Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: கொஞ்சம் கொஞ்சேன்...

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர் மலர்விழி's Avatar
    Join Date
    25 Jun 2008
    Location
    மலேசியா
    Posts
    40
    Post Thanks / Like
    iCash Credits
    8,967
    Downloads
    0
    Uploads
    0

    Thumbs up கொஞ்சம் கொஞ்சேன்...

    (எழுதியவரின் பெயர் ஞாபகம் இல்லை, அழகான கவிதை...
    அதன் நயம், சொல் விளையாடல்...ரசிக்க செய்யும், நம்மை நமக்குள் சிரிக்கவும் செய்யும்!)

    கொஞ்சம் கொஞ்சேன்...

    கொஞ்சம் பேசிவிடேன்
    என்னிடம்..
    கோபத்திலும் நீ அழகாக
    இருக்கிறாய் என்ற பொய்யை
    எத்தனைமுறைதான்
    சொல்வது
    செல்லக் குரங்கே..??

    நான் நல்லா இருக்கிறேனா
    இல்லை என் சுடிதார் நல்லா இருக்கா
    எனக் கேட்கிறாய்..
    இரண்டுபேருமே
    சேர்ந்திருந்தாலும் அழகுதான்
    சேராமலிருந்தாலும் அழகுதான்
    எனச் சொன்னால் ஏண்டி
    அடிக்க வருகிறாய் ...??

    என்னிடம் உனக்கு
    என்ன பிடிக்கும் என
    நீ தானே கேட்டாய்...??
    சொல்லவா இல்லைக்
    காட்டவா எனச்
    சொன்னதற்குப் போய்
    இப்படிக் கிள்ளுகிறாயே
    ராட்சசி...

    ஹய்யோ உன்னைப் போய்
    எந்த லூசுடா காதலிப்பா...
    எனக் கேட்கிறாய்
    நீ என்னவோ
    பெரிய அறிவாளி
    என நினைத்துக்கொண்டு...

    ஒரேயொரு முத்தம்
    கொடுடி என
    இனியும் உன்னைக்
    கெஞ்சிக்கொண்டிருக்கம ாட்டேன்..
    தேவையில்லாமல் என்னைத்
    திருடனாக்காதே...

    உன்னைக் கெஞ்சக் கெஞ்ச
    ரொம்பத்தான்
    மிஞ்சுகிறாய் நீ..
    என்னடா
    நினைத்துக்கொண்டிருக் கிறாய்
    எனக்கோபமாகக் கேட்கிறாய்
    உன்னைத்தான் என்ற
    உண்மை உணராமல்...

    என்னை விட்டுத்தொலையேன்
    என நீ கோபமாகச்
    சொல்லிச்சென்றால் எப்படி..?
    விட்டுத்தான் தொலைத்துவிட்டேன்
    என்னை உன்னிடம்...

    உன்னைக்
    காதலித்ததால்தான்
    நான் கவிதை
    எழுதிக்கொண்டிருப்பதா ய்
    என எல்லோரும்
    சொல்கிறார்கள்...
    நான் காதலிப்பதே
    ஒரு கவிதையைதான்
    என உணராத
    அற்ப மானிடர்...

    என்னைவிட உன்னை
    இப்படி இறுக்கிப்
    பிடித்திருக்கும் உன்
    உடைமீது கூட
    இப்பொழுதெல்லாம்
    பொறாமை வருகிறது
    தெரியுமா...?

    நீ ஒன்றும் பெரிய
    அழகியெல்லாம் இல்லை
    ஏதோ நான் காதலிப்பதால்
    பேரழகியாகத்தெரிகிறாய ்
    என உண்மையை சொன்னால்
    ஏண்டி இப்படி முறைக்கிறாய்..?

    உன்னை வர்ணித்து
    எல்லாம் கவிதை
    எழுதமுடியாதடி....
    நாம் மட்டுமே
    ரசிக்கும் கவிதை நீ...

    ம் ம் ம் எப்படி???
    நேற்று என்பது சரித்திரம், நாளை என்பது விசித்திரம், இன்று அது ஒரு வரம்...

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    காதலுக்குரிய சீண்டல் கவிதை. பாராட்டுக்கள்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by மலர்விழி View Post
    எழுதியவரின் பெயர் ஞாபகம் இல்லை
    நவீன் ப்ரகாஷ் என்பவரின் இணையப் பக்கமொன்றில் இந்தக் கவிதையை நானும் கண்டேன்...

    நல்லதொரு கவிதைப் பகிர்வுக்கு நன்றி மலர் விழி..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    ரசிக்கும்படி இருக்கிறது,. பகிர்ந்தமைக்கு நன்றி தோழி.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    ஒப்பிட்டு பார்த்தல்....
    நம்மை நிறுத்தி பார்த்தல்...

    என்று பல வகையாக காதல் கவிதைகளை வாசித்து அதை ரசிக்கும் போது.. அந்த சுகம் தனிதான்...
    அதையும் இந்த வகை எளிய கவிதைகள் இனிமையாக்குகிறது...

    பகிர்தலுக்கு நன்றி மலர்விழி...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  6. #6
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    சீண்டலும் செல்லக் கோபமும் பொங்கி வழிகிறது கவிதையில்..
    நன்றி மலர்விழி இங்கு தந்தமைக்கு..

    தொடர்புடைய ஒரு உரையாடல் படித்தேன் கிடைத்த ஒரு பழைய ஜூனியர் விகடனில்..

    பூங்கா மறைவில் காதலன் - காதலி..

    காதலன் : ம்
    காதலி : ம்ஹும்
    காதலன் : ம் ம்
    காதலி : ம்ஹும் ம்ஹும்
    காதலி : அடச்சீ..சீக்கிரம் ஒரு முத்தம் கொடு..போற வாரவன்லாம் நாமோ ஏதோ
    ஊமைங்கன்னு நினைக்கப் போறான்..





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by poornima View Post
    தொடர்புடைய ஒரு உரையாடல் படித்தேன் கிடைத்த ஒரு பழைய ஜூனியர் விகடனில்..

    பூங்கா மறைவில் காதலன் - காதலி...
    "டயலாக்.." என்று வரும் இந்த மாதிரி காமெடிகளை தேடி முதலில் படிப்பேன்...
    என்னதான் இருந்தாலும் அடுத்தவங்க கதை கேட்பது நம்ம எல்லோருக்கும் அல்வா சாப்பிடுவது மாதிரிதானே...

    (ஆமா.. உங்க கதையை சொல்லவேயில்ல...!!!!)
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    என்ன இங்க ஒரே றொமான்சா இருக்கே... ம்ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்...
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  9. #9
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    "டயலாக்.." என்று வரும் இந்த மாதிரி காமெடிகளை தேடி முதலில் படிப்பேன்...
    என்னதான் இருந்தாலும் அடுத்தவங்க கதை கேட்பது நம்ம எல்லோருக்கும் அல்வா சாப்பிடுவது மாதிரிதானே...

    (ஆமா.. உங்க கதையை சொல்லவேயில்ல...!!!!)
    கெடைச்ச கேப்ல நம்மையே கிண்டி கெழங்கு எடுக்குறீங்களே பென்ஸ்.. :-)





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    சூப்பர் கவிதை பகிர்வுக்கு நன்றி

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Apr 2007
    Posts
    129
    Post Thanks / Like
    iCash Credits
    10,375
    Downloads
    21
    Uploads
    0
    வாவ் அருமையான கவிதை,

    மிகவும் ரசித்து வாசித்தேன்.

    நன்றி.

  12. #12
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    12 Sep 2008
    Location
    tamilnadu
    Age
    41
    Posts
    98
    Post Thanks / Like
    iCash Credits
    28,721
    Downloads
    9
    Uploads
    0
    நல்லதொரு கவிதை, "நன்றி"

    காதலியை காதலிப்பதைப்போல் கவிதையை காதலிக்கும் சுகமும் இனிமைதான், கவிதையை தேடிப்படிப்பவன் நிச்சயம் காதலியை அதிகம் நேசிப்பான்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •