எங்கு தொடங்கி எங்கு முடிப்பதென தெரியவில்லை இருந்தாலும்.. இக் கவி படித்த போது மனதில் ஓடிய எண்ணங்களின் தொடர்ச்சி
கடந்து போன காலங்களில்
கலையாத உன் நினைவுகளால்
செல்லரித்துப் போனது
என் வாழ்வும்..!
எங்கு தொடங்கி எங்கு முடிப்பதென தெரியவில்லை இருந்தாலும்.. இக் கவி படித்த போது மனதில் ஓடிய எண்ணங்களின் தொடர்ச்சி
கடந்து போன காலங்களில்
கலையாத உன் நினைவுகளால்
செல்லரித்துப் போனது
என் வாழ்வும்..!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
என் வாழ்வும் என் பயணமும்
உன்னோடே இருக்கின்றது
என் நலமும், என் வளமும்
உன்னிலிருந்தே கிடைக்கப் பெறுகிறது
என் சுகமும் என் சோகமும்
உன் சுழற்வின் தெறிப்பிலிருந்தே
கிடைக்கப் பெற்றேன்.
எனக்கான யாவும்
உன் மடியில்
உன் மார்பின் அரவணைப்பில்
உன் முத்தத்தின் வெதுவெதுப்பில்
உன் விரல் பிடித்து நடக்கும்
சிறுகுழந்தையின் அடம் போல
கிடைக்கிறது
என் அன்னையே,
ஒரு நாயின் சோம்பல் முறிவென
சிலமுறை சிலுப்பி விடுகிறாய்
உதிர்ந்து விழுகிறேன்
உதிர்கால நெடுமரம் போல
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
நிற்கின்றேன் உன்
முன்னாள் என்
கனவுகளை உன்
கனவுகளோடு சங்கமித்து
ஈருயிர் கொண்டு
ஓருயிர் சுமக்க..!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
அடி புவிப்பெண்ணே
நீ எத்தனை முறை
என்னை வெறுத்தாலும்
என்னை அடித்தாலும்
என்னை திட்டினாலும்
நான் உன் பின்னால்
நீ என் காதலுக்கு
சரி என்று சொல்லும் வரையிலும்
தொடருந்து வருவேன்!!!
Last edited by ஆதி; 30-04-2015 at 11:17 AM. Reason: To remove duplicate post
சுமக்கிறேன்
எப்போதும் ஒரு வறண்ட பூமியை
அதன் வெளியில்
சரலை கற்களும் ஒரு முள் மரமும்
விரிந்திருக்கிறது
இனி எதற்கும் உதவாது
என்றாகிவிட்டது இந்த பூமி
ஆனாலும் ஒரு பொக்கிசத்தை போலவே வைத்திருக்கிறேன் அதனை.
பலர் என்னுடைய செயலை ஏளனம் செய்கிறார்கள்
என்னை முட்டாள் என்கிறார்கள்
என்றாலும் எனக்கு இந்த பூமியை உதர மனமில்லை
எப்படியாவது ஒரு மழையை உருவாக்கி
இந்த பூமியை அதில்
நனைத்து
ஒரு புல்லையாவது துளிர்க்க வைத்து விட வேண்டும்
அப்புறம் இந்த பூமியை
யாருக்காவது கையளித்துவிடலாம்
(மன்னிக்க, சுமக்க எனும் சொல்லை அடி சொல்லாக கொண்டு எழுதியது. கவிதை எழுதுவதர்க்குள், இரு கவிதைகள் பதியப்பட்டுவிட்டன, ஆகையால் இந்த கவிதையை, நிராகரிக்கவும்)
Last edited by jaffy; 27-04-2015 at 09:58 AM.
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நினைவாய் எப்பொழுதும்
என் மனதினில்
நான் எது செய்தாலும்
நான் எங்கு சென்றாலும்
நீ என்னை விட்டுவிட்டு
தொலைவில் சென்றாலும்
உன் நினைவாக
இன்றும் வாழ்கிறேன்
தொடர்ந்து வாழ்வேன்!!!
Last edited by ஆதி; 30-04-2015 at 11:18 AM. Reason: To remove duplicate post
தொடர்ந்தும் வாழ்வேன்
உன்னால் நான்
சுமந்திடும் நம்
குழந்தைக்காய்...!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
குழந்தைக்களுக்காய்
அமைந்துவிட்டது இந்த வாழ்வு
என்னை அவர்களுக்கு பெரும்பாலும் பிடித்துவிடுகிறது
பரிட்சயமற்ற குழந்தைகள் கூட
என்னை கடக்கையில்
ஒரு புன்னகையை உதிர்க்க தவறுவதில்லை
என்னிடம் ஒரு மகிழ்ச்சியை
அவர்கள் சிந்திப்பதாகவே தோன்றுகிறது
இந்த வாழ்வு குழந்தைகளுக்கானது
என்று நான் உணர்ந்த/கருதிய பிறகு
ஒரு கூடை நிறைய புன்னகையை
ஒரு கூடை நிறைய மகிழ்ச்சியை
ஒரு கூடை நிறைய குதூகலத்தை
எப்போதும் சுமந்தே அலைகிறேன் மனதில்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks