எனக்கு நானே
பயப்பட வேண்டும்
எந்த நிலையிலும் மனம்
தழும்பாமல் இருக்க வேண்டும்..
பந்தியிலே பகைவரை
பார்த்தாலும் புன்னகையுடன்
பரிமாறும் பக்குவம் வேண்டும்..
சிந்தையிலே செருக்கற்று
சீரிய நோக்கும்
தேரிய அறிவும் தெய்வம்
வாரி வழங்க வேண்டும்..
எப்புறமும் துப்புறவு வேண்டும்..
சப்பரம் போலுலகில்
சாந்தி வலம் வர வேண்டும்..
கசிகிற கருணை மனம் வேண்டும்
பசித்தவனை பார்க்காத உலகை
படைத்திட வேண்டும்..
ரசிகனென மாறி பிரபஞ்ச
ரம்மியங்கள் ரகசியங்கள்
சுவைத்திட வேண்டும்..
இளைய கன்னிகள் பார்வையில்
இளகிடும் உள்ளம் வேண்டும்
இறந்து ஒருமுறை மீண்டும்
இல்லாள் மடியில் உயிர்த்திட வேண்டும்..
திறந்த நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நிலையில் முகம்
எப்பொழுது இருக்க வேண்டும்
பிறந்த குழந்தை மனம்
பெரிய வயதிலும் வேண்டும்
பேர்கெடாத வாழ்கை வேண்டும்
பேர்கெட்டு போனாலும் இந்த
பேருலகம் தூய்மையுற
குப்பை தொட்டியாகவேனும்
இருந்திட வேண்டும்..
Bookmarks