நைஞ்சு போன ஆசைகள் சிலவும்
நைவேத்தியம் ஆகின்றன
உன்னைக் காண்கையில்..
அரிசி கிளைஞ்ச கையோடு
கோழி துரத்தும் நீ..
கூட்டி முடிச்ச கையோடு
விளக்குமாறை விசுறும் நீ..
துவைச்ச உடுப்பை
நந்தியாவட்டைப் பூச்செடியின் மேல்
உதறும் நீ..
இப்படி
நைந்து விட்ட ஆசைகள் சிலவும்
நைவேத்தியம் ஆகின்றன
பனிப்புலத்தில் உனைக் காண்கையில்..
Bookmarks