மடியில்
வீழ்ந்து கொண்டிருக்கும்
பூக்கள் மணக்கவில்லை..
உன் ஒரு வார்த்தை
உளியால்
சற்று முன் மரணித்த
மனதின் மேல்
அஞ்சலிக்காக தூவப்பட்டது
தென்றலால் அவை..
மடியில்
வீழ்ந்து கொண்டிருக்கும்
பூக்கள் மணக்கவில்லை..
உன் ஒரு வார்த்தை
உளியால்
சற்று முன் மரணித்த
மனதின் மேல்
அஞ்சலிக்காக தூவப்பட்டது
தென்றலால் அவை..
தென்றலால் அவை
மிதந்து வந்து என் நாசியில் நுழைந்த அது
உனதில்லை என்றாலும்
நம்பவேயில்லை என் மனம்.
உன் மேனியில் பவுடரின் மணம்
பவுடரின் மணமா?
கதக்கிய பாலில் மணமா?
பேபி லோசனின் மணமா?
மஞ்சள்பூலாங்கிழங்கின் மணமா?
சாம்பிராணி மணமா?
எல்லாமும் சேர்ந்ததொரு
குட்டிச்சட்டையொன்றை
கைப்பையில் பத்திரமாய்...
அடுத்த விடுமுறையில்
பல்லு மொளைச்சிருக்கும்...
பேசத் தொடங்கிருக்கும்...
அப்பான்னு கூப்பிடுமா?
அங்கிள்னு கூப்பிடுமா?
அவன் பெத்த பிள்ள?
அதுவரைக்கும்
அத்தனை முத்தமும்....
அந்த சட்டைக்குத்தான்.
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
அந்த சட்டைக்குத்தான்
சாயமில்லை.
பொத்தான் பாதியில்லை .
அக்குளில் கிழிசல்கள்.
தாயின் கண்ணீரை மட்டும் நிறைக்கும் சட்டைபைகள்.
சட்டையோ பட்டுதுணிகளின் இடுக்கில் .
உரியவனோ மண்ணுக்கடியில்
Last edited by ஷாஜஹான்; 01-11-2010 at 12:00 PM.
மண்ணுக்கடியில் கிடக்கும்
கிடைக்க மறுக்கும்
நீர் புதையலின் கரங்கள் நீள்கின்றன
புறக்கணிக்கப்பட்ட
குழந்தையின் சிரிப்பை ஏந்த.
குழந்தையின் சிரிப்பை ஏந்த
ஒரு அன்னையின்
அரவனைப்பு அதில் சேர;
அர்ச்சனை போட்டால்
கையில் திறுநீரு;
வேலை செய்தால்
வாயில் சுடு சோறு;.......
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
சுடுசோறும் சுண்டைக்காய் குழம்பும்
ஆவி பறக்க தட்டிலிட்டுப் பிசைந்து
கவளமொன்றைக் கையிலே அள்ளி
நீட்டுகிறாள் அம்மா!
ஆவென்று வாய்பிளந்து ஏற்ற அடுத்தநொடி...
ஆ.... உறைக்கிறதே என்றலற...
அத்தனைக்கனவும் கலைய....
அப்போதுதான் உண்மையில் உறைக்கிறது...
அங்கே சுடு சோறுமில்லை,
ஊட்ட அன்புத் தாயுமில்லை என்பது!
தாயுமில்லை என்பது
தெரியவில்லை மாலை ஆறு வரை...
செய்திதாள் இலவச இணைப்பு (புத்தகம்)
ஞாயிறுகளில் தந்தை...
மூட்டு வலியும் டிவி சீரியலும் பாகம் கேட்க,
பாட்டி தாத்தாவும் பந்தமில்லை.
மதியம் இரண்டு முதல் ஐந்து வரை
தூக்கம் கூட துணையில்லை.
எத்தனை நாள் சிரிக்கும் குழந்தை..?
அசையும் பொம்மையை பார்த்து...!!!
Last edited by ஷாஜஹான்; 07-11-2010 at 09:54 AM. Reason: spelling mistakes
பொம்மையை பார்த்து,
பொறாமைப்பட்டேன்,
அழகாக இருக்கிறாயே
என்றல்ல,
என்னை விட அதிகமாக
என்னவள் மடியில்
இருக்கிறாயே என...!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
இருக்கிறாயே என நினைத்து
விலகிப் போகிறேன்
உன்னருகில் என்னை விட்டுவிட்டு...
என்னை உடைத்து வரும்
ஏதேதோ நினைவுகளைத் திரட்டியொரு
போராய்தம் செய்கிறாய்..
திரும்பி நின்று
சுவடுகளைச் சுரண்டி எடுத்து
போர்க்கோலம் எய்துகிறாய்..
முதுகைத் தட்டும்
மணத்தின் கழுத்தை நெரித்து
போர் முழக்கம் எய்கிறாய்.
மௌனம் தரித்தவனாய்
எதிர்கொள்கிறேன்
நீ பெய்யும் சரமாரியை..
வெறுமை ஏந்தும் என் விழிகளில்
காணாமல் நீ போகிறாய் ..
பட்டுத் தெறித்த
சரத்துளிகள் பட்டுச் சரியுமவள்
தவிர்க்கிறாள் சாய்வை..
இப்போது நீ
விலகிப் போகிறாய்
என்னை விட்டு!
மணத்தின் போக்கில்
மனம் போய்க்கொண்டே
இருக்கிறது
இன்றும் ஒருமுறை!
உணர்வுகள் மலர
மலர்வனமாக
ஆகிறது
மீண்டும் ஒருமுறை!
அந்த பாதையில்
நான் அவளை
தொடர்ந்து தொடர்கிறேன்...!
தொடர்ந்துகொண்டே இருக்கிறேன்...!
எப்போதுமே பார்வை திருப்பாமல்
சென்று கொண்டிருக்கிறாள்
உடன் தொடர்கிறது மணமும்...
என்றோ ஒருநாள்
பார்வை திருப்ப போகிறாள்
என் மனமும் மணம் பரப்ப
காத்திருக்கிறது...!
துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!
உணர்வுகளில் உனது பெயர்
ஒட்டிக்கொண்டது
அந்த மயக்கத்திலே எனது மனம்
தத்தளிக்குது
Last edited by வல்லம் தமிழ்; 11-11-2010 at 02:21 PM. Reason: to delete
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks