மனமலர் திறந்து
உணர்வு உறிஞ்சிக் குடித்த
பட்டாம் பூச்சியாய்
இரவுமுழுதும்
தலைக்குமேல் படபடத்துவிட்டு
விடியலில் கனவுக்குள்
சிறகு மடிக்கப்போகிறது
இந்தக் கதை....
மடித்த சிறகுகளுக்குள்
பொம்மனின் பெயரை
குறுக்கி வைத்துக் கொண்டு
நானும் சிரிப்பேனாயிருக்கும்....,
உறக்கத்தில்....!!!
வாழ்த்துக்கள் அமரன்.
Bookmarks