு கொண்டு சென்ற மறத்தமிழனுக்கு நன்றி
எனது இந்த முதல்பதிவினுாடாக திலீபனின் தியாகத்ததுக்கு வணக்கம் தெரிவிக்கின்றேன்
என்றென்றும் நட்புடன்
உங்கள் தீபன்.
தீலீபனின் தியாகப்பயனத்தினை காணொளியில் காண இங்கே அழுத்துங்கள்
http://www.tamilntt.com/
தியாகப்பயணத்தில் என்னோடு இணைந்து வந்து, கருத்துக்களை பரிமாறிக்கொண்ட அனைவருக்கும் வணக்கமும் நன்றியும். ஆனால் குறிப்பிட்ட ஒரு சிலரைத்தவிர மற்றோர் ஒதுங்கிக்கொண்டனர். இது முன்னர் வெளிவந்த நூலின் மறுபதிப்புத்தான் இங்கே. இது படித்ததில் பிடித்தது பகுதியில்தான் உள்ளது. இதில் வருகை தந்து கருத்துக்களை பதியாமல் விட்டது ஏன் என்பது அவர்களுக்கே வெளிச்சம். எல்லோரும் அந்த புனித வீரனை அகத்திருத்தி அகவணக்கம் செய்வார்கள் என்பது திண்ணம். ஏனெனில் அவர்கள் எல்லோரும் மான, மறத்தமிழர். காயங்களை மறக்கமாட்டார்கள்.
நன்றி கம்பன். நானும் அதை கவனித்தேன். பதிய முனையும் போது உங்கள் பதிவை கண்டேன். நன்றி. திலீபன் பற்றி அதிகம் அறியாதவர்கள், தெரியாதவர்கள் இந்த தொடுப்பை பார்க்க வேண்டும். திலீபனின் திடம், தீர்க்கதரிசனம் என்பவற்றைப் பார்க்கலாம். நன்றி அன்பான தமிழ் உறவுகளே.
மறத்தமிழன்
_____________________________________
ஆண்ட தமிழினம் மீண்டுமொருமுறை
ஆள நினைப்பதில் என்ன பிழை...!
www.enrenrumthamil.blogspot.com
Last edited by ஓவியா; 28-09-2008 at 04:17 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
"உலகில் மனித தர்மமே செத்துவிட்டதா? காந்தி இறந்ததற்காகக் கண்ணீர் வடிக்கும் இந்த உலகம், காந்தீயத்தின் காலடியில் சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்ற மெழுகுவர்த்தியைக் காணவில்லையா?
அல்லது கண்டும் காணாமலும் போய்விட்டதா…?"
------------------------------
திலீபன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.
'வாஞ்சி அண்ணை! எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பலவந்தமாகவோ, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது. அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறக்குமட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது. சுயநினைவோடு என்றாலும் சரி.சுய நினைவில்லை என்றாலும் சரி. இதுக்குச் சம்பதிக்கிறனெண்டு சத்தியம் செய்து தாருங்கோ'
என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் அவர்.
------------------------------------
திலீபனின் தியாகப் பயணத்தில் 12 நாட்கள் அவரின் கூட இருந்து, அவரின் போராட்டத்தில் பங்குபற்றி, வேதனையின் எல்லைக்கே சென்றுவந்த எனக்கு, இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவையோ நானறியேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! திலீபனின் உயிர் அநியாயமாகப் போகவில்லை அதற்குப் பதிலாக அவர் ஒரு படிப்பினையை எமக்குக் கற்பித்து விட்டுப் போயுள்ளார்? அகிம்சைப் போராட்டம் என்பது மனித நேயமும், உயர் பண்பும் மிக்கவர்களிடம்தான் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆயுதங்கள் தான் எமது தமிழீழப் போராட்டத்தைப் பொறுத்தவரை சரியான பதில் தரமுடியும் என்பதையும், திலீபன் மறைமுகமாக உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் என்பதே எமது கணிப்பு. அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக!
-------------------------------------------
முகமூடித் திரைக்குள் அரக்க முகங்கள். இன்றும் எமக்காய்க் களத்தில் புயல்கள். நாம் மட்டும்....
---------
ஒரு தியாகதீபத்தை அறிய உதவிய மறத்தமிழன் அண்ணாவுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..!!
இறுதிநாள் பதிவில் நீங்களே பாருங்கள்.. சத்தியவேள்வியை சந்தேகித்தவர்கள் ஈழத்திலும் இருந்திருக்கிறார்கள் என்று அறியமுடிகிறது..!! அதேநிலைதான் எங்களுக்கும்..ஈழத்தமிழர்களுக்கு இரங்குபவர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்பதைப்போல சித்தரிப்பவர்களும் இருக்கிறார்கள்..!! மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைப் போலத்தான் தமிழக மக்களின்நிலை உள்ளது..!!அதனால்தான் அமைதி காக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது மன்றத்தில்..!! மொத்தத்தில் தமிழக மக்கள் கண்ணீரை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டனரே ஒழிய.. அவர்கள் கண்ணீரே சிந்தவில்லை என்றெல்லாம் அர்த்தமல்ல அண்ணா..!!
பேசும் வார்த்தைப்போல மௌனம் புரியாது என்பது உங்களுக்கு தெரியாததா அண்ணா..??
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
தியாக தீபத்தின் வெளிச்சத்தை பார்த்தவர்களில் நானும் ஒருவன். அவனுக்கு செலுத்த வேண்டிய மரியாதை மௌனாஞ்சலி.. அதைச் செய்தேன்.. பதிவிடாதவர்களும் அப்படித்தான்..
பகிர்ந்தமைக்கு நன்றி மறத்தமிழன்..
அஹிம்சையோ, போராட்டமோ..
உண்மையான பிறர்நலம், இன உயர்வுக்காக நிகழும்போது
அது கல்வெட்டாகிறது..
சந்ததி மனதில் காவியமாகிறது!
திலீபன் என்ற தியாகச்சுடரின் ஒளி -
இங்கு கனன்ற பதிவுகளில் இன்னும் இருக்கிறது பத்திரமாக!
என் நினைவாஞ்சலிகளையும் சமர்ப்பிக்கிறேன்.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
தியாக திலீபனின் அகிம்சைப் போரின்போது எடுக்கப்பட்ட காணொளியினை இங்கே காணலாம்
தியாக தீபம் திலீபன்...
மரணத்தின் நிழலில், உயிர் பெற்றவன்.
இன்றும் என்றும்
எம்மத்தியில்
உணர்வுடன்... உயிர்ப்புடன்...
தியாகச் செம்மலுக்கு, வீர வணக்கங்கள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
படித்ததில் பிடித்தது பகுதியில் பதிவாகும் பதிவுகள்,
எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது...
ஒதுங்கிக் கொள்ளவில்லை...
இந்த தியாகப் பயணத்தில் (ஏற்கனவே பலமுறை படித்திருந்தும்) தினமும் பங்குகொண்டேன்.
முடிவடைந்த பின்னரே, எனது அகவணக்கத்தைச் செலுத்துவதாக இருந்தேன்.
ஆனால், அது உங்களது சுட்டிக்காட்டலின் பின்னர் இடம்பெற்றது, எனது துரதிஸ்டமே...
Last edited by அக்னி; 28-09-2008 at 03:14 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks