நீங்கள் சொல்வதில் மன்னிக்குமளவு எந்த தவறுமில்லை நண்பரே. ஆனால் நான் சொல்ல வந்தது அதுவல்ல....
நீங்கள் உதாரணத்திற்கு சொன்ன பல பிரமுகர்களில் சிலரில் எனக்கும் அபிமானமுண்டு... அதற்காக அவர்களை கிண்டலடித்தாலும் அதையும் நான் ரசிக்கும் குணமுள்ளவன். ஏன், இதில் பல தலைவர்கள்கூட தங்களைபற்றி வரும் கிண்டல்களைஇயும் ரசித்து பதிலடி கொடுப்பவர்களே. என் கருத்து என்னவென்றால் விடயத்தை உணர்வுபூர்வமாக பர்க்காமல் இயல்பாக இலகுவாக நோக்கவேண்டுமென்பதே. பிரபலங்களை கேலி செய்வதும் நகைச்சுவையில் ஒருபகுதியாகத்தான் உலகில் இடம்பெறுகிறது... இந்திய தனியார் தொலைக்காட்சிகளின் லொள்ளு சபா, நையாண்டி தர்பார் போன்ற நிகள்ச்சிகள் இத்தகைய நகைச்சுவைகளைத்தானே கையாள்கின்றன...
அபிமானிகள் சங்கடப்படுகிறார்களென்றால், ஒருவருகும் சங்கடம் வராத பதிவுகள் வேண்டுமென்றால் மன்றில் வாதங்களும் இருக்காது. உயிர்ப்பும் இருக்காது. பெரும்பாலான பதிவுகள் முடக்கப்படவேண்டியிருக்கும்.
சினிமா கிசு கிசுக்கள்பகுதியில் பல நடிகைகளை விமர்சிக்கிறோம். கிண்டலடிக்கிறோம். அப்போதெல்லாம் இக்கருத்துக்கள் வராதிருந்தது ஏன்? (உண்மையில் நானும் ரஜினியை ரசிப்பவன் தான்.)
Bookmarks