அன்று..
கலப்பை தோளில் ஏந்தி..
களம் நிறைய நெல்மணிகள்..
கொள்முதலில் தில்லுமுல்-அரைவயிறை
அவசரமாய் நிரப்பினோம்!!
இன்று..
கலப்பைகள்
கால்நீட்டியபடி..
களங்கள் கண்ணீர்விட்டபடி..
ஏர்பூட்டிட ஏற்றம் இறைத்திட
ஏக்கமாய் நாங்கள்..
கால்வயிறை நிரப்பிக் கொள்கிறோம்..
விறகாய் கலப்பை...
அரிசியாய் விதைநெல்!!!
நாளை..
இல்லாத இரத்தத்தை
சுரண்டி சுரண்டி
தானம் செய்யப் போகிறேன்..
சுரண்டலால் வறண்டுபோன
எங்கள் வயிற்றில் பால்(லிடாயில்)
வார்க்க!!!
Bookmarks