Page 5 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast
Results 49 to 60 of 71

Thread: ரஜினிக்கு ஞாநியின் கடிதம்(ஒ பக்கங்கள்)

                  
   
   
  1. #49
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஏழைவீட்டு கொலை கூட கண்ணுக்குத் தெரியாது. ஆனா பணக்காரன் வீட்டு கோபம் ஊரையே சுத்தும்
    ஊரைச் சுத்தும் தென்றல் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

  2. #50
    இனியவர் பண்பட்டவர் உதயசூரியன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Posts
    786
    Post Thanks / Like
    iCash Credits
    13,558
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by ஸ்ரீதர் View Post
    முதலில் ஹொகெனக்கல் பிரச்சனைக்கு வருவோம்.

    ரஜினி , தன்னை நம்பி முதலீடு செய்தவர்கள் நட்டம் அடையக்கூடாது என்பதற்காக தன்னுடைய பேச்சிற்கு வருத்தம் தெரிவித்தது தமிழ்நாட்டுக்கு செய்த துரோகம் என்றே வைத்துக்கொள்வோம்.

    அனைத்து நடிகர் நடிகை களையும் அழைத்து பெரிய அளவில் விளம்பரம் எல்லாம் செய்து , அதை தன்னுடைய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பி , அதிலும் காசு பார்த்துவிட்டு , சத்யராஜ் போன்ற ஜாலராக்களை விட்டு வீர வசனங்களை பேச விட்டு , தமிழர் தலைவர் என்று கூறிக்கொண்டு , எல்லாம் முடிந்த பிறகு , கர்நாடக தேர்தல் முடியட்டும் என்று ஒரு சூப்பர் பல்டி அடித்த மாண்புமிகு தமிழக முதலமைசசர் அடித்த பல்டிக்கு பெயர் என்ன??

    அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாமல் உள்ள ஞானி , சத்யராஜ் போன்றவர்களின் நிலமையை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

    இதிலிருந்து தெரிவது இதுதான் :-

    1) ”ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி” என்றொரு பழமொழி உண்டு. இங்கே ரஜினிக்கு அந்த நிலமைதான். ரஜினிதானே எவ்வளவு திட்டினாலும் யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை. அதே சமயத்தில் புகழும் கிடைக்கும். அதே சமயத்தில் அவருடைய புகழையும் , செல்வத்தையும் பார்த்து அடையும் வயிற்றெரிச்சலுக்கு மருந்தாக இருக்கும்.

    2) மக்களின் அரசாங்க பணத்தை போட்டு செய்யும் திட்டங்களில் தன் சொந்த காசை போட்டு செய்தது போல விளம்பரம் தேடிக்கொள்ளும் அரசியல்வாதிகள் நல்லவர்கள். தன் சொந்த பணத்தில் சிலருக்கு உதவி செய்து அடக்கமாக இருக்கும் ரஜினி போன்றவர்கள் கெட்டவர்கள்/இளிச்சவாயர்கள்.

    என்ன உலகமடா சாமி இது??

    சிரிதர் அவர்களே. ரஜினி ரசிகராக இருந்தாலும்.. பக்குவம் படும் நேரம் இது..
    அந்த பக்குவம் உங்களுக்கு வர வேண்டும்...
    வரலாறுகளை தெரிந்து கொண்டு பேச வேண்டும்..
    தமிழ் மற்றும் தமிழர்கள்..ஜால்ராக்கள்..!! என்று எங்கிருந்தோ வந்த ஒரு கூத்தாடிகள் சொல்ல கூடாது..
    ஞானி விமர்சனத்தை.. 100 சதத்தை எதிர் கொண்டவர் கலைஞர் என்பது தெரியுமா...??
    மற்றவர்கள் அதற்கு அடுத்த படி தான்.. இது தான் உண்மையும்..
    ஆனாலும்.. விமர்சித்தவரும்.. விமர்சிக்க பட்டவர்கருமான கலைஞரும் அதி தீவிர எதிரியும் கிடையாது...

    துரோகம்!!!! இன்று மட்டும் ரஜினி செய்ததில்லை..
    என்றைக்கு அவர்.. தமிழக மக்கல்ளின் பணத்தை.. ஒரு சிரு உழைப்பும் இல்லாமல் சொத்துக்கள் வாங்கினாரோ.. அதிலிருந்து.. ஆரம்பம்...
    அதை பட்டியலிட்டும் நிறைய திரிகள் வந்துள்ளது..

    திரையில் காட்டும் நடிகனை.. நிஜத்தில்.. நம்பாதீர்கள் என்று உங்கள் ரஜினியே சொல்லியிருக்கின்றார்..
    மேலும் நான் என்ன சொல்ல..
    நீங்கள்..ரஜினிக்காக ஒகேனக்கல் என்ன தமிழ் நாட்டையும் எடுத்து கொடுக்க தயாராக இருக்கலாம்.. ஆனால் எம்மால் முடியாது..

    கலைஞரை விமர்சிக்கும் தகுதி.. வெறும் ரஜினி ரசிகனுக்கெல்லாம் அருகதை கிடையாது..

    நடிகர்கள் பட்டியலுக்கே வருவோம்...
    இது வரை ரஜினி என்ன செய்து இருக்கிறார்....
    ரசிகர்கள் அவர்கள் காசில் பாலாபிஷேகம் நடத்தவும் கெட்டு சீரழியவுமே உதவியிருக்கிறார்..

    போதைக்கும் மற்ற பழக்கங்களுக்கும் அடிமையாகி இருந்தார்..
    தான் தமிழர்கள் மூலம் சம்பாதித்த.. பனத்தை.. கர்னாடகத்தில் முதலீடு செய்தார்..
    எந்த ஒரு நியாயமான மக்கள் போராட்டத்துக்கும்.. போராடியது இல்லை..

    இதில் எங்கேயிருந்து.. அவர் சொந்த பனத்திலிருந்து செய்தார்..
    ஏன் அவரிடம் இருக்கும் பணத்தை வைத்து பல மாவட்டங்களை.. முன்னேற்றியிருக்கலாமே..??
    சிவாஜி படத்தில் உள்ளது போல..
    அப்புறம் அதையும் சொல்லி விடுவார்.. அது ஷங்கர் வசனம்.. அதை நீங்கள் நம்பினால் நானா பொறுப்பு..என்று...!!

    சினிமாவில் காட்டியதையே.. சொந்தமாக செய்தாக கூறும்.. நடிகர்கள் மத்தியில்.. தன்னுடைய ஆட்ச்சியில் நடந்தவற்றை.. தான் செய்த்தது என்று சொல்வதில் என்ன தவறு..

    இன்னும் ஒன்று தெரியுமா..??
    எப்பொழுதும் கலைஞர்.. ஆட்சி காலத்து சாதனகளை பட்டியலிடும் போதும்..பெரும்பாலும்.. தான் தனது என்று சொல்லவும் மாட்டார்..
    பெரும்பான்மையான நேரங்களில்.. தி.மு.க. ஆட்சியில் என்று தான் குறிப்பிடுவார்....

    சிரிதர் அவர்களே.. உண்மையான தமிழர்கள் என்றால்.. கோவை தமிழ் ரஜினி ரசிகர்கள் போல் இருக்க வேன்டும்..
    தவெறென்றால் தட்டி கேட்க வேண்டும்.. இல்லையென்றால்.. கம்முனு இருக்க வேண்டும்..
    பத்தாம்பசலி தனமாக ஒன்றும் தெரியாமல்.. ஞானி அவரை கேட்க வில்லை என்று பேச கூடாது

    இன்றும் தமிழகம் காணும் அசாதாரன வளர்ச்சிக்கு தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும்..கலைஞரின் உழைப்பும் தான் பேசும்..

    எல்லோருக்கும் ரஜினி பற்றியும் தெரியும்..
    ஞானி பற்றியும் தெரியும்..
    கலைஞர் பற்றியும் தெரியும்..
    என்ன ரஜினி வேஷம் இனி எடு படாது என்பது மட்டுமே உண்மை..

    இன்னும் ஒன்று சொல்லி கொள்கிறேன்..

    கர்னாடக மக்கள் பார்த்து தான் இவர்(ரஜினி) சூப்பர் ஸ்டார் ஆனாரா???
    ராஜ்குமாருக்காக பொங்கியெழுந்தாரே..??
    சொத்துக்கள் கர்னாடகத்தில் குவித்தாரே..??
    தமிழர்களின் எதிரிகள்.. கர்னாடக வெறியர்கள்.. இவர் நண்பர்கள். என்று சொல்லியிருக்கின்றாரே..
    பேசி பல மாதங்களுக்கு பிறகு கர்னாடக மக்கள் என்ன பாடம் சொல்லி தந்தனர்..
    அங்கே ஓடி தான் வசூல் எடுக்க முடியும்னு ரஜினிக்கு உண்டா...

    எல்லாம்.. அவரின் கர்னாடக வெறி அவ்வளவே..
    இங்கே பொழைப்பை ஓட்டும் ரஜினிக்கே.. அவ்வளவு பாசம் கர்னாடகத்து மேல இருக்கும் போது..
    தமிழர்கள்.. என்ன பே...களா..??

    குசேலன் படத்தில் வரும் பாடலில்.. எம்.ஜி.ஆரு, சிவாஜியுடன்.. ராஜ்குமாரை சேர்க்க சொன்னது யாருன்னு ஊருக்கே தெரியும்..
    எத்தனை தமிழர்கள் ராஜ்குமாரை தெரியும்..
    எத்தனை ராஜ்குமார் படம் தமிழகத்தில் வெளி வந்து வெற்றி பெற்றது...??

    கடைசியாக ஒன்று..
    ரஜினி கட்டிய ராகவேந்திரா மண்டபத்தின் வாடகை என்ன தெரியுமா..??
    அது ஏழைகளுக்கா..??
    எத்தனை ரசிகர்களின் கல்யாணம் நடந்தது..??
    தனது மகள் கல்யாணத்திற்கு வாய் மொழி அழைப்பு கூட இல்லாமல்.. வந்திருந்த காக்கை கூட்ட ரசிகர்களை.. பெரியவர்கள் வரும் இடத்தில் இவர்களுக்கு என்ன வேலை என்று அடித்து விரட்டிய கொடுமை(போலிசை விட்டு) தெரியுமல்லவா..??
    அடுத்த நாள் பேட்டி கொடுத்து ரசிகர்களை.. சமாதன படுத்தியதும் தெரியுமல்லவா..??

    இது வரை.. பார்த்திபன் செய்த உதவி கூட ரஜினியால் செய்ததில்லை..
    மன்றத்தின் மூலம் பணம் கொடுக்கிறார் என்ற தகவலும் இல்லை..
    பாவம் ரசிகர்கள்.. அது அவர்களின் பணம்..
    அப்படி ரஜினி கொடுப்பாரேயானால்.. அதுவும்.. வியாபாரம் தான்.. அதை அனைத்து நடிகர்களும் செய்கின்றனர்...?? அதற்கு எதற்கு ரஜினிக்கு மட்டும் நல்லவன் வேஷம்..??

    ஒரு லாரன்சு செய்யும் நல்ல காரியம்..
    சிவகுமார்.. சூரியா செய்யும் நல்ல காரியம் கூட ரஜினி செய்த்ததில்லை..
    அவர்களின் காலுக்கடியில் தான்..ரஜினி..

    இன்னும் சொல்லலாம்.. சொல்லி கொண்டே போகலாம்..

    அதனால்.. ரசிகர் என்றால்.. திரையில் விசிலடிப்பதை மட்டும் செய்து விட்டு போங்கள்..
    தமிழர்களின் உரிமையில்.. அரசியல் செய்து ஒரு வரலாறும் தெரியாமல் பொத்தாம் பொதுவாய் பேசுவதை தவிருங்கள்..
    தவறிருந்தால் தலவனின்.. பேச்சை திருத்துங்கள்..
    ஒரு தலைவன் தான் என்ன பேசுகிறோம் என்பதை ஆராய்ந்து பேச வேன்டும்.. அது ரஜினியிடம் இல்லை என்பது நிதர்சன உண்மை..?

    சிரிதர்..அவர்களே.. ரஜினி திரையில் சாகசம் காட்டியதோடு சரி.. நிஜத்தில் அவர் கையாகாலா தனம் அவர் குடும்பத்திற்குள்ளேயும் உள்ளது..

    கலைஞர் பார்க்காத விமர்சனம் கிடையாது..

    சிறு வயது முதல்.. போராட்டம் பல கண்டு.. இன்று தமிழர்களை ஏச்சிய கூட்டத்திற்கு சமமாக உட்கார வைத்த பெருமை..அவருக்கு உள்ளது.. ரஜினி திரையில் தான் செய்ய போகிறேன்.. என்று சொல்லி கொண்டே பணத்தை சுருட்டினார்..
    கலைஞர்.. நடைமுறையில் சாதனைகளையும் சோதனைகளையும் தமிழுக்காகவும்.. தமிழர்களுக்காகவும்.. சந்தித்தவர்..


    கலைஞர் பற்றி ஞானியின் விமர்சனங்களை படித்து பாரும்.. அது போல் எல்லாம் விமர்சனம் வைத்தால்.. ரஜினி தாங்குவாரா.. அதற்கு முன் சில ரசிகர்கள் என்று சொல்லி கொள்பவர்கள்(தமிழர்களாக இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்)... முதலில் தாங்கமல் தூக்கு போட்டு கொள்ளுவார்கள் போலிருக்கு..

    ஞானி ரஜினியை கேட்டது..0.001 சதம் தான்..
    ரஜினி மற்றும் ஞானி விஷயத்தில்.. ஒன்றும் தெரியாமல் கலைஞரை இழிவு செய்யும் பதிவுக்கான பதில் தான் இது.....
    மன்னிக்கவும்

    அன்பு ரசிகன் அவர்களே..
    நீங்கள் புத்தி சாலி தனமாக பேசி.. ரஜினியின் நடவடிக்கைக்கு நியாய படுத்த முயற்சி எடுக்கிறீர்கள்.. ஏன் எதற்கு.. யாருக்காக..

    ஒரு நல்லவர் என்று ரஜினி ரசிகர்கள் சும்மனாச்சும் ஒரு வேலி போட்டிருந்தது எப்போதோ உடைந்து போனது..
    அதில் இப்பொழுது அதிகமாக உடைத்து விட்டது..
    அது மட்டுமா.. குசேலன் படத்தில் வரும் வசனங்கள்.. தன்னை பற்றி பெருமை பேசியும்.. இன்னும் தான் ஒரு... என்று நிருபித்து கொண்டார்.. ரஜினி..

    அன்பு ரசிகனே.. ரசிகனாக படத்தை ரசியுங்கள்.. ரஜினியை அல்ல..
    உங்களின் புத்தி சாதுரியமான பேச்சு ரஜினியிடம் இருந்திருந்தால்.. உங்கள் ரஜினிக்கு இப்படி ஒரு அவபெயர் வராமலாவது தடுத்திருக்கலாம்...

    வாழ்க தமிழ்
    சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
    மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்
    !!!


    நல்ல சினிமாவை பார்க்கணுமா...???

  3. #51
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Jun 2008
    Location
    சென்னை
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    10,295
    Downloads
    25
    Uploads
    3
    தமிழ் மற்றும் தமிழர்கள்..ஜால்ராக்கள்..!! என்று எங்கிருந்தோ வந்த ஒரு கூத்தாடிகள் சொல்ல கூடாது

    ---- ரஜினியோ , அவர் ரசிகர்களோ , தமிழையோ தமிழ்ர்களையோ ஜால்ராக்கள் என்று சொல்லவில்லை. நான் எழுதியிருந்தது இதுதான். - =========அனைத்து நடிகர் நடிகை களையும் அழைத்து பெரிய அளவில் விளம்பரம் எல்லாம் செய்து , அதை தன்னுடைய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பி , அதிலும் காசு பார்த்துவிட்டு , சத்யராஜ் போன்ற ஜாலராக்களை விட்டு வீர வசனங்களை பேச விட்டு , தமிழர் தலைவர் என்று கூறிக்கொண்டு , எல்லாம் முடிந்த பிறகு , கர்நாடக தேர்தல் முடியட்டும் என்று ஒரு சூப்பர் பல்டி அடித்த மாண்புமிகு தமிழக முதலமைசசர் அடித்த பல்டிக்கு பெயர் என்ன??


    துரோகம்!!!! இன்று மட்டும் ரஜினி செய்ததில்லை..
    என்றைக்கு அவர்.. தமிழக மக்கல்ளின் பணத்தை.. ஒரு சிரு உழைப்பும் இல்லாமல் சொத்துக்கள் வாங்கினாரோ.. அதிலிருந்து.. ஆரம்பம்...

    ---- திரு ரஜினி அவர்கள் தமிழக மக்களின் பணத்திலிருந்து அல்ல தன் சொந்த பணத்தில் இருந்துதான் வாங்கியுள்ளார். மேலும் அதை தன் சொந்த உழைப்பினால்தான் வாங்கியுள்ளார். தன் சொந்த சம்பாத்தியத்தில் இருந்து சொத்துக்கள் வாங்குவது அரசியல்வாதிகளின் அகராதியில் துரோகம்தான் என நினைக்கிறேன்

    கலைஞரை விமர்சிக்கும் தகுதி.. வெறும் ரஜினி ரசிகனுக்கெல்லாம் அருகதை கிடையாது..

    ------ நான் ரஜினி ரசிகன் மட்டும் அல்ல. இதே உஙகள் கலைஞருக்கு ஓட்டு போட்டவன். இந்த நாட்டின் குடிமகன். ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் ஆட்சியில் இருப்பவர்களை விமர்சனம் செய்யவோ கேள்வி கேட்கவோ உரிமை / அருகதை உண்டு. அதுதான் உண்மையான ஜனநாயகம். நீஙகள் இதை மறுத்தால் நடப்பது ஜனநாயகம் அல்ல சர்வாதிகாரம்.

    இது வரை ரஜினி என்ன செய்து இருக்கிறார்....
    ரசிகர்கள் அவர்கள் காசில் பாலாபிஷேகம் நடத்தவும் கெட்டு சீரழியவுமே உதவியிருக்கிறார்

    -------- மற்றவர்கள் விளம்பரத்தோடு செய்வதை ரஜினி விளம்பரம் இல்லாமல் செய்துகொண்டு இருக்கிறார். என் நண்பர்கள் வட்டாரத்திலேயே பலருக்கு படிப்புக்காக , திருமணத்திற்காக , தொழிலுக்காக என பல உதவிகள் செய்திருக்கிறார். இதை ஆதாரபூர்வமாக என்னால் நிரூபிக்க முடியும். இந்த உதவிக்காக அவர் போட்ட நிபந்தனை ஒன்றே ஒன்றுதான்,- அதை விளம்பரபடுத்தக்கூடாது என்பதுதான் அது.

    சினிமாவில் காட்டியதையே.. சொந்தமாக செய்தாக கூறும்.. நடிகர்கள் மத்தியில்.. தன்னுடைய ஆட்ச்சியில் நடந்தவற்றை.. தான் செய்த்தது என்று சொல்வதில் என்ன தவறு..
    ---- ஆக ஆட்சியில்தான் செய்கிறார்கள் , அரசியல்வாதிகள் அல்ல என்பதை நீங்களே ஒத்துக்கொள்கின்றீர்கள். இது தவறா அல்லது சரியா என்பதை மன்ற நணபர்களின் கணிப்பிற்கே விட்டு விடுகிறேன்.

    சொத்துக்கள் கர்னாடகத்தில் குவித்தாரே..??

    - சொத்துக்கள் கர்நாடகத்தில் மட்டுமல்ல எல்லா இடத்திலும் வைத்திருக்கட்டும். வைத்தும் இருக்கிறார். அதுவும் இந்தியாவின் ஒரு பகுதிதானே. இதில் என்ன தவறை / துரோகத்தை கண்டீர்கள்?? இது அவரைப்பார்த்து அடையும் வயிற்றெரிச்சல் என்று எனக்கு படுகிறது.

    சிரிதர்..அவர்களே.. ரஜினி திரையில் சாகசம் காட்டியதோடு சரி.. நிஜத்தில் அவர் கையாகாலா தனம் அவர் குடும்பத்திற்குள்ளேயும் உள்ளது..
    ---- அவருடையது மட்டுமல்ல எவருடைய குடும்ப விஷயத்தையும் விமர்சிக்க உஙகளுக்கு மட்டுமல்ல எவருக்கும் உரிமை கிடையாது.

    ஞானி ரஜினியை கேட்டது..0.001 சதம் தான்..
    ரஜினி மற்றும் ஞானி விஷயத்தில்.. ஒன்றும் தெரியாமல் கலைஞரை இழிவு செய்யும் பதிவுக்கான பதில் தான் இது.....
    மன்னிக்கவும்

    ----- இதை படிக்கும் போது இரு விஷயங்களை எனக்கு சொல்ல தோன்றுகிறது.
    1) கலைஞரை நான் இழிவாக ஒன்றும் சொல்லிவிடவில்லை. உண்மையத்தான் சுட்டிக்காட்டியுளேன். உண்மை சுடத்தான் செய்யும். இவ்வளவு விளக்கமாக பதில் அளித்துள்ள நீங்கள் அவர் அடித்த பல்டியை பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லமுடியவில்லையே?? உஙகள் பாஷையில் சொல்வது என்றால் இதுதான் அரசியல் சாதுர்யம்.

    ) மக்களின் அரசாங்க பணத்தை போட்டு செய்யும் திட்டங்களில் தன் சொந்த காசை போட்டு செய்தது போல விளம்பரம் தேடிக்கொள்ளும் அரசியல்வாதிகள் நல்லவர்கள். தன் சொந்த பணத்தில் சிலருக்கு உதவி செய்து அடக்கமாக இருக்கும் ரஜினி போன்றவர்கள் கெட்டவர்கள்/இளிச்சவாயர்கள்
    ------- 2) நான் பொதுவாக அரசியல்வாதிகளை பற்றித்தானே விமர்சித்து இருந்தேன். கலைஞரை அல்லவே?? உஙளுக்கு ஏன் சுர்ரென கோபம் வருகிறது?? குற்றமுள்ள நெஞசம் குறுகுறுக்கத்தான் செய்யும்.

    இன்னும் பல விஷயங்களை எடுத்துச்சொல்ல விரும்புகிறேன். ஆனால் அதை சொல்லி நீங்கள் செய்ததுபோல் பிரச்சனையை திசை திருப்ப விரும்பவில்லை.

    நான் வீழ்ந்ததாகவே இருக்கட்டும். தமிழும் தமிழர்களாகிய நாம் அனைவரும் வாழ்ந்தால் போதும்.
    அன்புடன்,
    ஸ்ரீதர்


    அன்பே சிவம்

  4. #52
    இனியவர் பண்பட்டவர் உதயசூரியன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Posts
    786
    Post Thanks / Like
    iCash Credits
    13,558
    Downloads
    1
    Uploads
    0
    இத்திரிக்கும் பல்டி என்று சொன்ன விஷயத்திற்க்கும் சம்பந்தமில்லை என்பதனால் சொன்னேன்
    ரஜினி ஞானி.. பற்றிய திரி என்பதானால்.. அது பற்றி பேசலாம்..

    கலைஞரை ஞானி விமர்சித்ததை கண்டுள்ளீர்களா..
    இப்பொழுதும் புத்தக கன்காட்சியில் ஞானி உட்கார்ந்து இருப்பார் கேட்டு பாருங்கள்.. அவர் எவ்வளவு.. கலைஞரை சாடியிடுப்பார்.. என்று..

    அப்புறம் உங்களின் கேள்வி.. என்ன பல்டி.. ஒரு சிறந்த முதல்வர்.. தமிழர்கள் அங்கே கன்னடர்களால் தாக்கபடுவதை அதை வைத்து ஒரு அரசியல் கட்சி அட்டகாசம் செய்வது கன்டு.. அந்த தீயை அனைத்தார்.. ரஜினி பேசியது போல் கலைஞர் அந்த நேரத்தில் பேசியிருந்தால்...??
    பேச வேண்டும் .. இடம் பொருள் ஏவல் பார்த்து...பேச வேண்டும்..
    அது புத்தி சாலி தனம் இல்லை அது சுயனலம்..

    தான் நடித்த படத்துக்கு.. கன்னடகர்களுக்கு மன்னிப்பு கேட்பாராம்.. அதுவும் கன்னடர்களிடம் இருந்து பாடம் கற்று கொண்டாராம்.. அது பொது நல செயலாம்..உங்கள் பதிவில் கேட்ட பல்டிக்கு தான் கலைஞர் தான் பணிகளை தொடங்கியுள்ளாரே..
    இன்றும் மு.க ஸ்டாலின் அப்பணிக்கான தலைவரை நியமித்திருக்கிராரே.. படிக்க வில்லையா.. இதையும் பகிரங்கமாக்கி.. கன்னடர்கலை ரஜினி தூண்டி விட செய்தாலும் செய்வார்..


    அப்புறம்
    உங்கலை நீங்களெ சொல்லும் சமாதானம்.. தான் ரஜினி செய்த செய்யும் செயலுக்கு அர்த்தமில்லாமல் போனது..
    ஒரு கெவலமான நடிக்கவும் தெரியாத நட்கனுக்கே.. பொது வாழ்க்கைக்கு முக்கியம் கொடுத்தால்.. அதன் விமர்சனமும் தாங்கி தான் ஆக வேண்டும்..

    கன்னட மக்கள் பாடம் கற்று கொடுத்தனர்..
    தமிழர்கள்.. ....கள்..
    என்பது அவர்களின் ரசிகளின் மூலம்.. தெரிந்து கொண்டார்..Pஓலும்.. அதனால் தான் தமிழர்கள் பாடம் கற்று தந்தனர் என்று ரஜினி ரசிகர்கள் செய்திருக்க வேண்டாமா..

    அப்புறம்.. நீங்கள்.. சொன்ன உதவிகள்.. பற்றிய செய்திகள்.. சமாளிப்பு..
    என்பது நன்றாக தெரியும்..
    உங்கள் வயது அப்படி..என்ன சொல்வது..

    என்னுடிஅய எல்ல கேள்விக்கும் நீங்கள் தந்தது ஆக்க பூர்வமான பதிலா..

    ஞானி என்ன சொன்னார்..
    ரஜினி பேசியது என்ன அதில் என்ன நியாயம்..
    குசேலன் ப்ளப்பிற்கு என்ன காரனம்.. இது தானே. இத்திரியில் பெச படுகிறது..

    பெசுவோம்
    மற்றவரை, கலைஞரை வம்பிழுக்கலாம் விமர்சிக்கலாம்.. அது போல் விமர்சனங்கள் அரசியல் திரியில் உள்லனவே..
    இல்லையென்று சொல்ல வில்லையே..

    மன்னிக்கவும்
    சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
    மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்
    !!!


    நல்ல சினிமாவை பார்க்கணுமா...???

  5. #53
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உழைத்து சம்பாதிக்கும் ரஜினியும், ஊரைக் கொள்ளையடித்து ஆசியாவிலேயே பெரிய பணக்கார குடும்பமாய் தன் குடும்பத்தை வளர்த்துக்கொண்ட கலைஞரும் ஒன்றா...? பேசிப்பேசியே மக்களை மடையர்களாக்கி, மானாவாரியாய் சொத்து சேர்த்தது...தெரியாதா? தமிழருக்காக வாழும் தமிழராம்...வெட்ககேடு....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #54
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    உழைத்து சம்பாதிக்கும் ரஜினியும், ஊரைக் கொள்ளையடித்து ஆசியாவிலேயே பெரிய பணக்கார குடும்பமாய் தன் குடும்பத்தை வளர்த்துக்கொண்ட கலைஞரும் ஒன்றா...? பேசிப்பேசியே மக்களை மடையர்களாக்கி, மானாவாரியாய் சொத்து சேர்த்தது...தெரியாதா? தமிழருக்காக வாழும் தமிழராம்...வெட்ககேடு....
    என்ன சிவா அண்ணா இப்படி சொல்லிபுட்டிங்க..

    இருவருமே தமிழரில்லையே..

    இவர் கன்னடர்
    அவர் தெலுங்கர்..

    இருவருக்கும் உள்ள..

    ஒற்றுமை : - வசனம்

    வேறுபாடு :-

    இவர் பேசி நடிப்பார்
    அவர் எழுதி பேசுவார்
    அன்புடன் ஆதி



  7. #55
    இனியவர் பண்பட்டவர் உதயசூரியன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Posts
    786
    Post Thanks / Like
    iCash Credits
    13,558
    Downloads
    1
    Uploads
    0
    தற்போது கூட இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டுகிர 200பேர் பட்டியலில்.. கலைஞர் பெயரை காணோமே.. சிவாஜி..

    அப்புறம்.. ரஜினி. சம்பாதித்ததும் ஒரு ஏமாற்று வேலை தான்.. அவரை விட கடுமையாக உழைத்த பலராலும் முன்னேற வில்லையே..
    சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
    மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்
    !!!


    நல்ல சினிமாவை பார்க்கணுமா...???

  8. #56
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அன்பு உதயசூரியன்...இத்தனை அப்பாவியாக இரூக்கிறீர்களே...எந்த அரசியல்வாதி..உலகத்துக்குத் தெரிந்து சம்பாதிக்கிறார்கள்? மாட்டுக்கே தெரியாமல்...மடியைக் களவாடும் சூத்திரம் தெரிந்தவன்தானே அரசியல்வாதி!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #57
    இனியவர் பண்பட்டவர் உதயசூரியன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Posts
    786
    Post Thanks / Like
    iCash Credits
    13,558
    Downloads
    1
    Uploads
    0
    அப்படிங்களா..??
    தகவ்லுக்கு நன்றி.. எப்பொழுதும் இளிச்சவாயன் அரசியல் வாதி மட்டுமே..
    நன்றி..

    ரஜினி ரொம்ப நல்லவர்..
    நேர்மையானவர்..
    னேர்மையாக சொத்துக்களை வைத்துள்ளார்..
    அவர் ஒரு தெய்வம்..
    அப்படி தானே..??

    ஞானியும் கலைஞரும் தமிழுக்கும் தமிழருக்கும் வாழ் நாளில் ஒரு நாள் கூட நல்லது நினைக்காத கெவலமானவர்கள்..
    ரஜினி மட்டுமே.. தன் உழைப்பால் இந்த தமிழ் நாட்டு தாகம் தீர்க்கும் தமிழன்.. பச்சை தமிழன் அல்லவா..??

    மிக்க நன்றி..

    ஆதி தவறை திருத்தி கொள்ளுங்கள்.. தவறான தகவல்களை நீங்களே பதிக்கலாமா..??
    சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
    மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்
    !!!


    நல்ல சினிமாவை பார்க்கணுமா...???

  10. #58
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by உதயசூரியன் View Post
    அப்படிங்களா..??
    தகவ்லுக்கு நன்றி.. எப்பொழுதும் இளிச்சவாயன் அரசியல் வாதி மட்டுமே..
    நன்றி..

    ரஜினி ரொம்ப நல்லவர்..
    நேர்மையானவர்..
    னேர்மையாக சொத்துக்களை வைத்துள்ளார்..
    அவர் ஒரு தெய்வம்..
    அப்படி தானே..??

    ஞானியும் கலைஞரும் தமிழுக்கும் தமிழருக்கும் வாழ் நாளில் ஒரு நாள் கூட நல்லது நினைக்காத கெவலமானவர்கள்..
    ரஜினி மட்டுமே.. தன் உழைப்பால் இந்த தமிழ் நாட்டு தாகம் தீர்க்கும் தமிழன்.. பச்சை தமிழன் அல்லவா..??

    மிக்க நன்றி..

    ஆதி தவறை திருத்தி கொள்ளுங்கள்.. தவறான தகவல்களை நீங்களே பதிக்கலாமா..??

    நண்பர் உதயசூரியனுக்கு...

    கோபத்தில் வந்த உங்களது பதிவாக எனக்கு தெரிகிறது. எனக்கு ரஜினி மற்றும் கருணாநிதியின் தனிப்பட்ட வாழ்க்கை விடையங்கள் தெரியாது. கருணாநிதியை எவ்வாறு ஒரு அரசியல் வாதியாக பார்க்கிறீர்களோ அவ்வாறு ஏன் ரஜினியை பார்க்க தவறுகிறீர்கள்???

    அவர் கறுப்புப்பணம் வச்சிருக்கார் என்றால் அதுபற்றி எனக்கு தெரியாது. அவர் சினிமாவை தவிர உழைக்கிறார் என்றால் அது பற்றி நிச்சயமாக எனக்கு தெரியாது. ஆனால் அவர் கோடி கோடியாக சினிமா மூலம் கூட உழைக்கலாம். அது நான் கண்கூறு பார்த்தவன். சிவாஜி திரைப்படத்திற்கு அவர் கேட்டது சம்பளமல்ல. இலாபத்தில் பங்கு என்பது கேள்விப்பட்டது... அது அவரவர் உழைப்பின் திறமையும் வல்லமையும். அதில் நாம் தலையிடமுடியாது. தவிர அவர் அவரது மானிலத்தில் சொத்து சேர்க்கிறார் என்பதும் ஏற்றுக்கொள்ளமுடியாத வாதம். எத்தனையோ அரசியல் வாதிகள் வெளிநாடுகளில் சொத்து சேர்க்கும் போது வெளிமாநிலத்தில் சொத்து சேர்ப்பது தவறா???

    தவிர ரஜினி தமிழுக்கு என்னசெய்தார் என்று கேட்பதெல்லாம் தேவையற்றது. அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடியது தமிழ் மக்களின் ஒருவித வெறி எனலாம். அதற்கு மாற்றீடு அவரிடம் எதிர்பார்ப்பது தவறல்ல. கிடைக்காது விடின் அவரை தூற்றுவது நம் பண்பல்லவே...

    வந்தாரை வாழவைப்பது தான் தமிழனின் மரபு... திட்டி தீர்ப்பதல்லவே???? நம்மாண்பை காப்பாற்ற வேண்டியது நம் கடமை.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #59
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by உதயசூரியன் View Post
    ஆதி தவறை திருத்தி கொள்ளுங்கள்.. தவறான தகவல்களை நீங்களே பதிக்கலாமா..??
    உதய சூரியன்..

    //அவர் தெலுங்கர்..//

    இந்த வரியைதானே சொல்றீங்க.. இது தப்பான தகவலில்லை உதய சூரியன்.. உண்மையில் நான் கலைஞரின் தமிழுக்கு பெரும் ரசிகன்.. என் பிதாமகர் அவர்.. அவரே முன்னுரை எழுதிய கறுப்பு தமிழனே கலங்காதே என்னும் நூலிலும் இந்த தகவல் உண்டு... கலைஞரின் பால்ய சிநேகிதரான உவமை கவிஞர் சுரதாவும் இதை பல இடங்களில் கூறியுள்ளார்.. பால்ய சிநேகிதர் னா சும்மா இல்லீங்க.. கவிதை எழுதுவதில் இருந்து குறும்புதனம் வரை இருவரும் பலவற்றை இணைந்தே தான் செய்வார்களாம்.. திருவாரூரில் ஒரு தெருவில் வசித்தவர்கள்.. தமிழ் நாட்டை ஆண்ட முதல்வர்களில் காமராஜர் அண்ணாவை தவிர மற்ற யாரும் தமிழரில்லை என்றொரு கூற்றுண்டு.. ஆராய்ந்து பாருங்களேன்..
    அன்புடன் ஆதி



  12. #60
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Jun 2008
    Location
    சென்னை
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    10,295
    Downloads
    25
    Uploads
    3
    Quote Originally Posted by உதயசூரியன் View Post
    அப்புறம் உங்களின் கேள்வி.. என்ன பல்டி.. ஒரு சிறந்த முதல்வர்.. தமிழர்கள் அங்கே கன்னடர்களால் தாக்கபடுவதை அதை வைத்து ஒரு அரசியல் கட்சி அட்டகாசம் செய்வது கன்டு.. அந்த தீயை அனைத்தார்.. ரஜினி பேசியது போல் கலைஞர் அந்த நேரத்தில் பேசியிருந்தால்...??
    பேச வேண்டும் .. இடம் பொருள் ஏவல் பார்த்து...பேச வேண்டும்..
    அது புத்தி சாலி தனம் இல்லை அது சுயனலம்..
    தயவு செய்து கலைஞர் மீது உள்ள விமர்சனத்தை தாங்க முடியாமல் கோபம் கொண்டு பேசுவதை தவிருங்கள்.

    என்னுடைய கேள்வியெல்லாம் உண்ணாவிரதத்த்ற்க்கு முன்புவரை இந்த விஷயமெல்லாம் கலைஞருக்கு தெரியாதா?? இந்த் விஷயம் அவராலேயே பெரிதாக்கப்பட்டு பின்னர் அவரே அதில் இருந்து பின்வாங்குவது என்பது பெரிய தலைவருக்கு அழகல்ல.

    நீஙகள் சொன்ன அதே காரணத்துக்காகத்தான் ரஜினியும் சொன்ன விளக்கமும். அதை ரஜினி செய்ததால் தவறு என்று வாதிட்டு பிரச்சனை திசை திருப்பப்படுகிறது. ” மாமியார் உடைத்தால் மண் சட்டி , மருமகள் உடைத்தால் பொன்சட்டி” என்பது இதுதான் போலிருக்கிறது.


    தவிர கலைஞர் ஒன்றும் அங்கே இருக்கும் தமிழருக்காக ஒன்றும் இந்த பல்டியை அடிக்கவில்லை. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இதனால் எந்த பாதகமும் வந்துவிடக்கூடாது என்ற அரசியல் சந்தர்ப்பவாதம்தான் காரணம் என்பது உங்கள் மன்சாட்ச்சிக்கு தெரியும் , அரசியலில் பால பாடம் படிக்கும் குழந்தைக்கும் தெரியும்.


    அப்புறம்.. நீங்கள்.. சொன்ன உதவிகள்.. பற்றிய செய்திகள்.. சமாளிப்பு..
    என்பது நன்றாக தெரியும்..
    உங்கள் வயது அப்படி..என்ன சொல்வது..
    சமாளிப்பு அல்ல நண்பரே!! உண்மை !! உண்மை!! . உண்மை எது பொய் எது என்று பகுத்தாயும் வயது எனக்கு உள்ளது என்று எண்ணுகிறேன்.

    தவிர நான் கலைஞரை ஒரு தமிழனாகவும் , அவருடைய தமிழுக்காகவும் மிகவும் ரசிக்கிறேன். ஆனால் அரசியல்வாதியாக அவர் செயல்பாடுகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுகிறேன் அவ்வளவே!!
    அன்புடன்,
    ஸ்ரீதர்


    அன்பே சிவம்

Page 5 of 6 FirstFirst 1 2 3 4 5 6 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •