இணைவதற்கே இனம்
என்று இறந்தான் இறைவன்
பிரிந்து-அல்லல்பட்டு அழிவதற்கோ
என்று உணர்ந்தேன் நான்
இதனை மாற்ற
இறைவன்தான் வேண்டுமோ
வேண்டாம்
தன்னையும் தன்னினத்தையும்
உணர்ந்தாரே பொதுமென்பேன்.
இணைவதற்கே இனம்
என்று இறந்தான் இறைவன்
பிரிந்து-அல்லல்பட்டு அழிவதற்கோ
என்று உணர்ந்தேன் நான்
இதனை மாற்ற
இறைவன்தான் வேண்டுமோ
வேண்டாம்
தன்னையும் தன்னினத்தையும்
உணர்ந்தாரே பொதுமென்பேன்.
த.நிவாஸ்
வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்
போதும் போதும்
காதல் பொய்த்தூக்கி சுமந்ததெல்லாம்
போதும் போதும்
ஊரில் கைகோர்த்து திரிந்ததெல்லாம்
போதும் போதும்
நாம் கைகுலுக்கிப் பிரிந்திடலாம்
நாம் நாமாகவேனும் வாழ்ந்திடலாம்
என்றென்றும் நட்புடன்!
நாம் நாமகவே வாழ்ந்திடலாம் இனி!
நல்லவருக்கு துணைப்போனோம் தெரிந்தே பின்
நடந்ததில் நலிந்துபோனாம் மனம்.
கெட்டவருக்கும் துணைப்போனோம் தெரியாமலே பின்
முட்டாளாகிப்போனாம் முன்னமே தெரியாததினாலே!
என்றென்றும் நட்புடன்!
முன்னமே தெரியாததினாலே
நல்லவர் கெட்டவர் என
இனங்காண இயலாததினாலே
பாதகமா சாதகமா என
பகுத்தறிய முடியாததினாலே
பல வழிகளில் வலியடைந்தோம்
பட்டுணர்ந்ததாலே
பலமாய் வலிவடைந்தோம்...!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
பலமாய் வலிவடைந்தோம்
பற்பல அனுபவங்கொண்டே
நலமாய் நாமும் வாழ
நன்மைகள் புரிந்திடுவோம்
வளமாய் வாழ்க்கை மாற
வஞ்சனைகள் விட்டொழித்தே
உளமாய் அன்பு வைத்து
உயர்ந்திடுவோம் உலகினிலே !!!
தமிழுக்கும் அமுதென்று பேர்! -
அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்!
உயர்ந்திடுவோம் உலகினிலே!
உயர்வுள்ளும் உள்ளத்தாலே!
உயர்ந்திடுவோம் உலகினிலே!
அயர்விலா உழைப்பினாலே!
உயர்ந்திடுவோம் உலகினிலே!
மயர்வற மதிநலம் உடையவன் துணையாலே!
என்றென்றும் நட்புடன்!
துணையாக நீ வருவாயென
தனியாக காத்திருந்தேன்!
தூண்டா விளக்கெடுத்தே
அண்டமுழுதும் தேடியே
அலைந்திருந்தேன்!
உண்டா அவளைப்போல்
பெண்னொன்று என்றே
கண்பார்த்த பெண்களையெல்லாம்
கண்னொற்றி பார்த்தே
களைத்தே போனேன்!
துணையாக நீ வருவாயென
என்றென்றும் தவிப்புடனே
தூங்காமல் காத்திருப்பேன்
என் மனையெங்கும் ஒளிரும்
அணையாத விளக்கமென
அன்பே! நீ வருவாயென!
என்றென்றும் நட்புடன்!
வருவாயென நினைக்கயில்லை..
நீங்கிவிட்டாய் என் நினைவிலிருந்தென
கடந்துபோன போது..
தீப ஒளியும் மங்கிப்போகும்
முகம் தோன்றியது
என் கண் முன்னே..
சொல்லேதுமற்று பார்வை
தூவிச்சென்ற பாவையவள்..
பாவையவள் கனவு கலைத்த
பனி விழும் காலைப் பொழுதில்
சாலை மரங்களின் உதிர்ந்த பூக்கள்
இன்னும் உதிர்க்கவில்லை சிரிப்பை!
சூடான செய்தி சுமந்த செய்தித்தாள்,
வெடவெடத்தது குளிரில் !
இரவுக்கடை அடுப்பின், மிச்சமிருக்கிற
கதகதப்பில் , சுகமாய் தூங்கின தெருநாய்கள்!
வீட்டை மடக்கி சுருட்டி வைத்துவிட்டு
வீதிக்கு வந்த பிளாட்பாரவாசி,
இடுப்பைத் தடவி எண்ணினான் இருமுறை,
எப்போது திறக்கும் டாஸ்மாக் கடை?
Last edited by கௌதமன்; 19-12-2013 at 05:00 PM.
கடை இக்கடையினால்
வாழ்வின் கடை
நோக்கி பயணப்படுகிறான்
தமிழன்!
வீரத் தமிழனுக்கு
பெண்ணடிமைத்தனமும்
போதைக் குடித்தனமும்
வீரமகிப்போனதே
ஐயகோ!!
ஐயகோவென அரற்றிற்றென் நெஞ்சம்
பையனின் பைச்சுமை கண்டதும்!
ஜந்து வயது மகனின் முதுகில் புத்தகச்சிலுவை!
வெந்தது இதயம்! நொந்தது தாயின்மனம்!
கைபேசி வந்ததின்பின் தொலைபேசி தொலைந்ததுபோல்!
கைகணனி வந்தாலும் தொலையதா இந்தப்பைச்சுமை?
என்றென்றும் நட்புடன்!
சுமையென புரிந்தும்
சுமந்திட மனம்
ஏதோ ஓர் வளைவில்
மெல்ல சிரிக்கிறது..
எங்கோ ஓர் விலகலில்
நினைவுகளின் நிழல்
மெல்ல தாலாட்டுகிறது
மறந்து போய் இருந்தாலும்
மலர்களின் வாசம் எங்கோ
ஓர் திரும்பலில்
கடந்து போகாமல் இல்லை!
துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks