இருட்டுல நீ வாழப் பழகு
வெளிச்சமெல்லாம் எதுக்குடா...
கருவறையில் இருந்தப்போ
கரன்ட் இல்லையே உனக்குடா!
பெட்ரோமாக்ஸ் லைட் கொளுத்து
ஃபங்ஷன் மூடு கெடைக்குண்டா...
மெழுகுவத்திய ஏத்தி வையி
பர்த்டே போல இருக்குண்டா!
காலேஜுக்கு கட் அடிச்சுட்டு
சந்தோஷமா சிரிக்கிற...
கரன்ட் மட்டும் கட் அடிச்சா
கண்டபடி குதிக்கிற!
ஃபேக்டரிய இழுத்து மூடு
டெய்லி உனக்கு லீவுடா...
போரடிச்சா தெறந்திருக்கு
டாஸ்மாக்கு ஓடுடா!
ஃபேனை தூக்கிப் போட்டுட்டு
பேரீச்சம் பழம் வாங்குடா...
வொய்ஃப்பு, சீரியல் பாக்காட்டி
டைமுக்கு கிடைக்கும் சோறுடா!
இயற்கையோட இணைந்து வாழ்ந்தா
மின்சாரம் மிச்சம்டா...
கரன்ட் பில்லு கட்ட வேணாம்&உனக்கு
உடம்பு பூரா மச்சம்டா!
ஆதிவாசி மனுஷனோட
வாழ்க்கை இப்ப புரியுதா?
கல்லறைக்குப் போன பிறகும்
கரன்ட் இல்ல தெரியுதா?!
-ந.அண்ணாமலை
நன்றி: ஜூனியர் விகடன் 10-09-2008
Bookmarks