பூக்களைப் பறிக்கையில்
செடிகளுக்கு வாயிருந்தால் அவை அழும்
பூக்களைப் பறித்தல்
கன்றை பசுவிடமிருந்து பிரித்தலுக்கு சமம்
பறிக்கப் பட்ட பூக்கள் வாடிவிடும்
பிரிக்கப் பட்ட கன்றுகள் உயிரை விடும்
பூக்களைப் பறிக்கையில்
செடிகளுக்கு வாயிருந்தால் அவை அழும்
பூக்களைப் பறித்தல்
கன்றை பசுவிடமிருந்து பிரித்தலுக்கு சமம்
பறிக்கப் பட்ட பூக்கள் வாடிவிடும்
பிரிக்கப் பட்ட கன்றுகள் உயிரை விடும்
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
உயிரை விடும்
கணம் அறிந்ததாலோ
வெடித்து அழுகிறது
விளக்கு!
விளக்கு
எரிய திரி
மனிதன்
மலர
தியானம்
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
தியானம்
உன் நிறைவு...
தியாகம்
உன்னால் நிறைவு...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நிறைவு கொண்டிருந்தேன்
உன்னை நினையா நாளில்
இன்று
நிறைய விரும்புகிறேன்
நீயும் வா அருகில்
அருகில்
வந்தும் தீண்ட மறுத்த
உன் தாவணி முனை,
உரசியிருந்தால்
பற்றியிருக்குமா
என் நெஞ்சத்(தில்)துக்
காதல் தீ...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
காதல் தீயை
மூட்டிவிட்டு
நீ பாட்டுக்கு போய்விட்டாய்
பற்றி எரிகிறது
பசலை தீ
பூர்ணிமா
==================
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
ஒலிக்கச் செய்வோம்....
பசலைத் தீ
உன் காகித மடலில்
எரிவது,
நீ சொல்லாமலே எனக்குத்
தெரிகின்றது...
கடலைத் தாண்டி வந்த
என்னால்,
இன்று
உன் காது மடல்களில்
என் முத்தத்தைச்
சத்தமாகத் தர மட்டுமே
முடிகின்றது...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
முடிகின்ற
இதையெல்லாமா
எழுதிக் கொண்டிருப்பது?
கடல் தாண்டி வர
முடிந்த உன்னால்
இந்த மடல் தாண்டி
வர முடியாதா
என்ன?
பூர்ணிமா
==================
தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
ஒலிக்கச் செய்வோம்....
”என்ன...”
கேட்டது
உன் இதழல்ல,
புருவம்...
”ஒன்றுமில்லை...”
என்றாடியது என் தலை.
ஆனால்,
விழி மட்டும்
உன்னை விட்டு
விலகவில்லை...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
விலகவில்லை
சான்றோர் பலர் எடுத்துரைத்தும்
சாதி வேறுபாடுகள்
விலகவில்லை
சுதந்திரம் கிடைத்தும்
அடிமைத்தனம்
விலகவில்லை
இந்தியன் அன்னியன் படங்கள் வந்தும்
லஞ்ச லாவண்யங்கள்
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
லஞ்ச லாவண்யங்கள்
அதிகரித்தன..,
இந்தியன், அந்நியன் படங்கள்
தந்த
நெளிவுசுளிவுகளால்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks