ஆற்றங்கரையோர ஆலமரமே...
உன் காதலை வணங்குகிறேன்
கரைகடந்து போன
காதலிக்காக நீ
காத்து நிற்க்கிறாயோ?
கரையொதுங்கும் படகிலேனும்
காதலி வருவாளென
பூத்து நிற்கிறாயோ?
உரசிபோன தென்றலை
உதவிக்கு கூப்பிட்டு
தேவதையின் தாவணிவாசம்
காற்றில் கலந்துவந்தால்
கண்டுபிடித்து கூறச்சொல்..........
கிளையில் கூடுகட்டிய
கிளியிடம் கேள்
உன் காதலியின் குரலை
கேட்டால் கூறச்சொல்.........
உன் வழிசென்ற
வயோகிதரிடம் கேள்
வண்ணப்பறவையை
வழியிலேனும் கண்டீரா?-என்று
உன் வேரினை நனைத்த
காவேரியிடம் கேள்
அந்த தாமரையேதும்
தண்ணீராட வந்ததா?-என்று
உன் விழுதுகளை
தூதுவிட்டு -அந்த
மண்ணிடம் விசாரி
பாவையின் பாதம்
பட்டயிடம் எதுவென்று........
வானத்தை கேள்
வையத்து நிலவதுசென்ற
வழியெதுவென்று......
ஆற்றங்கரையோர ஆலமரமே
உன் காதலை வணங்குகிறேன்
http://priyamudan-prabu.blogspot.com/
Bookmarks