Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 24

Thread: வாடாமல்லி.....

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0

    வாடாமல்லி.....

    என்னைக் பார்த்தவள்
    தன் விரல்களால் கொய்து
    கூந்தலில் சூடினாள்...
    படிய வாரியக் கூந்தலில்
    ஒற்றை அரசனாய்
    கர்வத்துடன் அமர்ந்திருந்தேன்....

    என்னிடம் பிடித்தது எது ?

    அடர்ந்த என் வண்ணமா?
    உருண்ட என் தேகமா?
    கேட்டேன்
    அமைதியான உன் சுபாவமும்
    பற்று வோரை பற்றிக் கொள்ளும் பாசமும் ...
    எனப் பதில் தந்தாள்...

    தன் கரத்தால்
    என்னிருப்பை எப்போதும்
    உறுதிப் படுத்திக் கொண்டாள்

    அவள் கரங்களின் கதகதப்பில்
    களித்தேன்....
    எங்குச் சென்றாலும் என்னைத்
    தன்னோடு வைத்திருந்தாள்...

    அடுத்த சில நேரத்தில்
    என்னிலும் மென்மையான
    வெண்மையானச் சிலர்
    அவள் கரத்தில் குடிவந்தனர்...
    நறுமணம் பரவியது அவர்களிடமிருந்து...
    அந்த மணம் அவளுக்குப் பிடித்திருந்தது..
    ஆனால் அது எனக்குப் பிடிக்கவில்லை...

    எனது இதழ் முட்களால் என்னிருப்பைத்
    தெரிவித்தேன்....
    சட்டைசெய்யவில்லை..

    என்னை ஓரத்தில் விலக்கி விட்டு
    புதியவர்களை
    கூந்தலில் குடிபுகுத்தினாள்...

    சில நாளில்
    வண்ணமயமாய் வந்தவர்கள்
    தன்னிலை கலைத்தனர்
    நிறம் தொலைத்தனர்
    அவர்களிடமிருந்த வாசமும்
    வீசிய தென்றலோடு தொலைந்து போனது...
    அவர்களும் காற்றோடு கலந்து உதிர்ந்து மறைந்தனர் .....

    கலைந்த கூந்தலின்
    இடையில் ஓடிய நாரும்
    நாரோடு ஒட்டியபடி நானும்
    இன்னும் மீதமிருந்தோம்

    நாரைத் பிய்த்தவள்
    நாரோடு சிக்கியிருந்த
    என்னையும் சேர்த்து
    எறிந்தாள்....

    நிறமும் குணமும்
    மாற்றத் தெரிந்த
    மல்லிகையாயிருந்தால்
    நாரை விட்டு எப்போதோ
    உதிர்ந்திருப்பேன்

    நிறமும் குணமும்
    மாற்ற இயலாத
    வாடா மல்லியாகிய நான்
    இன்னும் அவள் புடவை நூலில்
    தொங்கியபடி அவளைத்
    தொடர்கிறேன்....

    அவளுக்குத் தெரியாமலேயே..
    என் ...
    நிறமும் குணமும் மாறாமலேயே...
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    எறிவது பூவையர் இயல்பு - வாடாமல்
    இருப்பது இப்பூவின் இயல்பு!

    அவரவர் இயல்பு சரி அவரவர்க்கு!
    இரண்டுமே சரி - சராசரி பார்வையாளனுக்கு!

    பல எண்ணங்களை மனத்திரையில் ஓடவைத்த கவிதை!

    பாராட்டுகள் செல்வா!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    எறிவது பூவையர் இயல்பு - வாடாமல்
    இருப்பது இப்பூவின் இயல்பு!

    அவரவர் இயல்பு சரி அவரவர்க்கு!

    பல எண்ணங்களை மனத்திரையில் ஓடவைத்த கவிதை!
    ஆஹா..... நீங்களும் நிறைய யோசிக்க வைக்கிறீங்களே..........

    பாராட்டுகள் செல்வா!
    நன்றி அண்ணா.....
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஒவ்வொரு பூவும் மலரும் போது, ஒவ்வொரு இலட்சியத்துடன் மலர்ந்திருக்கும்...
    இறைவனின் சன்நிதானத்துக்கு போகவென்று சில...
    இளம் பெண்களின் தலையில் அமரவென்று சில...
    எல்லாப் பூக்களுக்கும் இத்தகைய இலட்சியம் இலகுவில் நிறைவேறுவதில்லை...
    இந்நிலையில் எதாவது ஒரு இலட்சியம் நிறைவேறினாலே அது பூக்களின் வெற்றி தானே.....

    அந்த வெற்றியுடனேயே வாடாமல்லி திருப்தியடையப் பார்க்கணும்...
    தான் பெற்ற பேற்றைத் தன் இளையவர்களும் அடைய வேண்டுமென்று ஒதுங்க வேண்டும்....

    அதுதான் அழகு, நிறம் குணம் மாறவில்லையே இன்னு தலையில் இருப்பேன் என்று
    கிரிக்கட் அணியில் இன்னும் இடம் பிடிக்க துடிக்கும் சச்சின் டெண்டுல்கர் போல அடம் பிடிக்கக் கூடாது...!!

    பாராட்டுக்கள் செல்வா, என்னையும் நிறைய யோசிக்க வைச்சிட்டீங்க..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post

    அதுதான் அழகு, நிறம் குணம் மாறவில்லையே இன்னு தலையில் இருப்பேன் என்று
    கிரிக்கட் அணியில் இன்னும் இடம் பிடிக்க துடிக்கும் சச்சின் டெண்டுல்கர் போல அடம் பிடிக்கக் கூடாது...!!

    பாராட்டுக்கள் செல்வா, என்னையும் நிறைய யோசிக்க வைச்சிட்டீங்க..!!
    இதே கேள்வியைத் திருப்பியும் கேட்கலாம் அல்லவா... அதுதான் அழகு, நிறம் குணம் மாறவில்லையே அப்புறம் ஏன் தலையை விட்டு இறங்கணும்...???

    பாராட்டுக்களுக்கு நன்றி ஓவியன்....
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by செல்வா View Post
    இதே கேள்வியைத் திருப்பியும் கேட்கலாம் அல்லவா... அதுதான் அழகு, நிறம் குணம் மாறவில்லையே அப்புறம் ஏன் தலையை விட்டு இறங்கணும்...???
    அப்புறம் ஏன் இன்னும், இன்னும் பல வாட மல்லிகள் பூத்துக் கொண்டிருக்கின்றன...??
    அவைக்கு வாய்ப்புக் கொடுக்க கீழே இறங்குவதுதான் பெருந்தன்மை..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நீ
    பூவைப்பற்றிப் பாடி இருக்கியா..
    பூவையரைப் பற்றிப் பாடி இருக்கியா.
    பூ வையல் பற்றிப்பாடி இருக்கியா.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    நீ
    பூவைப்பற்றிப் பாடி இருக்கியா..
    பூவையரைப் பற்றிப் பாடி இருக்கியா.
    பூ வையல் பற்றிப்பாடி இருக்கியா.
    நான் எதைப் பற்றிப் பாடியிருக்கிறேன்கிறத அப்புறம் சொல்றேன் உனக்கு என்ன தோணுதுங்கிறத முதலில் சொல்லு....

    ஆமா... அது என்ன பூ வையல் - மையலா? இல்லை வைதலா?
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by செல்வா View Post
    அது என்ன பூ வையல் - மையலா? இல்லை வைதலா?
    தையலை வைதல் என நினைக்கிறேன்..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    தையலை வைதல் என நினைக்கிறேன்..!!
    தையல்கள் இணைந்து தையலிட்டுவிடுவார்கள் கவனம்....
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by செல்வா View Post
    தையல்கள் இணைந்து தையலிட்டுவிடுவார்கள் கவனம்....
    தையலை வைதல் செய்யும் எண்ணத்தை
    இங்கு விதைத்ததே அமரனாயிருக்க
    அதை ஏன் எனக்குச் சொல்லி வதைக்கிறீர்...??

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    தையலை வைதல் செய்யும் எண்ணத்தை
    இங்கு விதைத்ததே அமரனாயிருக்க
    அதை ஏன் எனக்குச் சொல்லி வதைக்கிறீர்...??
    விதைத்தவர் அவராயினும் நீரூற்றி வளர்த்தவர் நீரே... விதை(னை)யால் விளைவதும் உமக்கே...
    Last edited by செல்வா; 31-08-2008 at 10:38 AM.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •