உணர்த்திட உணர்த்திடத்தான்
தெரியும் உனக்கு
கவிதை நான் படைக்கும்போது
வேதனை
உணர்த்திட உணர்த்திடத்தான்
தெரியும் உனக்கு
கவிதை நான் படைக்கும்போது
வேதனை
வேதனை என்னைத்
துயிலுரிக்கையில்
ஆதரவாய் உன்
தாய்மடி வேண்டும்
நான் தலைசாய்த்திட
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
தலைசாய்த்திட
தாய்மடி வேண்டும்
தலை கோதிட
காதலி வேண்டும்
தலையிலடிக்க
நண்பன் வேண்டும்
தலை கொய்ய
அட்லீஸ்ட் ஒரு எதிரியாவது வேண்டும்
வேண்டும் வேண்டுமென
இத்தனை வேண்டுதல்
வைத்திடும் நண்பனே
வேண்டியது கிடைக்க
என் வாழ்த்துக்கள்...!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
என் வாழ்த்துக்கள்
உனக்கு உணர்த்திட ஒன்றுண்டு
நீ கருவானதால்
மண்ணுலகில்
வாக்க்ளர்பட்டியலில்
ஓர் ஓட்டு அதிகரிப்பு
விண்ணுலகிலோ
தேவைதைப்பட்டியலில்
ஓர் தேவதையிழப்பு....
Last edited by aasaiajiith; 03-10-2012 at 11:36 AM.
இழப்பு ஓன்றில்
லாபம் தேடும்
வணீகர்கள் வாழும்
பூமியிது...!
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
வாழும் பூமியிது வேகமாய்
வெட்பமாவதிலிருந்து
விடுபட என்னிடம்
நுட்பமான ஓர் யோசனை
பகலிலே பவனிவரும்
இனியவள் நீ
இரவினில் மட்டும் இன்பஉலா
வந்தால் என்ன??
நிலவுமகளினைப்போல்
Last edited by aasaiajiith; 03-10-2012 at 11:35 AM.
நிலவுமகளினைப்போல்
இரவெல்லாம் விழித்து
இனிமையாய் பேசி
ஆளைமயக்கும்
ஆசைநாயகனே
உன்னாசை என்னிடம் ஆகாது
நான் வெய்யில்.
500 கெல்வின் சூட்டிலேயே
பொசுக்கிவிடுவேன்
காணும் பெண்களையெல்லாம்
காதல் கொள்ள
நாக்கு தொங்க ஜொள்ளுவிடும்
வில்லனே
எச்சரிக்கிறேன் ஒருமுறை
போகட்டும் இம்முறை.
Last edited by ஆதி; 03-10-2012 at 11:01 AM.
அன்புடன் ஆதி
கைப்பேசியில் இருந்து அந்த பதிப்புக்கள் பதிக்க பட்டமையால் அந்த குறியீடுகள் தவிர்க்கமுடியாமல் போனது என்பதையும் ,அடுத்த முறை கணிப்பொறியில் அமரும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவைகள் அகற்றப்பட்டுவிடும் என்பதையும் ,அவசரம் கருதி ,அவசியம் கருதி , ஆங்கிலத்தில் அறிவிக்கின்றேன் . வசதி வந்தபின் , இந்த தகவலும் நீக்கப்படும் !!!
Last edited by aasaiajiith; 03-10-2012 at 11:33 AM.
போகட்டும் இம்முறையென்றே
பொறுத்துப் பொறுத்துப்
போயிற்றே பலகாலம்!
இன்னா செய்தார்க்கும்
இனியன செய்யச் சொன்ன
இரண்டாயிரம் வயதுக் கிழவரும்
நன்றாற்றலுள்ளும் தவறுண்டென்றே
நன்றாய்த்தான் சொல்லிப்போனார்!
இனியதை நீயுன் மனமேற்கும்வரை
இனி அதை நானென் மனமேற்க
சூளுரைக்கிறேன் இன்றே!
இன்றே மறந்துவிடு
இன்றேல் தொலைந்துவிடு
நாளை விழித்தெழு
நாளைய நினைவாக...
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks