Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 28

Thread: தலைவராகும் தகுதி ரஜினிக்கு உண்டா?

                  
   
   
  1. #1
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0

    தலைவராகும் தகுதி ரஜினிக்கு உண்டா?

    தமிழகம் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தான். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி, கொடி என்று தமிழகமே களை கட்டத் தொடங்கிவிடும்.

    பி.எம்.கே ( பாரத முன்னேற்ற கழகம்) எனும் புதுக்கட்சிக்கு ரஜினி தலைவராகி, மஞ்சள் கறுப்பு எனும் கொடியின் மத்தியில் ரஜினி அமர்ந்திருப்பது போல் கொடி தயாரிக்கப்பட்டு பட்டி தொட்டியெல்லாம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தலைப்பு செய்திகளில் இடம் பெறக்கூடும்.

    உலகத் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தமிழகம் நோக்கி படை எடுப்பார்கள்.ஜப்பானில் வெடிச்சத்தம் முழங்க ஊர்வலம் துவங்கி தமிழகம் நோக்கி வரலாம்.

    மத்தியிலுள்ள ஆளும் கட்சி ப.சிதம்பரத்தையும் பி.ஜே.பி துக்ளக் ஆசிரியர் சோவையும் தூதனுப்பி கூட்டணி வைத்துக்கொள்ள ரஜினியின் ஒரு குரலுக்கு காத்திருப்பார்கள்.

    வசை பாடியபடியே ஜெயலலிதாவும், ஸ்டாலினும், விஜயகாந்தும், ராமதாசும் தோல்வி பீதியில் நெளிய ஆரம்பிப்பார்கள். அனைத்து கட்சியிலிருந்தும் சிலர் கழண்டு ரஜினி கட்சியில் சேர்வார்கள்.

    தேர்தல் நேரத்தில் ரஜினி இமயமலைக்குச் சென்றால் கூட முன்பு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படுத்துக்கொண்டே ஜெயிப்பார் என்று பிரச்சாரம் செய்ததுபோல் ரஜினி இமயமலையில் இருந்தாலும் ஜெயிப்பார் என்ற பிரச்சாரம் தமிழகமெங்கும் ஒலிக்கும்.

    தமிழக ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி அரசியலுக்கு வந்ததே ஒரு மாபெரும் இனிப்பு செய்தி என்ற குதூகலத்தில் இருப்பார்கள். இதற்கு முன்பு வரை தி.மு.க, ஆ.தி.மு.க ஆண்ட காலங்களில் மக்களுக்கு அதிருப்தி ஏற்ப்பட்டு தமிழகத்தை தலைநிமிர்த்த எம்.ஜி.ஆரைப்போல ஒரு தலைவர் தமிழகத்துக்கு தேவை என்று அடையாளப்பட்டவர் தான் ரஜினி

    தனது ஸ்டையில் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை தன்வசப்படுத்தி இந்தியாவிலேயே அதிக ரசிகர்களையும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் வலம் வருபவர் ரஜினி.

    ரஜினி தமிழகத்தை ஆண்டால் ஏழை எளிய மக்கள் பயன் அடையக்கூடிய வகையில் எம்.ஜி.ஆரைப்போல நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி ஏழை மக்களின் வாழ்வு வளம் பெற ரஜினி எதையாவது செய்வார் என்று கனவு கண்டனர் அவரது ரசிகர்கள்.

    ஆனால் ரஜினியோ அரசியல் சாக்கடையில் விழுந்தால் தான் ஒருவன் மட்டும் நல்லவனாக இருந்தாலும் தன் கட்சியிலுள்ளவர்கள் லஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகம் என்று சிக்கிகொள்ளும்போது தனது பெயரும் அடிபட்டு இதுவரை ரசிகர்களிடமிருந்த அன்பும் ஆதரவும் பறிபோய்விடுமோ என்ற தயக்கத்தில் கட்சி என்ற விசயத்தில் மௌனமே பதிலாக இருந்தது


    தமிழகத்தில் ரஜினிக்கு தலைவராகும் தகுதி உண்டா என்று அப்பொழுது ஒரு ரகசிய சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயில் ரஜினி ஒரு சிறந்த நடிகர் அவர் அரசியலில் விழுந்து தனது செல்வாக்கை இழக்கப் போகிறார் அவருக்கு அரசியல்வாதிகளைப்போல பொய், பித்தலாட்டம், வாக்குறுதி தந்து ஏமாற்றுவது, அந்தர் பல்டி அடிப்பது இது எதுவுமே ரஜினிக்கு தெரியாது, அவர் ஒரு சொக்கத்தங்கம் அவருக்கு அரசியலில் தலைவராகும் தகுதி இல்லை என்றே அடித்து கூறியது

    ரஜினியும் இதுதான் உண்மை என்று நம்பி அரசியல் ஆருடம் கணிக்கும் போதெல்லாம் இமயமலைக்குச் சென்று அமைதி காண்பார். காலம் உருண்டோடினாலும் தமிழக ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை.எப்படியாவது அரசியல் சாக்கடையில் அவரை தள்ளி விடவே காத்திருந்தனர்.
    அந்த எண்ணம் தற்பொழுது ரஜினிக்கு கை கூடி வந்திருக்கிறது.

    தற்பொழுது எடுத்த ரகசிய சர்வேயில் ரஜினிக்கு தலைவராகும் தகுதி உண்டா என்ற கேள்விக்கு நூற்றுக்கு எண்பது சதவிகிதம் பேர் ரஜினிக்கு தலைவர் ஆகும் முழுத் தகுதி உண்டு என்று அடித்துச் சொல்கிறார்கள்

    அரசியல் நடத்த அடிக்கடி பொய் மூட்டைகளை அள்ளி விட வேண்டும், முரண்பாடுகளின் மூட்டையாக வாய்க்கு வந்தபடி எதையாவது உளற வேண்டும், ஒரு தடவை சொன்ன விசயத்தை திருப்பி கேட்டால் நான் அந்த அர்த்தத்துல சொல்லல என்று அந்தர் பல்டி அடிக்கவேண்டும்.

    வாக்குறுதிகளை அள்ளி வீச வேண்டும் அதை நிறைவேற்ற தருணம் வரும்பொழுது நான் எப்போ சொன்னேன் என்று திருப்பி கேட்க வேண்டும். தெளிவற்ற பேச்சும் கொள்கையில் உறுதியும் இல்லாமலிருக்க வேன்டும். இதுதான் ஒரு அரசியல்வாதியின் இன்றைய முகம்.

    இவை அனைத்தும் தற்பொழுது ரஜினியிடம் அமைந்துள்ளது. எனவே அரசியலில் தலைவராகும் தகுதி ரஜினிக்கு கட்டாயம் உண்டு. இதற்கு சமீபத்தில் அவர் அடித்த அந்தர் பல்டிகள் உதாரணமாக உள்ளது.

    ஓக்கேனக்கல் பிரச்சனையில் ரஜினி பேசிய வார்த்தையால் தமிழர்கள் ஒவ்வொருவரின் இதயங்களும் குளிர்ந்தது ஆனால் குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட வேண்டி அவர் பேசிய வார்த்தைகளுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு நீண்ட ஒரு கடிதத்தை கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தார் இப்படி அந்தர் பல்டி அடித்ததால் அரசியலுக்கு தகுதியானவர் என்ற பட்டம் அவரை போய் சேர்கிறது

    நான் எப்ப வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் என்று ஒரு திரைபடத்தில் வசனம் பேசினார். ரஜினி ரசிகர்களும் அதை உண்மை யென்று நம்பி இத்தனை வருடம் காத்திருந்தனர்.

    சமீபத்திய குசேலன் திரைப்படத்தில் அது யாரோ ஒரு ரைட்டர் எழுதிய வசனம் அதை நான் பேசி இருக்கேன் அதை உண்மையின்னு நீங்க எடுத்துகிட்டா நான் என்ன செய்யறது என்ற பதில் மூலம் ஒரு உண்மையான அரசியல்வாதியின் முகம் அவரிடம் பளிச்சிட்டது. இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் தலைவராகும் தகுதி அவரிடம் ஒட்டிக்கொண்டுவிட்டது

    அரசியல் கட்சி தலைவர்கள் தவறாக எதையாவது பேசினால் தயங்காமல் மன்னிப்பு கேட்கவேண்டும் மக்கள் குளிர்ந்து போவார்கள் அந்த வகையில் ஒகேனக்கல் பிரச்சனையில் கர்நாடகத்திடமும், குசேலன் படத்தில் பேசிய வசனத்திற்க்காக ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டிருக்கிறார் ரஜினி. இப்படி எதற்க்கெடுத்தாலும் மன்னிப்பு கேட்க தயாராகிறார் என்றால் அவர் தலைவர் தானே.

    முன்பு ஜெயலலிதா மீதான் கோபத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது என்று அவர் விட்ட அறிக்கை ஒரு மாபெரும் மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியது

    பின்பு அதே ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு ஜெயலலிதாவை பாராட்டி பேசினார். இப்படி திட்டுவதும் பிறகு பாராட்டுவதும் அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை. அந்த கலை தற்பொழுது ரஜினிக்கு நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது.

    காவிரி நதி நீர் பிரச்சனை வரும்போதெல்லாம் இதற்கு ஒரே தீர்வு தேசிய நதி நீர் திட்டம் தான் என்றும் அதற்கு நான் ஐந்து லட்சம் தரத் தயார் என்று அறிக்கை விட்டதோடு சரி, அதற்கென்று ஒரு பைசா செலவளித்துள்ளாரா என்றால் அது தான் இல்லை.

    ஆக ரஜினிக்கு அரசியல் தலைவர் ஆகும் தகுதி நிச்சயம் உண்டு.தமிழக மக்கள்தான் பாவம், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகிப்போன பிறகு ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன, ஏழைகள் பாடு எப்பொழுதும் திண்டாட்டம் தான்.

    குமரியிலிருந்து வெளிவரும் குமரிகடல் மாதம் இருமுறை இதழில் வெளிவந்தது

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Apr 2007
    Posts
    129
    Post Thanks / Like
    iCash Credits
    10,375
    Downloads
    21
    Uploads
    0
    ரஜினிக்கு வேண்டுமானால் தலைவராகும் தகுதி இப்பொழுது வந்து இருக்கலாம்,

    ஆனால் தமிழக மக்கள் அந்த அளவுக்கு ஒன்றும் புத்தி கெட்டு போய் விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

    ஏனெனில் குசேலன் படத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவே அதற்கு சாட்சி.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    ஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்துல கண்ணா இருக்கிறவங்க அப்பு இவுங்களெல்லாம்...!!

    சட்டி சுட்டதடா.. கைவிட்டதடா...
    புத்தி கெட்டதடா.. நெஞ்சை சுட்டதடா.. ன்னு
    தமிழக மக்கள் தற்போது பாடிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    எந்த இதழில் எப்படி வெளிவந்தால் என்ன?
    இந்தியாவில் ஜனநாயக ஆட்சிதானே நடக்கிறது.
    உங்களனைவரின் ஓட்டுத்தானே தீர்மானிக்கப்போகிறது யார் தலைவன் என்பதை. அது ரஜினியாக இருந்தால் என்ன? வேறு யாராக இருந்தால்த்தான் என்ன?
    தேர்ந்தெடுக்கப்போவது, நீங்கள் எல்லோருமாக சேர்ந்துதானே....
    அப்படி ரஜினியும் ஓர் தெரிவாக இருக்கும் பட்சத்தில் உங்கள் சரியான தேர்வை தெரியுங்கள்.
    வீணாக அந்த செய்தியில் வந்தது, இந்தச் செய்தியில் வந்தது என்று கற்பனைக் கட்டுரைகளை பரப்பி ரஜினி இரசிகர்கள் மத்தியில், உங்களுக்கு நீங்களும் மன்றத்திற்கும் ஏன் அவப்பெயரை தேடுகிறீர்கள்.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by விராடன் View Post
    எந்த இதழில் எப்படி வெளிவந்தால் என்ன?
    இந்தியாவில் ஜனநாயக ஆட்சிதானே நடக்கிறது.
    உங்களனைவரின் ஓட்டுத்தானே தீர்மானிக்கப்போகிறது யார் தலைவன் என்பதை. அது ரஜினியாக இருந்தால் என்ன? வேறு யாராக இருந்தால்த்தான் என்ன?
    தேர்ந்தெடுக்கப்போவது, நீங்கள் எல்லோருமாக சேர்ந்துதானே....
    அப்படி ரஜினியும் ஓர் தெரிவாக இருக்கும் பட்சத்தில் உங்கள் சரியான தேர்வை தெரியுங்கள்.


    வீணாக அந்த செய்தியில் வந்தது, இந்தச் செய்தியில் வந்தது என்று கற்பனைக் கட்டுரைகளை பரப்பி ரஜினி இரசிகர்கள் மத்தியில், உங்களுக்கு நீங்களும் மன்றத்திற்கும் ஏன் அவப்பெயரை தேடுகிறீர்கள்.

    விராடா,
    நேற்று ஒரு அழகிய மாலைப்பொழுதில் இந்த விசயத்திற்க்காக 2நண்பர்களுக்குள் வாக்குவாதம் முற்றி பின் கண்ணீரில் முடிந்தது!!!!

    - ஃவெரி டேஞ்சரஸ் டோஃபிக்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    ரஜினி ஒரு நல்ல நடிகர்...

    தலைவரென்று சொல்ல பல தகுதிகள் வேண்டும்.. அது அவரிடம் இருக்கிறதா என்பதை சரியாக யாராலும் கணிக்க இயலாது...

    மேலும் 1996ல் அவர் அரசியலில் இறங்கியிருந்தால்.... சில மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பார்.

    இனி அரசியலில் அவர் ஈடுபடப்போவதில்லை....
    --------------
    இங்கு எந்த வாதமாக இருந்தாலும்... மென்மையாக.. யாரையும் தாக்காமல் பதிவோம்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    அந்த கட்டுரையின் நோக்கம் மக்களை தெளிவு பெற செய்ய வேண்டும் என்பதே. இதை விவாதமாக வந்தால் கூட தப்பில்லை.இதில் என்ன அவப்பெயர் மன்றத்திக்கு வரபோகிறது விராடன்.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்..!

    அவர் ஒரு நடுத்தர வர்க்க மனோபாவம் கொண்டவர்.. புகழுக்கு ஆசை இருந்தாலும், ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்.

    தான்.. தன் குடும்பம், ஆன்மீகம் என்று அமைதியாக வாழ்க்கையைக் கழிக்கவே விரும்புவார்.

    ஆர்ப்பாட்ட அரசியல் அவருக்கு ஒத்து வராது.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by sakthim View Post
    ரஜினிக்கு வேண்டுமானால் தலைவராகும் தகுதி இப்பொழுது வந்து இருக்கலாம்,
    ஆனால் தமிழக மக்கள் அந்த அளவுக்கு ஒன்றும் புத்தி கெட்டு போய் விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
    ஏனெனில் குசேலன் படத்துக்கு மக்கள் கொடுத்த ஆதரவே அதற்கு சாட்சி.
    வாங்க சக்தி..
    சில கணினித் திரிகளிலும் ரஜினி தொடர்பான திரிகளிலும் பதிவுகள் தரும் நீங்கள் உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகஞ் செய்து கொள்ளலாமே..

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இரகசிய வாக்கெடுப்பை தனது வசதிக்கேற்ப பயன்படுத்திய இக்கட்டுரையாளரை விடவா ரஜினி அரசியல் முதிர்ச்சி பெற்றவர்..

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    06 Apr 2007
    Posts
    129
    Post Thanks / Like
    iCash Credits
    10,375
    Downloads
    21
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    வாங்க சக்தி..
    சில கணினித் திரிகளிலும் ரஜினி தொடர்பான திரிகளிலும் பதிவுகள் தரும் நீங்கள் உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகஞ் செய்து கொள்ளலாமே..
    கண்டிப்பாக அமரன்,நேரம் இன்மை காரணமாக பதிக்க இயல் வில்லை,விரைவில் பதிக்கிறேன்,நன்றி.

  12. #12
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0
    இனியவர் விராடன் அவர்களுக்கு,
    ரஜினி எனும் மாபெரும் மனிதர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு நிச்சயம் அவர் வரமாட்டார் என்பதே எனது யூகமும், ஆனால் ஓக்கேனக்கல் பிரச்சனையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு நீண்ட ஒரு கடிதத்தை கர்நாடகாவுக்கு அனுப்பி அந்தர் பல்டி அடித்ததை தமிழன் வாழ்நாளில் மறக்கமாட்டான்.

    உயிர் ரஜினிக்கு உடல் மண்ண்க்கு என்றும் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பிக்கொன்டிருந்த ரசிகனுக்கு குசேலன் படத்தில் சொன்ன கருத்து எத்தனை ரணங்களை தந்திருக்கும் என்ற இந்த இரண்டு காரணங்களை கருத்தில் கொண்டு ரஜினியை நையாண்டி செய்து எழூதப்பட்ட கட்டுரை என்பதாலும், ஏற்கனவே திரு ஞானி எழுதி குமுததில் வெளிவந்த கட்டுரை தமிழ் மன்றத்தில் பதியப்பட்டிருந்ததாலும் நானும் பதிவுசெய்திருந்தேன். இது அவைக்கு அவப்பெயரும் ரஜினி ரசிகர்களுக்கு வேதனை தரும் என்று எப்படி சொல்ல முடியும். விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் மன்றத்தாரிடம் இருக்கும் என்ற நம்பிக்கையில் பதிவு செய்திருந்தேன் அது இல்லையென்றால் மன்னிக்கவும் இதுபோன்ற கட்டுரைகளை இனி பதிவு செய்வதில்லை

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •