Results 1 to 4 of 4

Thread: ஆற்காட்டார் அட்வைஸ் கவிதை- ஜீனியர்விகடன்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5

    ஆற்காட்டார் அட்வைஸ் கவிதை- ஜீனியர்விகடன்

    இருட்டுல நீ வாழப் பழகு
    வெளிச்சமெல்லாம் எதுக்குடா...
    கருவறையில் இருந்தப்போ
    கரன்ட் இல்லையே உனக்குடா!

    பெட்ரோமாக்ஸ் லைட் கொளுத்து
    ஃபங்ஷன் மூடு கெடைக்குண்டா...
    மெழுகுவத்திய ஏத்தி வையி
    பர்த்டே போல இருக்குண்டா!

    காலேஜுக்கு கட் அடிச்சுட்டு
    சந்தோஷமா சிரிக்கிற...
    கரன்ட் மட்டும் கட் அடிச்சா
    கண்டபடி குதிக்கிற!

    ஃபேக்டரிய இழுத்து மூடு
    டெய்லி உனக்கு லீவுடா...
    போரடிச்சா தெறந்திருக்கு
    டாஸ்மாக்கு ஓடுடா!

    ஃபேனை தூக்கிப் போட்டுட்டு
    பேரீச்சம் பழம் வாங்குடா...
    வொய்ஃப்பு, சீரியல் பாக்காட்டி
    டைமுக்கு கிடைக்கும் சோறுடா!

    இயற்கையோட இணைந்து வாழ்ந்தா
    மின்சாரம் மிச்சம்டா...
    கரன்ட் பில்லு கட்ட வேணாம்&உனக்கு
    உடம்பு பூரா மச்சம்டா!

    ஆதிவாசி மனுஷனோட
    வாழ்க்கை இப்ப புரியுதா?
    கல்லறைக்குப் போன பிறகும்
    கரன்ட் இல்ல தெரியுதா?!
    -ந.அண்ணாமலை

    நன்றி: ஜூனியர் விகடன் 10-09-2008
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    அருமையான கவிதை. கிண்டலாக சொன்னாலும் பெரும்பகுதி உண்மையாகவும்தான் இருக்கு... மின்சாரம் இல்லாமல் வாழ்ந்த காலங்களில் இருந்த திருப்தி அது இருக்கும்போது கிடைப்பதில்லை என்பது நிஜம்தான்.
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அண்மையில் பச்சை வீடுகளை அமைப்பது, அவற்றில் வாழ்வது பற்றிக் கொஞ்சம், எங்கோ படித்தேன்...

    அப்போதுதான், ஒன்று புரிந்தது...
    வழி இல்லாமல் இல்லை-மாறாக
    நாம்தான் இயற்கையின் வழியில் போகாமல்
    குறுக்கு வழியில் போய்க் கொண்டிருக்கிறோமென...

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    ஆற்காட்டார் என்ன செய்வார் பாவம் :-)

    கவிதை படிக்கும்போது நினைத்திருப்பார்.. நம்ம நினைக்கிறதை அப்படியே
    உரிச்சி வச்சிருக்கான்பா...

    சந்தோஷப்பட்டதற்கு பரிசு கொடுப்பாரோ என்னவோ கோபப்பட்டிருந்தால்
    இந்நேரம் ஆட்டோ போயிருக்கும் :-)

    எடுத்து இங்கே தந்தமைக்கு நன்றி





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •