என் இனிய தமிழ் மன்ற இதயங்களுக்கு,
நோடிகளில் சிதலமாகி,
பல ரணங்களின் வேடந்தாங்கலாகி,
பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும்
நாடக கலையை
என் உயிர் மூச்சாக நினைத்து
வாழ்ந்து கொண்டிருப்பவன் தான்
இந்த ஐரேனிபுரம் பால்ராசய்யா.
இதுவரை இருபது நாடகங்கள் எழுதி மேடைகளில் அரங்கேற்றம் செய்திருக்கிறேன்.
நான் எழுதிய “ இடைவெளிகள்” எனும் நாடகம் 116 மேடைகளில் நடிக்கப்பட்டு வரும் நவம்பர் மாதம் அது நூலாக வெளிவர இருக்கிறது.
வார இதழ்களுக்கு கதைகள் எழுத ஆரம்பித்து இரண்டு வருடங்கள் தான் ஆகிறது. எனது கதைகள் ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், ராணி, பாக்யா, தங்கம், வெளிச்சம் உங்கள் கையில், தமிழ் மழை, போன்ற வார இதழ்களில் வெளிவந்திருக்கிறது.
குஜராத்தில் ஒரு தனியார் அலுவலகத்தில் உதவி மேலாளராக பணியாற்றிகொண்டே நேரம் கிடைக்கும் பொழுது எழுதி வருகிறேன். சொந்த ஊர் குமரி மாவட்டத்தில் ஒரு கிராமமான ஐரேனிபுரம் எனும் ஊர்.
பிறந்த மண்ணை பிரிந்தாலும் மண்ணின் பெயர் பெயரில் நிலைத்திருப்பதில் பெருமை
கொள்கிறேன். Unicode converter software கிடைத்தால் இன்னும் நிறைய தமிழில் எழுதலாம் தான். தற்பொழுது ஆங்கிலத்தில் டைப் செய்து தமிழ் மன்ற Unicode converter ல் மொழி மாற்றம் செய்து வருகிறேன்.
உங்களது மேலான ஆதரவு கண்டு வியந்து நிற்கும்
ஐரேனிபுரம் பால்ராசய்யா
Bookmarks