நெளிவு சுழிவுகள் அலங்கரித்த
கரிநிறச் சித்திரக்கதை
வண்ணம் பூசிக்கொண்டது
தங்கையின் வார்த்தைகளால் ..
நெளிவு சுழிவுகள் அலங்கரித்த
கரிநிறச் சித்திரக்கதை
வண்ணம் பூசிக்கொண்டது
தங்கையின் வார்த்தைகளால் ..
Last edited by அமரன்; 21-08-2008 at 07:24 PM.
வார்த்தைகளால் கோப்பது கவிதை
கவிதைகளால் கோப்பது கற்பனை
கற்பனையில்
கவிதையாம்
யாரங்கே
என்னவளை பார்த்து
ஒருமுறை சொல்லுங்கள்
கவிதை கற்பனையில்
வருவதா
இல்லை காதலியால்
வருவதா என்று.
கற்பனையால் வருவதா
காதலியால் வருவதா என்று தேடும்
சூழ்நிலை சூட்டில்
உதடுடைத்து வெளிவந்த
சொற்குஞ்சுக் கூட்டங்களும்
கவிதைகளாகின்றன..
இரை தேடி அவை
இதயத்தில் கொத்தினாலும்
இதம் பிறக்கிறது
கவிதையாக..
கவிதையாக
வாழ்க்கை இருக்கும்
என்றுதான் நினைத்தேன்...
கவிதைக்குப் பொய்யழகு
என்பது
இப்போது புரிகின்றது...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
இப்போது புரிகின்றது
கண்கள் சிமிட்டுவதின்
ரகசியம்
மனத்திரையில் பிம்பமாய்
என்றும் உன் நிழல்படம்
நிழல்படம் சொல்லுமா,
பாட்டியாகக் கதைகள்..?
நிழல்படம் ஏந்துமா,
தாத்தாவாகத் தோள்களில்..?
நாடு பிரித்த உறவுகள்,
நிழல்படங்களில்
இணைக்கப்படுகின்ற போதிலும்,
இழக்கப்படுகின்றன,
நிஜ ஸ்பரிசங்கள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நிஜ ஸ்பரிசங்களை
பரிசளிக்கின்றன
செல்லரித்த புகைப்படங்கள்
தடவுகையில்.
தடவுகையில்,
உருவத்தைத் காட்டாத,
புகைப்படங்கள்..,
உள்ளத்தில்
உருவங்களை
ஆரத் தழுவுகின்றன...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
ஆரத் தழுவுகின்றன
மறு பிறவி
எடுத்த உறவுகள்
வாக்குச் சாவடிகளில்..
வாக்குச் சாவடிகளில்,
வடிகட்டப்பட்டுச்
சிம்மாசனமேற்றப்படுகின்றனர்,
நாட்டைச்
சாகடிக்கப் போகின்றவர்கள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
வாக்குச் சாவடிகளில் வேட்டுகள்
இறைந்து கிடந்தன சீட்டுகள்
அனைத்தும் செல்லா வோட்டுகள்
வாக்குச் சாவடிகளில் கூட்டங்கள்
அவர் முகங்களில் வாட்டங்கள்
என்று நிற்கும் ஏழைகளின் ஓட்டங்கள்
வாக்குச் சாவடிகளில் காவல்
மக்களின் பாதுகாப்பு பற்றி ஆவல்
செய்ய வேண்டியது அவர்களின் ஏவல்
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks