அன்பு நண்பர்களே!
அறிவியல் கலந்த ஓர் கதையை ஆசைப்பட்டு வேறொரு தளத்தில் இதே கதையை எழுதி வருகிறேன.
உங்களின் அனுமதியோடு என் கதையை இங்கேயும் பதிய ஆசைப்படுகிறேன். அனுமதி கிடைக்குமா?
ஆவலுடன்
செல்வமுரளி
அன்பு நண்பர்களே!
அறிவியல் கலந்த ஓர் கதையை ஆசைப்பட்டு வேறொரு தளத்தில் இதே கதையை எழுதி வருகிறேன.
உங்களின் அனுமதியோடு என் கதையை இங்கேயும் பதிய ஆசைப்படுகிறேன். அனுமதி கிடைக்குமா?
ஆவலுடன்
செல்வமுரளி
Last edited by selvamurali; 20-01-2009 at 07:00 PM.
நீங்கள் இப்படிக் கேட்பதுதான் வேதனை தருகிறது. உங்கள் குழந்தையை எங்கே பெற்றால் என்ன... இங்கே வளர்ப்பதில் தவறில்லை. ஆர்வத்துடன் காத்திருக்கின்றோம் அதற்காகவும் இங்கே பிரசவிக்கப்படும் அடுத்தடுத்த உங்கள் குழந்தைகளுக்காகவும்.
Last edited by அமரன்; 16-08-2008 at 03:17 PM.
நன்றி நண்பரே!
எத்தனையோ விஞ்ஞான கதைகளை எழுதி சமீபத்தில் காலமான திரு.சுஜாதா அவர்களை முன்மாதிரியாக கொண்டு
தழுவிய சூரியன், நழுவிய பூமி
என்ற கதையை எழுத ஆரம்பிக்கிறேன்........ உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களோடு
கதையின் கரு : பல்லாயிரம் வருடங்களுக்கு ஒரு முறை சூரியனின் உட்புறத்தில் நிகழும் அணு வெடிப்புகளின் மோதல்களால் சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் நமது பூமியை பாதிக்கும்.ஆனால் இதில் குறிப்பிட்ட அம்சம் என்னவெனில் மனிதர்களை தாக்காமல் சென்ற நூற்றாண்டின் அரிய பொக்கிசமான கம்ப்யூட்டர்களை செயலிக்க வைக்கும் தன்மையுடவை. இந்த கம்ப்யூட்டர்களின் செயலிழப்பால் நாம் மீண்டும் பழைய கற்காலத்திற்கே செல்லவேண்டிய கட்டாயமும் உருவாகும். இந்த கதிர்கள் பூமியை வந்தடைய 30 நாட்கள் உள்ள நிலையில் அந்த கதிர்களின் வீச்சுக்களிலிருந்து நமது தொழில்நுட்பத்தை நாம் எவ்வாறு காப்பற்றப்போகிறோம் என்பதே இந்த கதை!
உங்களின் ஆசிர்வாதங்களோடு இந்த கதையை எழுதுகிறேன்....
இந்தியாவின் நில அளவை கட்டுப்பாட்டு மையம்
இந்தியாவின் நில அளவைக் கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்பக் குழு சற்றே பரப்பரப்புடன் இருந்தது. அந்த குழுவின் நடுவே அதன் தலைவர் மிஸ்டர் ஏ ஆராய்ந்து ஆராய்ந்தே முடிக்கொட்டிப்போன தனது தலையை நெருடிக்கொண்டே ஒரு வித கலக்கமான பார்வையுடன் அவர் மேஜையின் மேலே இருந்த செயற்கை கோள்கள் படங்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
ஏனெனில் இந்தியா அனுப்பியிருந்த சமீபத்திய இன்சாட் 2008 செயற்கைக் கோள் பூமியை ஆராய்ந்து அனுப்பிய புகைப்படங்களையும், ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பு அனுப்பிய இன்சாட் 2007 செயற்கைக் கோள் புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சமீபத்திய நில அளவுகள் சற்றே அதிகரித்தது போல் தெரிந்தது. இதுவரை இந்தியா முழுவதும் கணக்கெடுத்து வந்துள்ள நில அளவைகளைக் கணிப்பொறியில் ஆராய்ந்த போது இந்தியாவின் காஷ்மீர், டெல்லி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களின் அளவுகள் மட்டும் சற்றே அதிகரித்து இருந்ததுதான் மிஸ்டர் ஏ - வின் கலக்கம் .
ஒரு வேளை தற்போது அனுப்பிய செயற்கைக் கோளின் அளவுகளில் ஏதேனும் ப்ரச்னையாக இருக்குமோ?
எப்படியிருந்தாலும் தனது மேலிடத்திற்கு இந்தத் தகவலை தெரிவித்தாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்த மிஸ்டர் ஏ உடனடியாக நில அளவை அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு தகவலைத் துறை சார்ந்த அமைச்சரிடம் தெரிவித்தார்.
இதைக்கேட்ட அமைச்சர் கம்ப்யூட்டர் கோளாறாருக்கும் நல்லா பாருங்க, என்று தனது பான்பராக் எச்சிலை துப்பியவாறே சொல்லவும் போனை வேகமாக வைத்தார் மிஸ்டர் ஏ.
"ஒரு தடவைக்கு நாலு தடவை நல்லா அலசி ஆராய்ந்து பார்த்தாச்சு , திரும்பத் திரும்ப பாரு சொன்னா என்னத்த பாக்க " என்றவாறே அந்த பைல்களை மேஜையில் வைத்தார்.
அதிதீவிரமான யோசனைக்கு பிறகு
திடீரென்று தனது குழுவினை அழைத்து உரையாற்றிய மிஸ்டர் ஏ, "டியர் மெம்பர்ஸ், இந்த புகைப்படங்களைச் சற்றே ஆராய்ந்து நமது கணினியில் உள்ள தகவல்களோடு ஒப்பிட்டு பார்த்துதான் இந்த முடிவுக்கு வந்துள்ளோம் என்றாலும் நம்மில் எங்காவது சிறு தவறுகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. இதையேன் நான் சொல்கிறேன் என்றால் ஒரு வருடத்தில் பூமியின் மாற்றங்கள் நிகழ்வது இயற்கை என்றாலும் அவை ஒரு சென்டிமீட்டர் அல்லது அதிகபட்சம் 100 மீட்டர் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இப்படி ஒரேடியாக 10 கி.மீட்டர் தூரம் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.
எனவே நாம் நம் தீர்வுகளின் முடிவுகளை மீண்டும் செயலாக்கத்திற்கு உட்படுத்த வேண்டும். எனவே நாம் ஏற்கனவே செய்த வேலையை திரும்ப செய்கிறோம். ஆனால் சிலவிதமான மாறுதல்களோடு செய்யப்போகிறோம்.
இந்த ஒப்பீட்டு மென்பொருளை உருவாக்கிய குழுவுடன் இந்த மென்பொருளை பயன்படுத்திய அளவைகளை ஒப்பிட்டு பார்த்த குழுவினர் வேலை செய்யலாம். ஏனெனில் சில இடங்களில் நாமும் அல்லது அவர்களும் எங்காவது சிறு பிழைகள் செய்ய வாய்ப்புண்டு.எனவே இந்த குழுவில் வேலைபார்க்கும் அனைவரும் அந்த குழுவினருக்காக மென்பொருட்களை உருவாக்கியவர்களுடன் இணைந்து வேலை செய்யப் வேண்டும். எங்காவது சிறிய சந்தேகம் இருந்தாலும் உடனடியாக அதை கணினியில் பதிவு செய்யுங்கள்.
இந்த தகவல்கள் அனைத்தும் மறு சோதனை செய்தாக வேண்டும். எனவே இப்போது இருக்கும் கணினியின் வேகங்கள் போறாது. எனவே அதிவேகமாக இயங்க சமீபத்தில் உருவாக்கப்பட்ட ரன்னர் கணினியில் நாம் நம் முடிவுகளை அலசிபார்க்க போகிறோம். ஏனெனில் இதன் முடிவுகள் நம்மின் தவறாய் இருந்தால் நமக்கு நல்லது. அல்லது முடிவுகள் நமக்கு நேர்மாறாய் இருந்தால் விளைவுகளை நம்மால் கணிக்க இயலாது. எனவே முடிவுகள் நமது தவறாகவே இருக்கும் என்ற நம்புவோம். இன்றிலிருந்து 24 மணி நேரத்திற்குள் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி முடிவுகளை நீங்கள் சரிபார்த்தாக வேண்டும். உங்கள் வேலைகளை நீங்கள் ஆரம்பிக்கலாம்,
திரும்பவும் சொல்கிறேன் உங்களின் ஒவ்வொரு சந்தேகத்திற்கும் மதிப்புகள் அதிகம் என்பதால் நீங்கள் எந்த சந்தேகமாக இருந்தாலும் கணினியில் பதியுங்கள்.
உங்கள் வேலைகளை ஆரம்பிக்கலாம் " என்று சொல்லிவிட்டு தன் இருக்கையில் வந்தமர்ந்தார் மிஸ்டர் ஏ.
ஒரு குக்கிராமத்தையே உள்ளடக்கியது போல் இருந்தது ரன்னர் சூப்பர் கணினி.
இதன் மூலம் லட்சத்து லட்சமாயிரம் கோடிக் கணக்குகளைச் செய்யலாம் ஒரு வினாடியில்.
இதே நேரத்தில்
அமெரிக்கா பசிபிக் பெருங்கடலின் அடியில் ஒரு புதிய அண்டவெளியை உருவாக்கும் பரிசோதனையின் முடிவில் இருந்தது.
அண்டெவளியின் கருமையான இருளில் 9 கிரகங்களும் இப்போதிருக்கும் சக்தியைவிட பத்தாயிரம் மடங்கு குறைவான சக்தியை கொண்டு உருவாக்குமாறு அமைக்கப்பட்டது.
பரிசோதனையில் உச்சகட்டமாக ஹைட்ரஜனையும், ஹீலியத்தையும், காஷ்மீக், ஆல்பாக் கதிர்களை ஒன்றுக்கொன்று வினாடிக்கு ஆயிரம் மடங்கு வேகத்தில் மோதவிடும்முயற்சிகள் நடைபெற்றது.
இந்த மோதலில் முடிவுகளை கண்டறிய ரன்னர் சூப்பர் கம்ப்யூட்டர் தனது செயற்கை நியூரான்களை உசுப்பிக்கொண்டு காத்திருந்தது.
அழகான கதை ஆச்சர்யங்களுடன் ஆரம்பித்துள்ளது...
சின்ன சந்தேகம்..ரன்னர் சூப்பர் கம்ப்யூட்டர் எங்கு அமைந்துள்ளது? ஏனெனில் மிஸ்டர் ஏவும் அதை பயன்படுத்த சொல்கிறார். ஆனால் பசிபிக் பெருங்கடல் அடியில் இருப்பதாகவும் இருக்கிறது. சின்ன குழப்பம். அதான்.
சீக்கிரமே அடுத்த பாகங்களையும் கொடுங்கள்..
நல்ல தொடக்கம் நண்பர் செல்வமுரளி விரைவில் தொடர்ச்சியை தாருங்கள்.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
அறிவியலை தொட்டு துல(ங்)க்கும் முதல் முயற்சிக்கு முதலில் என் பாராட்டுகள்.. தொட்டதெல்லாம் துலங்க வாழ்த்துகள்.
தொடக்கமே டாப் ஹியர். பொதுவாக இப்படி இருந்தால் வண்டிக்கு ஆகாதாம். விரைவில் பழுதடைந்து விடுமாம். ஆனால் சிறந்த சிந்தனை நுட்பமும் எழுத்து உதிரிப்பாகங்களும் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதால் பழுது குறையும் என்பது எனது கணிப்பு.
அமைச்சரின் மெத்தனப் போக்கைப் படித்த கணத்தில் அறிவியல் துறை அமைச்சராக ஒரு அரைவேக்காட்டை நியமிப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. நம்ம அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற அசரீரிப் பதில் அதை அடக்கியது.
இந்த அமெரிக்கா எப்பவும் இப்படித்தான் என்ற வகையில் சம்பவங்களை கோர்த்துப் பார்க்கின்றேன்.
தொடருங்கள் முரளி..
பூமியின் நிலப்பரப்பு குறைந்து வருகிறது என்ற கருத்தை மறுதலைத்து பூமியின் நிலப்பரப்பு கூடியுள்ளது என்று ஏற்படுத்திய அதிர்ச்சி ஆர்வம் சற்றும் குறையாமல் காத்திருக்கிறேன்.
Last edited by அமரன்; 16-08-2008 at 04:02 PM. Reason: மேற்கோள் சீரமைப்பு
அறிவியல் சம்பந்தப்பட்ட கதைகள் என்றாலே தனி ஆர்வம் தான். தற்காலிக தொழில் நுட்பங்களை கதைகளில் புதுத்தி.. பலருக்கு புரிய வைப்பது அருமையான பணி...
கலக்குங்க. முரளி...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks