Results 1 to 9 of 9

Thread: வான் தோரணை

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Mar 2008
    Location
    இப்ப மும்பையில,
    Posts
    449
    Post Thanks / Like
    iCash Credits
    9,028
    Downloads
    96
    Uploads
    0

    வான் தோரணை

    நன்றாய் வளர்ந்த
    ஒரு உண்டு கொழுத்த மனிதன்
    முட்டிக்கால் அளவே உள்ளவனிடம்
    போருக்கான அறைகூவல் விடுத்து
    நேருக்கு நேராய் நிற்கிறான்

    அதுவரை
    தனியாயாளாயிருந்த குட்டையனிடம்
    விதவிதமான வடிவமுடைய
    விதவித ஆயதங்களேந்திய
    படையினர்கள் நாற்புறத்திலிருந்து
    வந்து ஒட்டிக்கொள்கிறார்கள்

    படையை பார்த்த பயத்தில்
    பஞ்சு பஞ்சாய் பறக்கிறது
    நெட்டையனின் உடல்

    பார்த்தவர்கள் பிரமிக்கும்
    ஏதோ ஒரு ஜந்துவாய்
    மாறிப்போகிறான் நெட்டையன்

    மெதுவாய் நகர்ந்து
    பின் மெல்ல குனிந்து
    குட்டையனின் காதில்
    இரகசியம் ஓதுகிறான்

    சண்டைவேண்டாமென்று
    சமாதானம் பேசுகின்றான்
    என்றேன் நான்
    அப்படியெல்லாம் இல்லை
    என்கிட்ட வச்சுக்காத
    காணாம போயிடுவன்னு சொல்றான்
    என்றான் நண்பன்
    வேணும்னா பாருவே
    சண்டை நடக்காது
    நான் கூறிக்கொண்டிருக்கும்போதே
    வானம் இருட்டத்தொடங்கியது.
    குட்டையனுடம் நெட்டையனும்
    கலையத் தொடங்குகையில்
    காலையில பாரு
    கண்டிப்பா சண்டையிருக்கு
    என்ற நண்பனை
    தோற்கடிப்பதற்காய்
    அடுத்தநாள்
    பள்ளி செல்லும் வழியில்
    அந்த வெயிலிலும்
    குட்டையனையும் நெட்டையனையும்
    தேடிக்கொண்டு செல்வேன்
    அண்ணார்ந்து பார்த்தபடி.

    எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
    Last edited by எஸ்.எம். சுனைத் ஹஸனீ; 13-08-2008 at 12:25 PM.
    பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    வித்தியாசமான தளம்...
    யதார்த்தமான ஏக்கம்...
    பிரமிக்க வைக்கிறது நண்பரே...
    தொடருங்கள்
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வானமகள்/ன் அழுகை.. மேகத்தின் வியர்வை. இப்படி எத்தனையோ உவமைகளை பொழியும் மழை இப்போது முகில்களின் மோதலில் சிந்தப்படும் குருதியாக.. அறிவியலுடனும் ஒத்துப்போகிறது.. அழகியலுடனும் ஒத்துப்போகிறது. மானுட காலநிலை எதிர்வு கூறல்களை தூறிச்செல்லும் கவிதை.

    வராது என்ற நம்பிக்கையில் நீங்கள் பள்ளிக்கு.. வரும் என்ற நம்பிக்கையில் நண்பன் பள்ளியில்.. ஜெயித்தது நீங்கள்தான்..

    இரண்டாம் பத்தியில் நாற்புறம் இருதரம் வருகிறது..

    முகில்களின் கோலத்தை வைத்து
    அதில் மனக்கணினி வித்தையை நுழைத்து
    நன்றாகக் காட்டினீர்கள் காட்சிதனை..
    பாராட்டினேன் உங்களை..

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Mar 2008
    Location
    இப்ப மும்பையில,
    Posts
    449
    Post Thanks / Like
    iCash Credits
    9,028
    Downloads
    96
    Uploads
    0
    மிக்க நன்றி அமரா. திருத்தி விட்டேன்.

    Quote Originally Posted by அமரன் View Post
    முகில்களின் கோலத்தை வைத்து
    அதில் மனக்கணினி வித்தையை நுழைத்து
    நன்றாகக் காட்டினீர்கள் காட்சிதனை..
    ..
    பாராட்டுக்களுக்கு நன்றி.
    பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Mar 2008
    Location
    இப்ப மும்பையில,
    Posts
    449
    Post Thanks / Like
    iCash Credits
    9,028
    Downloads
    96
    Uploads
    0
    பின்னூட்டத்திற்கு நன்றி ஸிப்லீ.
    பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அருமை அருமை ஜூனைத்!

    தலைப்பில் குறிப்பில்லாவிட்டால், ஜார்ஜியா -ரஷ்யா பற்றிய கவிதை என எண்ணியிருப்பேன்!

    காரை, சுண்ணாம்பு பெயர்ந்த சுவரின் சுவடுகள்
    பார்க்கும் மனநிலைக்கேற்ப உருவம் மாறும்..

    மேகங்களும் அப்படித்தான்..

    கவியரசர் வரி உண்டு -
    மேகங்களில் காணும் படம்
    மாறும் ..தினம் மாறும்!


    உங்கள் இளவயதுப்பார்வைகளை, எண்ணவோட்டங்களை
    எழில் குறையாமல் இங்கே தந்த வளமைக்குப் பாராட்டுகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    ரொம்ப அழகா பராக்கு பாக்கறீங்கன்னு தெரியுது....

    கவிதை ஜூப்பருங்கோ!!!

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    நடப்பு அரசியலுக்கும் அழகாய்ப் பொருந்திப் போகிற "யுனிவர்சல் ட்ரூத்" கவிதை..!

    பாராட்டுகள் சுனைத்..!

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    30 Mar 2008
    Location
    இப்ப மும்பையில,
    Posts
    449
    Post Thanks / Like
    iCash Credits
    9,028
    Downloads
    96
    Uploads
    0
    தென்றலுக்கும் ராஜா அண்ணாவுக்கும் மிக்க நன்றி.
    பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை இறைவன் ஏற்பதில்லை.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •