மகிழம் பூ முகம்
தாழம் பூ மனம்
அல்லிப் பூ சிரிப்பு
அந்திமந்தாரை வனப்பு
அகில் தேகம்
வர்ணிப்புகள் வடித்த
கவி மனம்..
ஏங்குவதென்னவோ
வெள்ளை நிற
நெட்டை நங்கைக்கு தான்..
கருப்பிங்கு அவமானம்..
கருப்பழகிகள் நிலையோ
அந்தோ பரிதாபம்..
நகை கூட போட்டால்
கருப்பிங்கு ஏற்பாம்..
நகைக்காய் வாங்கும்
பொருளா பெண்கள்??
வரதட்சணை வடிவம்
வேரோடு பிணைந்து
இப்படி ஒரு நிலை வரலாம்..
பெண் உள்ள வீட்டின் முன்
'பெண்கள் விற்கப்படும்'
பலகையும் மாட்டப்படலாம்..
மாட்டப்படலாம்
கைவிலங்குகள்,
நீதியைப் புறக்கணித்த...
சமூக ஒழுங்கைக் குலைத்த
சண்டாளக்கரங்களில்!
பூட்டப்படலாமோ
கால்விலங்குகள்
சமூகம் புறக்கணித்த...
சுயநிலை உணராப்
பேதையர் கால்தனில்?
கால்தனில் நோவு வரலாமாவென
காதலி நீ வரும் பாதையெல்லாம்
பூக்களால் விரிப்பினை விரித்தேன்.
கண்மணி உன் பாத வனப்பினை
கண்டதும் பூக்களும் கோபத்தில்
சுருங்கி முட்களாய் மாறியதேனடி?
மாறியதேனடி
இனிப்பை எங்கோ
தடம் பதிக்க
காய்ந்து கருகுகின்றேன்.
இன்னுமோர் கருகல்
துளிர்க்காதிருக்க
இனியேனும்
தடம் மாறாதிருக்கட்டும்
உன் தேன் அடி...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அடி கிடைக்கும்!
வாயை மூடு!
ம்!
சத்தம் வரக்கூடாது!
தின்பண்டமோ, விளையாட்டுச்சாமானோ கேட்டு
அடம்பிடித்து அழுது புரளும்போதெல்லாம்
அடித்தோ... அடிப்பேன் என்று மிரட்டியோ
அடக்கி ஒடுக்கும் அம்மா....
தாலியைக் கழட்டிக்கொடுடி...
தண்ணியடிக்கப்போவணும் என்று
தகராறு செய்து அடம்பிடிக்கும்
அப்பாவிடம் மட்டும்
ஆயுதமெடுக்காமல்
அழுது கெஞ்சிக் கால்பிடிப்பதேன்?
பார்த்திருந்த பாலகனுக்கு
விளங்கவேயில்லை முரண்!
முரண்கள் எல்லாம்...
முற்றிலுமாய் விளங்கிப்போனால்
அந்த பாலகனும்
நம்போல் பாடுகள் படக்கூடும்...
விட்டு விடுங்கள்...
அவன் அப்படியே இருக்கட்டும்
யாரும் விளக்க முனையவேண்டாம்...
அடம் பிடித்து அழுதுகொண்டு
அடிவாங்கி பின் அதை மறந்து
அடித்த அம்மாவின் முந்தானையிலேயே
முகம் பதித்துஉறங்கி
முரண்பாடுகள் எதுவுமில்லா
முக்கியப்பருவம் இது...குழந்தைப்பருவம்..
அவனுக்கு விளங்கவே வேண்டாம்
அந்த முரண்.....
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
முரண் படாதபோது
முரண் படுவது
முரண்படுவதா...
முரண்படாததா...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
முரண்படாததாய் எதிலும்
முற்றிலும் புதியதாய்
ஒற்றைச்சிந்தனை ஒன்று
உருவானது...
அதை கவிதையாய்த்தருவதா?
உரைநடையில் உரைப்பதா?
யோசித்து முடிப்பதற்குள்
ஆயிரம் குரல்கள்...
முரண்களின் முடிச்சில்
சிக்கலில் சிந்தனை...
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
சிந்தனைச் சிக்கலிற்
சிக்கியிருந்து
சிந்தித்த சிந்தனை
சிக்கியும் சிக்காமல்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
சிக்காமல் இருக்கணும்
காதலியும்
காதலியின் காதல்
கடிதங்களும்!!
சிக்கினால்
சிக்னலில் தான்
வாழ்க்கை
வாழ்க்கை
அழகை
அழகை அணைத்து
வாழ்வதிலும்
அழ கை அணைக்க
வாழ்வதே
சிறப்பு...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks