வரை ஒரு
படத்தை அதில்
எனக்கு தந்த
இனிய
வாழ்க்கையே
என் அன்னையின்
அழகிய முகத்தை...
வரை ஒரு
படத்தை அதில்
எனக்கு தந்த
இனிய
வாழ்க்கையே
என் அன்னையின்
அழகிய முகத்தை...
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
அழகிய முகத்தை
ஒரு தடவை பார்க்க
வரம் கொடுப்பாயா
என் அன்னையே,
மீண்டும் ஓர்
பிறவியிலாவது....
விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்
மீண்டும் ஓர்
பிறவியிலாவது,
தமிழனாய்ப் பிறக்க ஆசை..,
தமிழருக்குரித்தான
தனித் தேசத்தில்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
தேசத்தின் தேகத்தில் ஆங்காங்கே சேதம்
இயற்கைக் கிள்ளியெடுக்கும் பள்ளங்களும்
இங்கிருப்போர் அள்ளியெடுக்கும் பள்ளங்களுமாய்,
இனி இந்நிலம் நிலையாகுமா...
இல்லை இதுவேதான் இதன் நிலையாகுமா?
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நிலையாகுமா
என்ன அது
பைசா கோபுரமா
நாம் நாட்டின் உள்ள
முக்கிய நகரத்தின்
உயிர் நாடி
கிராமமே!!
அதற்கு உழவு த்தொழில்
அதுவே என் உணவு பெற
வழி..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
வழிகளில் வழியுது
வலியது
களியொடு களியும்
வழியுது
கழிந்திடினும்
அழித்திடும் பசிதனை
மாத்திரை..
மாத்திரை முக்கியம்
நாழிதனை போற்றும்
பயன்கோல் யாதலின்
இங்கு நாம்
வாழும் வாழ்வே
ஜீவன்முக்தி..
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
முக்தி மூட்டிய தீயில்
வெந்து கருகின
பச்சைக் குழந்தைகளின் ஆசைகளும்
பாவையர் பலரின் பருவங்களும்..
பருவங்களும் அதன்
பலவீனங்களும் அறிந்து
நடந்தால் துன்பமில்லை
பலரின் பார்வையில்..
நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.
பார்வையில் தோற்றதொரு
தோற்றப் பிழை..
கானலெனத் தெரிந்த அதுவோ
நெருக்கம் கூட
நெஞ்சம் நனைத்து
உள்ளம் குளிர்த்தது..
வாழ்க
தோற்றப் பிழைகள்..!
பிழைகள் இறைந்ததுமாய்
உதிர்ந்து உயிர்விடத் தயாராய்
அழிந்து போன பென்சில் தடங்களுடன்
மக்கத்துவங்கிய மரவாசனையுடன்
பாதுகாக்கப்படுகின்றன
அனேகமாய் அனைவரின் வீடுகளிலும்
கடிதங்களோ...கவிதைகளோ
கிறுக்கல்களோ...
புத்தகங்களோ...புகைப்படங்களோ...
பக்கங்களில் உறைந்து
பதமான காலங்கள்....
காகிதத்தில் சிறைப்பட்ட
கடந்த காலங்கள்...
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
காலங்கள் கடந்தபின்னும்
காலாவதியாகாத
கணக்குகளும் வழக்குகளும்
கவன இருப்பிலிருந்து மறைவதேயில்லை!
கள்ளிப்பெட்டியில் பத்திரப்படுத்தப்பட்டு
பூசைக்கு மட்டுமே பூமி பார்க்கும்
ஆயுதங்களைப்போலவே
அவையும் ஆழ்மனதில்
பம்மிப் பதுங்கி
தக்க நேரத்துக்குத் தவமிருக்கின்றன!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks