ஆஹா...தாமரை முந்திட்டார். சரி என்னுடைய கவிதை இருக்கட்டுமா எடுத்துவிடட்டுமா?
ஆஹா...தாமரை முந்திட்டார். சரி என்னுடைய கவிதை இருக்கட்டுமா எடுத்துவிடட்டுமா?
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
இருக்கட்டும். ஈரத்தில் நனைந்த கனவு.. பாடுங்க
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
என்னை விட்டு
நிழலாய் நீ பிரிந்திருந்தாலும்
நிஜமாய் வாழ்கிறது
உனக்கு பிடித்த பாடலை
என் உதடுகள்
முணுமுணுக்கும் பொழுதும்
கண்ணாடியில் தெரிந்து
மறையும்
உன் பிம்பம் சொல்கிறது
நம் காதலை கண்ணீருடன்
ஈரத்தில் நினைந்த கனவென்று......
அடுத்த ஈற்றடி
மரகிளையிலிருந்து உதிர்ந்த சிறகாய்
வெட்டிய காட்டின்
மொட்டை நிலங்களில்
எழுந்த கான்க்ரிட் வெளிகளில்
விழுந்த மழைத்துளிகளுக்கும்
கால்சுட்டன...
நிழல் காலணி தயாரிக்கும்
நினைப்புகள் அந்த
சூட்டில் வெந்தன..
இலை விரித்தாடி
தலை குளிக்க இயலாததால்
காய்ந்த மணம் வீசியது
மரக்கட்டையின்
ஈரத்தில் நனைந்த கனவு..
அடுத்த ஈற்றடி..
எழுதிட ஈற்றடி இந்தா..
Last edited by ஆதி; 10-09-2008 at 12:54 PM.
அன்புடன் ஆதி
நற்றமிழில் கவி பயில
களம் தந்த தமிழ் மன்றம்
நல்லதொரு கவி நான் பயில
வள்ளல் ஆதன் சற்றேனும் சளைக்காமல்
எழுதிட அடி ஈந்தார்
எழுதிட ஈற்றடி இந்தா..
அடுத்த ஈற்றடி வளர்க என் கன்னி தமிழே
அல்லடி நீ
அள்ளடி
வெல்லடி....!
சொல்லடி தெள்ளடி
சொல்லாதடி பொல்லடி
என்னடி கொல்லடி
எண்ணடி கொள்ளடி....!
வளர்க*
என் கன்னி
தமிழே..
தொடர்க...
என் சுவ(ட) டி..
.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks