நாட்டைச்
சாவடிக்கப் போகின்றவர்களை
விட்டுத்தள்ளுங்கள்..
உலகைச்
சாவடிக்கப் போகின்றவர்களை
சுட்டுக் கொல்லுங்கள்..
பூமியவள்
உடைந்து அழுகின்றாள் பாருங்கள்.
கண்ணீரில்
மூழ்கிப் போகிறாள் கவனியுங்கள்..
நாட்டைச்
சாவடிக்கப் போகின்றவர்களை
விட்டுத்தள்ளுங்கள்..
உலகைச்
சாவடிக்கப் போகின்றவர்களை
சுட்டுக் கொல்லுங்கள்..
பூமியவள்
உடைந்து அழுகின்றாள் பாருங்கள்.
கண்ணீரில்
மூழ்கிப் போகிறாள் கவனியுங்கள்..
கவனியுங்கள்...
உங்களுக்கு நெருக்கமாய்,
உங்களை ஏக்கமாய்க்
கவனித்தபடி
காத்திருப்போரை...
வீண்விரயமாகும் உணவு,
பலருக்குப் பலநேர உணவாகலாம்...
Last edited by அக்னி; 23-08-2008 at 01:47 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
உணவாகலாம்
பல நூற்றுக்கணக்கான
பசித்தவர்களுக்கு,
விருந்துகளில் நீங்கள்
வீணே சிந்தும்
ஒவ்வோரு கவளமும்..!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஒவ்வோரு கவளமும்
என்னுள் இறங்கும் போது
உன் நினைவு தான் அம்மா
சிறு குழந்தைப் பருவத்தில்
நிலாவைக் காட்டி
எனக்கு கவளம் ஊட்டினாய்
உள்ளங்கையில் கவளம் வைத்து
அதன் நடுவில் குளம்பை ஊற்றி
கதைகள் சொல்லி சாப்பிட வைத்தாய்
நீ முதுமையில் பிணியாகக் கிடந்த போது
ஒரு கவளம் சோற்றைக் கூட
உண்ண முடியாமல் தவித்தாய்
அந்த கவளம் தர முடியாமல் நான் வெந்தேன்
நீ கொடுத்தவை கவளங்கள் அல்ல
பாசத்தோடு நீ கொடுத்த கவசங்கள்
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
கவசங்களை
நீ தான் கொடுத்தாய்
காயங்களாக...
காதலின்மிச்சங்களாக...
காதலின்மிச்சங்களாக,
மிகுந்து போனது,
நினைவுகள்...
கலைந்துவிடாதிருக்கக்
காதலிக்கவில்லை...
தொலைந்துவிடாதிருக்கக்
காவலிருக்கின்றேன்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
காவலிருக்கின்றேன் என்கிறாய்!
யாருமில்லாத வேளைகளிலே
தாவியணைக்கிறேன் என்கிறாய்!
நீ காவலனா?!
இல்லையென் காதலனா?!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
காதலனாய
இருப்பதில் எனக்கொன்றும்
பிரச்னையில்லை...
காவலன் என்ற பொய்யை
மட்டும் விட்டு விடு
பூர்ணிமா
==================
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
ஒலிக்கச் செய்வோம்....
விட்டு விடு
என்றொரு நாள்...
புலம்பியது..
என் கை கடித்து
அகப்பட்ட கட்டெறும்பு..
தீப்பெட்டி இருப்பிடத்தில்..
ஒரு நாள் சிறை வைத்து..
வெளியனுப்ப..
முயல்கையில்..
மீண்டும் கை இறுக்கி
கிடுக்குப் பிடியில் கடித்து
உதறிய கை விட்டு..
ஓடியது..
மாற்ற முடியாதவை
மாறுவதே இல்லை..!!
மாறுவதே இல்லை
மாற்றம் என்பது,
நாம் தான் சில வேளைகளில்
மாற்றத்தை ஏற்க
மறுத்து விடுகிறோம்...
ஆனால்,
மாற்றம் என்பது
காலத்தால், பணியால்
பதவியால் என்று
எதோ ஒரு காரணம் பற்றி
மாறிக் கொண்டேதான்
இருக்கிறது....!!
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
இருக்கிறது
என்பதை உறுதியாகவும்
சொல்ல முடியவில்லை
இல்லை என்று
பொய்யாய் மறுத்துரைக்கவும்
முடியவில்லை
இடையே கண்ணாமூச்சி
காட்டிக் கொண்டிருக்கிறது
நமக்கிடையேயான
காதல்
பூர்ணிமா
==================
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
ஒலிக்கச் செய்வோம்....
நமக்கிடையான காதல்
உன் இடையைப் போல..
நீ சேர்ந்த நானோ
குறுக்குச் சிறுத்தநேரத்து
நினைவுகளில் நனைந்தபடி...
மனதில் உனைத் தைத்தபடி..
Last edited by அமரன்; 23-08-2008 at 10:08 AM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks