Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! - ஞானி.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0

    அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! - ஞானி.

    ஞானி என்னும் கி.பழனிச்சாமி எழுதிய எண்ணற்ற எழுத்து மணிகளில் ஒன்றை மன்றத்தில் வெளியிடுவதில் மனம் மகிழ்கிறேன்.

    கிடைத்த இடம் : http://kichu.cyberbrahma.com/2007/07...ானவர/

    இங்கு ஞானிக்கு கிடைத்திருக்கும் பதிவரின் போற்றுதலையும் பின்னூட்ட மரியாதைகளையும், கண்குளிர காணலாம்.

    ________________________________________________________________________
    அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! - ஞானி (நன்றி விகடன்)

    புதிர் 1: அப்துல் கலாம்..

    இணைய தளத்திலும் ஆங்கிலப் பத்திரிகைகளிலும் ‘அடுத்த ஜனாதிபதியாக வரும் தகுதி உடைய ஒரே மனிதர் அப்துல்கலாம்தான்; ஆனால், அவரை நம் கேடுகெட்ட, இழிவான அரசியல்வாதிகள் வரவிட மாட்டார்கள். இளைய தலைமுறையின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் கலாம்’ என்று நடக்கும் பிரசாரம் பெரும் புதிராக இருக்கிறது. இதே கேடுகெட்ட, இழிவான அரசியல்வாதிகள்தான் கலாமை முதலில் ஜனாதிபதியாக்கினார்கள் என்பதையே இந்தப் பிரசாரகர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

    என்னைப் பொறுத்தவரை, கலாம் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியானவரே அல்ல! காரணம், அவர் இந்தியாவை மேலும் மேலும் ராணுவமயமாக்கிய விஞ்ஞானத் துறை நிர்வாகி என்பதுதான். அடிப்படை மருத்துவ வசதியும் கல்வியும் இல்லாத கோடிக்கணக்கான ஏழைகள் வாழும் நாட்டில், கோடிக்கணக்கான ரூபாய்களை ராணுவத்துக்குச் செலவிடுவது சமூக விரோதச் செயல் என்பது என் தீர்மானமான கருத்து. வல்லரசு, வல்லரசு என்பதுதான் அவருடைய ஓயாத பல்லவி.

    எங்கு சென்றாலும் மாணவ&மாணவிகளைக் கூட்டிவைத்துக்-கொண்டு பேசும் அபாரமான பொதுஜனத் தொடர்பு உத்தியை அவர் வெற்றிகரமாகக் கையாண்டு, இளைய தலைமுறையின் ஹீரோ என்ற பட்டத்தைப் பெற்றார். இது அவருக்கு ஒரு வசதியான முகமூடியாக அமைந்தது, அவ்வளவுதான்!

    அவருடன் நேரில் உரையாடிய பிறகு, தங்கள் ஹீரோ வொர்ஷிப் பாவனையிலிருந்து வெளியே வந்துவிட்ட கல்லூரி மாணவர்களை நான் பார்த்தேன். பாரதிதாசன் பல்கலைக்கழக இளைஞர்களுடன் அவரைச் சந்திக்கச் சென்றபோது, சந்திப்புக்கு முன் பரவசமாக இருந்தவர்கள் எல்லாரும், பின்னர் ஏமாற்றம் தெரிவித்தார்கள். சந்திப்புக்குப் பின் அந்த இளைஞர்களை வசீகரித்த வி.ஐ.பி. கிரண் பேடி.

    உண்மையில், குழந்தைகளின் பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை எதுவும் அப்துல் கலாமால் அரை அங்குலம்கூட மாற்றியமைக்கப் படவில்லை. தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்படலாமா, கூடாதா? தொழிற் படிப்புக்கு நுழைவுத் தேர்வு சரியா, தவறா? நன்கொடை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது? சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, மேற்படிப்பில் தேவையா, இல்லையா? இப்படிக் கல்வி சார்ந்த மிக முக்கியமான எரியும் பிரச்னைகள் எதைப் பற்றியும் அவர் தீர்மானமாகக் கருத்துச் சொன்னதே இல்லை.

    தாங்கள் விரும்பும் முஸ்லிம்கள் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுவதற்காக பி.ஜே.பி. முன்னிறுத்திய இஸ்லாமியர் அவர். இந்து & முஸ்லிம் பிரச்னை பற்றியும் அவர் கருத்து தெரிவித்ததில்லை. தமிழகத்தில் சுனாமி பாதிப்பை நேரில் காண அவர் வரவில்லை. ஜெயேந்திரர் கைதின்போது அவரை வீட்டுச் சிறையில் மட்டும் வைக்க முடியுமா என்று அவர் அலுவலகத்திலிருந்து அன்றைய தமிழக அரசுக்குப் பல மன்றாடல் கோரிக்கைகள் வந்ததாக, அப்போது பத்திரிகைகளில் வெளியாகியிருக்கிறது.

    தற்போதைய ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பல முறை திரும்பப் போட்டியிட விருப்பமில்லை என்று சொல்லி வந்தவர், ஜெயலலிதாவின் மூன்றாம் அணி முயற்சியின் போது, ஜெயிப்பது நிச்சயம் என்று இருந்தால், தயார் என்று சொன்னது அவருடைய சலனத்தை வெளிப்படுத்தியது.

    அப்துல் கலாம் எப்படி ஒரு ஐகான் ஆக இளைய சமுதாயத்துக்கு இருக்கிறார் என்பது எனக்கு இன்னமும் புதிர்தான்.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    நானும் வாசித்தேன் விகடனில்.. என்ன சொல்றது னு தெரியல..
    அன்புடன் ஆதி



  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நான் படித்தவை குறைவு.. எழுத்துப் பற்றி தெரிந்ததும் குறைவு.. பொது வாழ்க்கை தனி வாழ்க்கையோ மனிதன் இப்படி இருக்கட்டும் என்று சொல்வது நன்று. குறிப்பிட்ட மனிதன் இப்படி இருக்கவேண்டும் என்று சொல்லுவது தவறு.

    இந்திய ஜனாதிபதி இப்படி இருந்தால் சிறப்பு என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தால் ஞானி(இவ்வாக்கத்தாரை சொல்லவில்லை). அவர் எழுதியத்துக்கு அமைவாக கலாம் இருக்காரா இல்லையா என்பதை மக்கள் ஆராய்ந்தறியட்டும். வாய் ஜாலம் காட்டி மக்களின் சிந்தனையைக் குறைக்கும் அரசியல்வாதிகளை விட எள்ளளவும் குறைந்ததில்லை இதுபோன்ற கட்டுரைகள்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    அந்த ‘ஓ' பக்கங்கள் பல தடவை ‘சீ' பங்கங்களாக எனக்குப் பட்டிருக்கின்றன....

    இப்போது ஐயோ() பக்கமாகவும்....!!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    ஓஓஓஓஓஓஓஓஓ... அப்துல் கலாமுக்கே இந்த நிலை என்றால் பாவம் சிவாஜிராவுக்கு அறிக்கை விட்டதில் நொந்து என்ன பலன்.....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ஞானிக்கு நம் மன்றத்திலேயே பல ஆதரவாளர்கள் இருக்கிறார்களே. அவர் ஏன் இப்படி எழுதமாட்டார். இன்னும் எழுதுவார்.

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    ஞானி இப்படித்தன் விமர்சிக்க வேண்டும், இப்படித்தான் இருக்கவெண்டுமென்பதுகூட இன்னொரு ஞானிபோல்தான் உள்ளது...!
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அந்த ‘ஓ' பக்கங்கள் பல தடவை ‘சீ' பங்கங்களாக எனக்குப் பட்டிருக்கின்றன....

    இப்போது ஐயோ() பக்கமாகவும்....!!!
    அதே அதே....

    காரணம் எந்த ஊழலும் செய்யாத ஒரே அரசியல் தலைவர்...

    இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி..

    இவரது அக்னிச்சிறகுகள் எங்கும் பரந்திருக்க...இதை ஒரு கட்டுரையாகவே வாசிக்க சகிக்கவில்லை...
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    ஞானி தன்னை ஒரு ஞான சூன்யம் என்று இந்தக் கட்டுரையின் முலம் வெளிப்படுத்தியுள்ளார். யாரையும் குறை கூறுதல் எளிது. முதல்வன் படத்தில் வருவது போல இந்த ஞானியை ஒரு நாள் விஞ்ஞானியாகவோ குடியரசுத் தலைவராகவோ இருந்து பார்த்தால் அவரது டங்கு வார் கிழியும்.

    இந்த நூற்றாண்டில் இந்தியாவின் தலை சிறந்த விஞ்ஞானி தீர்க்கதரிசி அப்துல் கலாமை விமரிசிக்க இந்த ஞானிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ஒரு பேனா கையில் கிடைத்து விட்டால் எழுதுவதற்கு ஒரு பத்திரிகையும் கிடைத்து விட்டால் தான் யாரையும் விமரிசக்கலாம் என்ற அவரின் திமிர் போக்கு வண்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விமரிசனத்தை வெளியிட்ட ஆனந்த விகடன் பத்திரிகையும் கண்டனத்துக்குரியது.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  10. #10
    இனியவர் பண்பட்டவர் உதயசூரியன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Posts
    786
    Post Thanks / Like
    iCash Credits
    13,558
    Downloads
    1
    Uploads
    0
    அப்துல் கலாம் நல்ல விஞ்ஞானி..
    ஆசிரியர்..
    நல்லவர்..
    இன்னும் பல பல பட்டங்களை பெற தகுதியானவர்..
    அவருக்கு நம் அனைவராலும் கொடுக்க பட்ட கவுரவம்.. ஜனாதிபதி.. நம்ம தமிழர்..
    பெருமை..

    ஆனால் ஜனாதிபதியாக்கி அவரையும் எல்லோரையும் சங்கடபடுத்தியது காலத்தின் கோலம்..
    இரண்டாம் முறை.. அவர் ஆசை பட்டார் என்ற போது நொந்தும் போனேன்..
    அப்துல் கலாம்.. ஜனாதி பதியாக வேண்டாம்..

    ஞானி சொன்ன விதத்தில் தவறாக இருக்கலாம்.. அவர் சொல்ல வந்ததை பரிசீலிக்கலாம்...

    இது முழுக்க முழுக்க என் கருத்து தான்.. இதற்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை......

    வாழ்த்துக்கள்
    வாழ்க தமிழ்
    சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
    மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்
    !!!


    நல்ல சினிமாவை பார்க்கணுமா...???

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    02 Jul 2007
    Posts
    308
    Post Thanks / Like
    iCash Credits
    22,159
    Downloads
    192
    Uploads
    0
    அப்துல் கலாம் தகுதியை பற்றி
    பேசுவதற்கு முன்
    கண்டிப்பாக இனி குமுத்ததில்
    எழுதவே மாட்டேன் !!
    என்றவர் ஞானி
    ம்ம்ம்ம்
    வாழ்க்கையில் நாம் இதுப்போல நிறைய நபர்களை பார்த்துக்கொண்டு வருகிறோம்!
    எல்லோரையும் விட நான் அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்!
    எல்லோரையும் விட நான் அதிகம் உழைக்க விரும்புகிறேன்!!
    எல்லோரையும் விட நான் குறைவாகவே எதிர்பார்க்கிறேன்!!!

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    ஞானிக்கு இந்தியாவை வேறு ஏதாவது நாட்டிடம் அடகு வைத்து விட்டால் சந்தோஷம் வரும் போல. ராணுவத்தின் செலவு என்பது நாட்டின் பாதுக்காப்புக்கு என்ற சிறு விஷயம் அவருக்குத் தெரியாமல் போனது வருத்தம் தான். பாகிஸ்தானிடம் இந்தியாவை ஒப்படிச்சிட்டா ஞானி மகிழ்ந்து ஓ... பக்கங்கள் எழுதுவார் போல. கொடுமைடா சாமி...


    அப்துல் கலாமைச் சந்தித்த பிறகு மாணாவர்கள் வருத்தம் தெரிவித்தார்களாம். ரஜினியையோ அல்லது திரிஷாவையோ சந்தித்து இருந்தால் அல்லவா செம பூஸ்ட்டில் இருப்பார்கள். இப்படி படித்தவர்களையும், விஞ்ஞானிகளையும் எல்லாக் குழந்தைகளும் சந்திப்பது என்பது ஞானிக்கு கசப்பு தரும் விஷயம் போல.
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •