Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: ஈற்றடி கொ(க)ண்டு கவிபடி ........

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0

    ஈற்றடி கொ(க)ண்டு கவிபடி ........

    எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் இருந்தாலும் மன்ற கவிஞர்களின் திறமையில் எனக்கு அபார நம்பிக்கை அதனால் இந்தத் திரியைத் துவங்குகின்றேன்.

    ஏற்கெனவே கவிச்சமர் ... சொற்சிலம்பம் ..... நிழலுக்கு உயிர் என பல கவிதைத் திரிகள் வெற்றியோடு வலம் வருகிறது. அந்த வரிசையில் இது என் ஒரு புது முயற்சி என்றாலும். நம் தமிழுக்கு இது மிக மிகப் பழையது.

    ஈற்றடி கொண்டு கவிதை படைப்பது...

    அதாவது ஒரு வரி (அ) அடி ஒருவர் கொடுக்க கவிதை எழுதுபவர் கவிதையின் கடைசி வரி அந்த வரியாக வருமாறு எழுத வேண்டும்.

    கவிச்சமரில் முதலாமவரின் இறுதி வரி அல்லது வார்த்தையை வைத்து கவிதையை துவங்குவோம். இங்கே கொடுக்கப் படும் வரியை இறுதி வரியாகக் கொள்ள வேண்டும்.

    நன்றாகக் கவனியுங்கள் இறுதி வரி ... வார்த்தையல்ல.

    ஒருவர் கவிதை எழுதி விட்டால் அடுத்த கவிதைக்கான வரியை அவரே தரவேண்டும்.

    இப்படியாகத் தொடரவேண்டும்....

    கவிதைகள் எதைப்பற்றியும் இருக்கலாம்...
    இரண்டே இரண்டு விதிகள்.

    1. கவிதை குறைந்த பட்சம் நான்கு வரிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
    2. இறுதி வரி முதலாமவர் கொடுத்த வரியாக இருக்க வேண்டும். இறுதி வரி கவிதைக்கு பொருத்தமாக இருக்க வேண்டும்.


    அவ்வளவு தான் களம் புகலாமா?

    ஏடும் எழுத்தாணியும் தயாரா கவிஞர்களே....

    முதல் கவிதைக்கான ஈற்றடியை நானே கொடுக்கிறேன்.

    முதல் கவிதை மன்றத்திற்கே ....


    "களம் தந்தாய் தமிழ் மன்றமே...!"

    இந்த அடியில் முடிவதாகக் கவிதை இருக்க வேண்டும்...
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வெற்று நிமிடங்களை வேதனையில் கழித்து
    பற்றிக்கொள்ள கொழுவில்லா
    ஒற்றைக்கொடியாய் ஊசலாடியபோது
    உற்ற உறவுகளை பெற்று மகிழ்ந்திட
    உளம் நிறைந்து உணர்வு பகிர்ந்திட
    களம் தந்தாய் தமிழ் மன்றமே.....!

    அடுத்த ஈற்றடி "தினம் தினம் கிரகணமே"
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் செல்வா.. புதுமை என்றும் தமிழ்மன்றத்திற்கே சொந்தம்...

    எம்மைப் போன்ற இளங்கவிகளுக்கும்
    உம்மைப் போன்ற இலக்கியப் பேராளிகளுக்கும்
    களம் தந்தாய் தமிழ்மன்றமே!!!

    ஏதோ நம்மளால முடிஞ்சது.!!!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வெற்று நிமிடங்களை வேதனையில் கழித்து
    பற்றிக்கொள்ள கொழுவில்லா
    ஒற்றைக்கொடியாய் ஊசலாடியபோது
    உற்ற உறவுகளை பெற்று மகிழ்ந்திட
    உளம் நிறைந்து உணர்வு பகிர்ந்திட
    களம் தந்தாய் தமிழ் மன்றமே.....!

    அடுத்த ஈற்றடி "தினம் தினம் கிரகணமே"
    அருமை!!!

    சொல்லத் தவிப்பதை சொல்லத்தகுந்தவர் சொல்லும்போது எனக்குச் சொல்ல வார்த்தை இல்லை திரு.சிவா.ஜி.

    இம்மாதிரி அடிகள் எதுகை மோனைகளுக்கான பயிற்சியாக இருக்கும்... என்பது என் கருத்து.

    தொடருங்கள்......

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி தென்றல். அடுத்த ஈற்றடிக்கு..பொருத்தக் கவியை நீங்களே புனையலாமே...?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வெற்று நிமிடங்களை வேதனையில் கழித்து
    பற்றிக்கொள்ள கொழுவில்லா
    ஒற்றைக்கொடியாய் ஊசலாடியபோது
    உற்ற உறவுகளை பெற்று மகிழ்ந்திட
    உளம் நிறைந்து உணர்வு பகிர்ந்திட
    களம் தந்தாய் தமிழ் மன்றமே.....!

    அடுத்த ஈற்றடி "தினம் தினம் கிரகணமே"
    ஆகா... முதல் கவியே சகலகலா வல்லவரிடமிருந்து.....
    நன்றி அண்ணா.... ரொம்ப நல்லா வந்திருக்கு.

    வாழ்த்துக்கள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by தென்றல் View Post
    அருமை!!!

    சொல்லத் தவிப்பதை சொல்லத்தகுந்தவர் சொல்லும்போது எனக்குச் சொல்ல வார்த்தை இல்லை திரு.சிவா.ஜி.
    அதே அதே..... இந்த வரி எனக்கும் பொருத்தம்... தொடருங்கள்....

    அடுத்த ஈற்றடி

    தினம் தினம் கிரகணமே

    இதில் முடியுங்கள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நன்றி தென்றல். அடுத்த ஈற்றடிக்கு..பொருத்தக் கவியை நீங்களே புனையலாமே...?
    புனைவில் பொருத்தமானவளாக என்றும் எனதெண்ணம் பொருத்தப்படவில்லை. விண்டு நிற்கும் சொற்சிதறல்களைச் சேகரித்து அழகுபார்க்க நினைக்கமட்டுமே துள்ளுகிறேன் என்பதால் திறம் மிகுந்த நீங்கள் நடத்துங்கள் கச்சேரி. ஓரத்தூணைப் பிடியாக்கி, விரலை நாணத்தோடு கடித்து பார்வையிடுகிறேன்.

    ம்ம்ம்... கிளப்புங்கள்>>!!!

    (முதல் கவிதை மட்டும் எழுதலாம்னு நினைச்சேன்.. வெச்சிட்டீங்களே ஆப்பு!!!! )

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    அதே அதே..... இந்த வரி எனக்கும் பொருத்தம்... தொடருங்கள்....

    அடுத்த ஈற்றடி

    தினம் தினம் கிரகணமே

    இதில் முடியுங்கள்.
    இன்ன்னும் யாரும் வரவில்லையா?

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    அவன் அவளை நோக்க
    அவர்கள் அவனை நோக்க
    அதன்பின் அவர்கள் நொக்க
    பாவம் கவிதை எழுத ஆசைப்பட்டு
    கவிதாவை நோக்கிய கரணுக்கு-இனி
    தினம் தினம் கிரகணமே...!!

    ((முடில்ல.....அண்ணா... ரொம்ப கஸ்டபடுத்திட்டீங்கன்னு சொல்லலை கற்பனை வத்திப்போச்சுன்னு சொல்லுறேன்.. உங்களுக்கல்ல.. எனக்கு...))

    சரி...அடுத்த ஈற்றடிக்கு தென்றலை அழைப்போமா..??

    "தென்றல் காற்றும் தென்னங்கீற்றும்"
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    சளசளவென
    வம்பு பேசி
    ஊரெங்கும் நம்காதலை
    சொல்லிக் கொண்டிருக்கின்றன
    தென்றல் காற்றும் தென்னங்கீற்றும்.

    அடுத்த ஈற்றடி..

    ஈரத்தில் நனைந்த கனவு
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    முதிர்ந்த மோகத்தில் அவன்
    மூச்சுக்காற்றில் அவளின்
    நெளிகுழல் மேலும் நெளிந்து நெகிழ
    நம்மைப்போலவே அவர்களென
    நமுட்டுச் சிரிப்பு சிரிக்கின்றன
    தென்றல் காற்றும் தென்னங்கீற்றும்...!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •