மிஞ்சும் பஞ்சும்
மிஞ்சும் வெஞ்சினத்தால்
கஞ்சம் துஞ்சும்
வஞ்சியரைக் காண்கையில்..
மிஞ்சும் பஞ்சும்
மிஞ்சும் வெஞ்சினத்தால்
கஞ்சம் துஞ்சும்
வஞ்சியரைக் காண்கையில்..
காண்கையில்
என்
கண்ணிரண்டும் கலங்குதடி
என் தாய் தமிழ் மக்கள்
நிலை கண்டு
உதிரம் கொதிக்குதடி
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
உதிரம் கொதிக்குதடி...
முழுநிலா
உந்தன் நெற்றிச் சுட்டி..
நட்சத்திரங்கள்
உந்தன் ஒட்டியானம்..
விடிவெள்ளி
உந்தன் மூக்குத்தி...
சூரியன்
உந்தன் அட்டிகை...
என்ன பிரயோசனம்
இருண்டு கிடக்கிறது வானம்..
(நலமா சுட்டி)
வானம் இருண்டு கிடக்கிறது
நிலவற்று
அதே போல்
என் மணமும் இருண்டு
கிடக்கிறது
நீயற்று
அமரா நான் நல்லா இருக்கேன், ரொம்ப நாளாய்ச்சு உங்களை எல்லாம் சந்தித்து, சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
நீயற்றுப் போனதில்
அற்றுப் போனவை
ஒவ்வொன்றாய்
பற்றிப் போட்டவை
இந்தக் கவிதைகள்..!!
(நலமறிந்து மகிழ்ச்சி சுட்டி, நேரம் கிடைக்கையிலெல்லாம் வந்திட்டுப் போங்கோ)
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
கவிதைகள் சொல்ல
வார்த்தைகள் தேவையல்ல
உந்தன் மௌனமே போதும்
ஓவியரே தாங்கள் எப்படி இருக்கிறீர்கள், உங்கள் சித்த படியே நடக்கட்டும்
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
போதும்,
போதும்
இப்படி எழுதியது
இனிப் போதும்..!!
வேண்டும்
வேண்டும்
விரைவில்
அது வேண்டும்..!!
(உடலளவில் நான் நலம்தான் சுட்டி, மனதின் காயங்களுக்கு மருந்து தேடிக் கொண்டிருக்கின்றேன் நம்மில் பலரைப் போலவே..)
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
வேண்டும் ஓர் மருந்து
என் நண்பனின்
மனக்காயங்களுக்கு
கோடிகள் நன்றிகள்
சொல்வேன் இறைவனுக்கு.
உங்களை போல்தான் எனக்கும், என்ன செய்வது உலகத்தில் மனிதனாக அதுவும் தமிழனாக பிறந்து விட்டோமே
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
இறைவன் இருக்கின்றான் நம் இதய மூலையிலே
முழுதும் விரிகின்றான் அவனை உணரும் வேளையிலே
கன்னி பெண்களிலும் கண்ணீர் விழிகளும்
தண்ணீர் பூக்களிலும் தாரகை கூட்டத்திலும்
முந்நீர் கடலிலும் மூங்கில் காட்டினிலும்
முகிழ்ந்து இருக்கின்றான் முகைந்து சிரிக்கின்றான்
இறைவன் இருக்கின்றான் நம் இதய மூலையிலே
முழுதும் விரிகின்றான் அவனை உணரும் வேளையிலே
குழந்தை தொட்டிலிலும் காமக் கட்டிலிலும்
தாகச் சொட்டினிலும் மயக்கும் மொட்டினிலும்
பிச்சை வட்டினிலும் பிரிவு வெட்டினிலும்
தானாய் இருக்கின்றான் தர்மம் செய்கின்றான்
இறைவன் இருக்கின்றான் நம் இதய மூலையிலே
முழுதும் விரிகின்றான் அவனை உணரும் வேளையிலே
அன்புடன் ஆதி
அவனை உணரும் வேளையிலே மனக்
கவலை உலரும் நீயறிவாய்...
அவனியொன்றும் பசுஞ்சோலை இல்லை நிதம்
பவனிவரும் நெடுஞ் சாலையில்லை...
முள்ளும் மலரும் பாதையிலெ கடும்
பள்ளம் மேடுண்டு போகையிலே....
சோதனை வென்றவர் வாகையிட்டார் உளம்
வேதனை கொண்டவர் சோகையுற்றார்....
நீயிந்த நீதியை உணர்ந்துவிட்டாய் எனில்
நோயின்றி நீடித்து வாழ்ந்திடு வாய்....!
வாய்கால்
கால்வாயென,
புரட்டிப் போட்டாலும்
ஒரு பொருள் தந்து
வாழ்வோமே வாழ்வாங்கு..!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
வாழ்வாங்கு வாழ்ந்தவரெல்லாம்
ஓய்வாகிப் போவது
காலத்தின் கட்டாயம்....இதில்
தாழ்ந்தாரை தரைமிதித்து
வாழ்ந்தாரெவருமிலர்....
கிட்டிய கட்டுச்சோற்றை
ஒட்டிய வயிற்றுக்குமீந்து
வெட்டியான வாழ்க்கையை
கெட்டியாக்கி வாழ்வோம்....
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks