காத்திருக்கிறேன் என
கண்ணீர் மல்க
செவ்விதழ் கூப்பி
முத்தமிட்டென்னை வழியனுப்பிய
ஆருயிர்க் குழந்தைக்காய்
உடலை உரசிச் செல்லும்
சன்னங்களுக்கிடையே
உயிரைத் தேக்கி
காத்திருக்கிறேன்

விடியலை நோக்கி..!