Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: நடு நிலைக்காதல்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0

    நடு நிலைக்காதல்

    மாதமெலாம்
    முதல் தேதியைத்
    மூச்சிறைக்க துரத்தியோடும்
    நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கைகள்
    நாமிருவரும்..

    ஆண்டாண்டுக்கு முன்
    ஏழரை மணி பேரூந்தில்
    ஆரம்பித்த நம் காதல்
    இன்னும் கடைசி
    இருக்கை காதலாகவே உள்ளது..

    வண்ணப்புடவை அணிந்த
    வெள்ளைப் பட்டாம் பூச்சியாய்
    அருகு வந்தமர்ந்து
    என் மனசுக்குள் பறப்பாய்
    ஒவ்வொரு காலையும்..

    கடல் தரித்த கரையில்
    மணல் வருத்த கடலையை
    கொறித்தவாறு
    சிரித்து பேசி
    சிறிது சிந்தி
    சிறிது வாழ்ந்து
    சிறிது நொந்து
    மேலுமொரு பிரிவை நோக்கி
    முற்றும் நம் சந்திப்புகள்..

    அடிப்படை அவசியங்களின்
    அடைப்பு குறியில்
    அடங்கி முடிந்துவிடும்
    நமதாசைகள்..

    சிகையாழியின்
    மிதம்மீறிய நரை வெம்மையில்
    தட்பமிழக்கிறது
    தம்பதிகளாகும் கனவுகளும்..

    பாக்கிகளின் நிழல் விழுந்து
    கருப்புற்றிருக்கும் பொருள் நிலா
    ஊதிய ஏற்றத்திலும்
    போதிய வெளிச்சம் பெறாமல்
    தார்க் காகிதமாகிறது
    தாறுமாறான விலை நீட்சியால்..
    Last edited by ஆதி; 18-08-2008 at 05:16 PM.
    அன்புடன் ஆதி



  2. #2
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    அடடே மத்யமர் குடும்ப காதல் கதையா இது.. பாராட்டுக்கள்...

    விடியாமலே நீள்கின்றன கல்யாணக் கனவுகள் இல்லையா..?

    //ஏழரை மணி பேரூந்தில்
    ஆரம்பித்த நம் காதல்//
    இன்னும் ஏழரையாகவே இருப்பதுதான் வருத்தற்குரியது.

    //பாக்கிகளின் நிழல் விழுந்து
    கருப்புற்றிருக்கும் கல்யாண நிலா
    ஊதிய ஏற்றத்திலும்
    போதிய வெளிச்சம் பெறாமல்
    அஞ்சனச் சிமிழாகிறது
    அத்யாவசிய பொருட்களின் விலை நீட்சியால்..//

    உவமைகளும் - உவமானங்களும் வெகு ஜோர் ஆதி அவர்களே..





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    நல்லா இருக்குங்க.

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    நன்றி பூர்ணிமா, நன்றி தென்றல்..

    கவிதை இன்னும் கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்.. நேரமிருந்தால் படித்துப்பார்க்கவும்..
    அன்புடன் ஆதி



  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஒரு கையாலாகத்தன நோய் பீடித்த
    நாள்பட்ட ஜோடியை
    அச்சாக கண்முன் நிறுத்திய கவிதை!

    பொருளாதாரத்திலே பொருள்தானா தாரமின்று?

    கேள்வி கேட்ட காலத்தைவிட
    இப்போது இன்னும் பணவீக்கம்,
    இன்னும் விலகிவிட்ட கானல்நீர் தொலைவுகள்..

    நரை வெம்மை உறிஞ்சிய கனவுக்குளிர்ச்சி..

    அழகான சொல்லாடல்கள் ஆதி! பாராட்டுகள்!

    பூர்ணிமாவின் விமர்சனம் சுஜாதா முத்திரைகளுடன் ஜொலிக்கிறது!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post

    நரை வெம்மை உறிஞ்சிய கனவுக்குளிர்ச்சி..

    அழகான சொல்லாடல்கள் ஆதி! பாராட்டுகள்!

    பூர்ணிமாவின் விமர்சனம் சுஜாதா முத்திரைகளுடன் ஜொலிக்கிறது!

    இந்த வரிகளை படித்த பல நண்பர்கள் புரியவில்லை என்றார்கள்.. நீங்கள் அழகாக பொருளோடு சுருக்கி பொழிவுற செய்துவிட்டீர்கள் நன்றி அண்ணா..

    பின்னுட்டத்திற்கும் பாராட்டிற்கும் மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..
    அன்புடன் ஆதி



  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    இளசு அண்ணா எனக்கு முந்தியே பின்னூட்டம் போட்டாச்சு...நான் சொல்ல வந்ததை...

    அக்காக்கு மிச்சம் என்ன இருக்கு...

    பாராட்டுகள் மட்டுமே...வாழ்த்துக்கள் ஆதி.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    வாழ்த்துக்கள் ஆதி...

    நடுத்தர வர்க்கத்தின் பாடுகளில் இதுவும் ஒன்றாகி போனது...

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆதியின் கவிதைகள் என்றாலே சொல்வளமையும் கருவலிமையும் நிச்சயம் என்பது மன்றப் பிரசித்தம்.

    ஆண்டாண்டு காலமாக இடரும் இது போன்ற விசயங்கள் இருக்கும் வரை இந்த மாதிரிக் கவிதைகளும் வந்து கொண்டே இருக்கும். வாசகன் மனங்களை ஆண்டுகொண்டே இருக்கும்.

    அழகிய ஒப்புமைகளை சிலாகிப்பதா? அழுத்தும் மூட்டையை விலாவரிப்பதா? என்ற எனக்குள் இருக்கும் குழப்பம் ஆதிக்கு பரிசு.. வாழ்த்து.. பாராட்டு எல்லாமே..

    பாக்கிகளின் நிழல் விழுந்து
    கருப்புற்றிருக்கும் பொருள் நிலா
    ஊதிய ஏற்றத்திலும்
    போதிய வெளிச்சம் பெறாமல்
    தார்க் காகிதமாகிறது
    தாறுமாறான விலை நீட்சியால்..
    அந்தப்பக்கமாய் வெளிச்சம்
    என்ற நம்பிக்கையில்தான்
    தலைமுறைகள் தாண்டியும்
    உயிர்ர்புடன் உள்ளது
    இவ்வகை வாழ்க்கை.

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Mar 2008
    Location
    இப்ப மும்பையில,
    Posts
    449
    Post Thanks / Like
    iCash Credits
    9,028
    Downloads
    96
    Uploads
    0
    எனக்குத் தெரிந்த வரை ஏழ்மைக் காதலை இவ்வளவு உசத்தியாய் யாரும் வரைந்ததில்லை. கவிதை அருமை. பாராட்டுக்கள்.
    பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    ஒரு காலைப் பேரூந்தின்
    வியர்வை வாசத்தில்
    வளர்ந்த காதல்...

    ஒரு கடலைச் சுருளுக்குள்
    தினம் விருந்துண்டு
    மகிழ்ந்த காதல்...

    அந்தக் கடலோரத்தில்,
    கால்கள் அழுத்திய
    மணலில் கசிந்த ஈரம்..,
    இந்தக் காலவோட்டத்தில்
    நசிக்கப்படும் மனங்களிலும்...

    கசியும் கண்ணீரையும்
    ஒட்டிய மணலையும்
    தட்டிவிட மட்டுமே முடிகிறது...

    பாராட்டுக்கள் ஆதி...
    அழகுப் பின்னூட்டங்கள் தந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    சிகையாழியின்
    மிதம்மீறிய நரை வெம்மையில்
    தட்பமிழக்கிறது
    தம்பதிகளாகும் கனவுகளும்..
    என்ன வரிகள்!! ஆச்சரியமாக உள்ளது! வாழ்த்துக்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •