எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் இருந்தாலும் மன்ற கவிஞர்களின் திறமையில் எனக்கு அபார நம்பிக்கை அதனால் இந்தத் திரியைத் துவங்குகின்றேன்.
ஏற்கெனவே கவிச்சமர் ... சொற்சிலம்பம் ..... நிழலுக்கு உயிர் என பல கவிதைத் திரிகள் வெற்றியோடு வலம் வருகிறது. அந்த வரிசையில் இது என் ஒரு புது முயற்சி என்றாலும். நம் தமிழுக்கு இது மிக மிகப் பழையது.
ஈற்றடி கொண்டு கவிதை படைப்பது...
அதாவது ஒரு வரி (அ) அடி ஒருவர் கொடுக்க கவிதை எழுதுபவர் கவிதையின் கடைசி வரி அந்த வரியாக வருமாறு எழுத வேண்டும்.
கவிச்சமரில் முதலாமவரின் இறுதி வரி அல்லது வார்த்தையை வைத்து கவிதையை துவங்குவோம். இங்கே கொடுக்கப் படும் வரியை இறுதி வரியாகக் கொள்ள வேண்டும்.
நன்றாகக் கவனியுங்கள் இறுதி வரி ... வார்த்தையல்ல.
ஒருவர் கவிதை எழுதி விட்டால் அடுத்த கவிதைக்கான வரியை அவரே தரவேண்டும்.
இப்படியாகத் தொடரவேண்டும்....
கவிதைகள் எதைப்பற்றியும் இருக்கலாம்...
இரண்டே இரண்டு விதிகள்.
1. கவிதை குறைந்த பட்சம் நான்கு வரிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
2. இறுதி வரி முதலாமவர் கொடுத்த வரியாக இருக்க வேண்டும். இறுதி வரி கவிதைக்கு பொருத்தமாக இருக்க வேண்டும்.
அவ்வளவு தான் களம் புகலாமா?
ஏடும் எழுத்தாணியும் தயாரா கவிஞர்களே....
முதல் கவிதைக்கான ஈற்றடியை நானே கொடுக்கிறேன்.
முதல் கவிதை மன்றத்திற்கே ....
"களம் தந்தாய் தமிழ் மன்றமே...!"
இந்த அடியில் முடிவதாகக் கவிதை இருக்க வேண்டும்...
Bookmarks