Results 1 to 7 of 7

Thread: இவை கொடு இறைவா..

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0

    இவை கொடு இறைவா..

    எனக்கு நானே
    பயப்பட வேண்டும்
    எந்த நிலையிலும் மனம்
    தழும்பாமல் இருக்க வேண்டும்..

    பந்தியிலே பகைவரை
    பார்த்தாலும் புன்னகையுடன்
    பரிமாறும் பக்குவம் வேண்டும்..

    சிந்தையிலே செருக்கற்று
    சீரிய நோக்கும்
    தேரிய அறிவும் தெய்வம்
    வாரி வழங்க வேண்டும்..

    எப்புறமும் துப்புறவு வேண்டும்..
    சப்பரம் போலுலகில்
    சாந்தி வலம் வர வேண்டும்..

    கசிகிற கருணை மனம் வேண்டும்
    பசித்தவனை பார்க்காத உலகை
    படைத்திட வேண்டும்..
    ரசிகனென மாறி பிரபஞ்ச
    ரம்மியங்கள் ரகசியங்கள்
    சுவைத்திட வேண்டும்..

    இளைய கன்னிகள் பார்வையில்
    இளகிடும் உள்ளம் வேண்டும்
    இறந்து ஒருமுறை மீண்டும்
    இல்லாள் மடியில் உயிர்த்திட வேண்டும்..

    திறந்த நெஞ்சம் வேண்டும்
    தெளிந்த நிலையில் முகம்
    எப்பொழுது இருக்க வேண்டும்
    பிறந்த குழந்தை மனம்
    பெரிய வயதிலும் வேண்டும்

    பேர்கெடாத வாழ்கை வேண்டும்
    பேர்கெட்டு போனாலும் இந்த
    பேருலகம் தூய்மையுற
    குப்பை தொட்டியாகவேனும்
    இருந்திட வேண்டும்..
    Last edited by ஆதி; 22-08-2008 at 02:55 PM.
    அன்புடன் ஆதி



  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    அனைத்தும் அவசிய வேண்டும் கள்...

    Quote Originally Posted by ஆதி View Post
    பேர்கெடாத வாழ்கை வேண்டும்
    பேர்கெட்டு போனாலும் இந்த
    பாருலகம் தூய்மையுற
    குப்பை தொட்டியாகவேனும்
    இருந்திட வேண்டும்..
    இறுதிவரிகள் இமயம்...

    கவிதையில் வேண்டிய அனைத்தும்
    நிறைவேறி,
    மனிதம்,
    குப்பைகள் நீங்கிய தொட்டிலாகத்
    தாலாட்டிட வேண்டும்...

    பாராட்ட வேறு வார்த்தைகள் இல்லை...
    பாராட்டுக்கள் ஆதி...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    பாரதியும் வைரமுத்துவும் வந்து போனார்கள்.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை " வேண்டும் "

    தொடர வேண்டும்....

    அன்பு வேண்டும்
    தென்றல்.

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    என்ன வேண்டுமென்பதிலேயே கேட்பவனின் தரம் விளங்கிவிடும். இந்த வேண்டும்கள்...உயர் சிந்தனையாளனின் உயர்ரக வேண்டுதல்கள். அக்னி குறிப்பிட்ட அந்த ஈற்று வரிகள் பிரமாதம். குறையில்லா கவிதை. மனம் நிறைந்த பாராட்டுகள் ஆதி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    என்ன வேண்டுமென்பதிலேயே கேட்பவனின் தரம் விளங்கிவிடும். இந்த வேண்டும்கள்...உயர் சிந்தனையாளனின் உயர்ரக வேண்டுதல்கள். அக்னி குறிப்பிட்ட அந்த ஈற்று வரிகள் பிரமாதம். குறையில்லா கவிதை. மனம் நிறைந்த பாராட்டுகள் ஆதி.
    சிவா.ஜி யை வழஜமொழிகிறேன்...

    அருமை ஆதி தொடருங்கள்
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    உயரியக் கவிதை!

    இறுதிவரி வீச்சு அபாரம்!

    வாழ்த்துகள் ஆதி!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    06 Jan 2008
    Location
    புதுக்கோட்டை
    Age
    66
    Posts
    540
    Post Thanks / Like
    iCash Credits
    21,512
    Downloads
    49
    Uploads
    0
    இந்தியாவை இயக்க என்
    இனிய ஆதியைப் போல்
    எத்தனையோ இளைஞர்கள்
    இன்னும் வேண்டும்
    கண்டும் காணாமல் செல்லும்
    கயமை உள்ளம் நீங்க வேண்டும்
    கருத்திலே கருணை கொண்டு
    காளையர்கள் காதலில் கண்ணைத்
    தொலைக்காதிருக்க வேண்டும்
    கற்பனைகளின் கற்பகத்தரு
    ஆதியின் கனவு மெய்ப்பட
    காலமும் கருணை புரிதல் வேண்டும்

    வேண்டுதலிலும் பிறர் இன்பம் இறைஞ்சும் இனிய மனம் எல்லோருக்கும் வந்துவிடுமா ? பிரபஞ்சமே கவிஞர்களுக்குச் சொந்தம்தான் என்ற கூற்றுக்கு இலக்கணமாய் நிற்கும் ஆதியைப் போற்ற வார்த்தைகள் இல்லை.
    Last edited by சாலைஜெயராமன்; 24-08-2008 at 12:12 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •