உளி தரும் இரணங்களே
உன்மத்தக் கல்லின் உறக்கம் கலைத்து
உயிர்ப்புள்ள சிலையாய்
அதை விழிக்க வைக்கின்றன
பாதையின் முட்களால்
பண்படாத வரை
நீயும்
உன்மத்தக் கல் தான்
இரணங்களுக்குப்
பயந்தது போதும்
உன்னைச் செதுக்கும்
பாதைக்கு வா
இரணங்களின் ஈரமேந்திப்
பாதையில் நட
பண்படுத்தும் பயணமின்றேல்
நீ
ஜீவனில்லாத வெறுங்கல்லே
நடுகல்
Bookmarks