ஆதி..
கலைஞர் தமிழரல்ல என்பது ஏற்க இயலவில்லை.... எங்கோ தவறு நடக்கிறது.. நிச்சயம் அவர் தமிழர் தான் என்பது பற்றி நான் அறிவேன்..
ஆனால்.. அவற்றை விளக்க.. ஆதாரம் காட்ட விரும்பவில்லை..
இன, மொழி, ஜாதி பேதங்கள் மன்றத்தில் வேண்டாமே... தமிழரென ஆதாரம் காட்ட... இன்னும் உட்பிரிவுகள் பற்றி ஆராய வேண்டி இருக்கும்.. அவை நல்ல மனிதருக்கு அழகல்லவே..
________________________________பொதுவாக மன்றத்தினர் அனைவருக்கும்..
உலகில் மனிதர் அனைவரும் சமமே.. இதில் தெலுங்கர்.. கன்னடர்.. தமிழர் என்ற பாகுபாடு வேண்டாம்.. குறைந்த பட்சம் நம்மிலிருந்தாவது அப்படி பார்க்காதிருக்கும் உறுதி மொழியை ஏற்போமா??
மன்றத்தில் தமிழைத் தவிர்த்து வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் பலர் சிறந்த முறையில் படைப்பாக்கங்கள் தருகின்றனர்.. தருவார்கள்..
மன்றத்தில் எல்லா மனிதர்களும் சமமே..
இவ்வகை பிரிவினைகள் பற்றிய வாதங்கள் இனி வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
Bookmarks