காத்திருக்கிறேன் என
கண்ணீர் மல்க
செவ்விதழ் கூப்பி
முத்தமிட்டென்னை வழியனுப்பிய
ஆருயிர்க் குழந்தைக்காய்
உடலை உரசிச் செல்லும்
சன்னங்களுக்கிடையே
உயிரைத் தேக்கி
காத்திருக்கிறேன்
விடியலை நோக்கி..!
காத்திருக்கிறேன் என
கண்ணீர் மல்க
செவ்விதழ் கூப்பி
முத்தமிட்டென்னை வழியனுப்பிய
ஆருயிர்க் குழந்தைக்காய்
உடலை உரசிச் செல்லும்
சன்னங்களுக்கிடையே
உயிரைத் தேக்கி
காத்திருக்கிறேன்
விடியலை நோக்கி..!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
விடியலை நோக்கி
ஓட்டிக் களைத்து
உறங்கிக் கிடக்கிறேன்
விடிந்தது தெரியாமல்..!
சூரியன்
முழித்துக்கொண்டு
வெளியே வரத்துடிக்கிறது!!!
மேகம் தண்ணீர் அடித்துவிட்டு
சூரியனை மறைக்கிறது!!!
மப்பு அதிகமாகி
மழையாக வாந்தியெடித்து
சூரியனுக்கு வழிவிட்டது!!!
Last edited by ஆதி; 30-04-2015 at 11:14 AM. Reason: to remove duplicate post
வழிவிட்டது விதியென
விதி மீது பழியிட்டு
தரை மீது தலைவைத்து
கண்ணீரைக் கரைப்பதில்
கரைந்திடாது கயவர்கள்
கல்மனம்.!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கல்மனம் எல்லோருக்குமானது
மனிதர்களுக்கு ஏற்ப உருமாறி கொள்வது
கல்மனம் கடவுளாகவும்
சாத்தானகவும் இருக்க தெரிந்தது
கல்மனம் ஞானத்தையும்
இறுன்மையும் அடர்ந்தது
எப்போதாவது பெய்யும் ஒரு மழையில்
கொஞ்சம் இளகும்
மீள ஒரு வெயிலில்
இன்னும் வலுவாக இறுகும்
நிலையாக இறுகியோ
நிலையாக நெகிழ்ந்தோ
இருப்பதில்லை ஒரு கல்மனம்
கல்மனம் ஒன்று
தெருவோரம் கிடந்தது
இரத்தக் கறையுடன்..
அதன் அருகில்
உடைந்த கண்ணாடி மரத்தின் துண்டுகள்
ஈரம் காய்ந்த இரத்தத்துடன்..
அவற்றுடன்
சேர்ந்து கிடந்தன பறவைச் செட்டைகள்..
பயணிகள் யாவரும்
கல்மனம் மேல்
கல்லெறிந்து கடந்தனர்..!
அவர்கள். கண்டதில்லை
தூரத்திலிருந்து பார்க்கும்
பறவையின் கண்ணில் கண்ணீர்
கல்லெறி கண்டு..
கல்லெறி கண்டு
கலங்கிய விழிகளில்
ஆயிரமாயிரம் விடையறியா
கேள்விகளை கண்டுகொள்ள
யாருமில்லை...!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
கூட வருபவர்களின்
வெற்றி முழக்கம்
குறையத் தொடங்கியது
சாப்பாட்டு நேரம்!
Last edited by கீதம்; 13-05-2015 at 10:24 AM. Reason: இரட்டைப்பதிவு
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
நேரத்தின் பிடியினில்
அகப்பட்டிட்ட விட்டில்
பூச்சிகள் நாங்கள்...!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நாங்கள் பயனின்மையில் கிடக்கும் வெட்டிகள்
எங்கள் திணவு
எங்கள் கூர்மை
எங்கள் வலிமை
எங்கள் பாய்ச்சில்
உதாசீனங்களின் நிலத்தில் துருயேறிக்கிடக்கிறது
தூசியாய் படர்ந்திருக்கும் பல ஆண்டு
பயனின்மையை சந்திக்கும் யாருமே
எங்களை தவிர்க்கத்தான் முயல்கிறார்கள்
அவர்கள் வேலையற்ற சோம்பேறிகள் என்பதை பிரதிபளித்து
குற்ற உணர்ச்சியை தூண்டும் உருத்தல்களாய்
நாங்கள் இருப்பதாய் எண்ணி
எங்கள் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள்
அப்போதெல்லாம்
நாங்கள் மேலும் கூர்மழுங்கி போகிறோம்
Last edited by jaffy; 15-05-2015 at 12:31 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks