பின்னூட்டங்கள் போட்டு என்னைப் பாராட்டி வாழ்த்திய அன்பு நண்பர்கள் அக்னி ராஜா பாரதி சிவா.ஜி மதி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். என் முயற்சி வீண் போகவில்லை என்று அறிந்து மனம் நிறைவு பெறுகிறது.
பின்னூட்டங்கள் போட்டு என்னைப் பாராட்டி வாழ்த்திய அன்பு நண்பர்கள் அக்னி ராஜா பாரதி சிவா.ஜி மதி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். என் முயற்சி வீண் போகவில்லை என்று அறிந்து மனம் நிறைவு பெறுகிறது.
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
ராஜா, சிவா.ஜி அண்ணாக்கள் சொன்னதுபோல்,
வாழ்வியலின் அனைத்துப் பிரிவுகளையும் தன்னுள் அடக்கியபடி,
விரிந்த இந்தத் தொடர்கதை சிறப்பாகவும், சீரியதாகவும் இருந்தது.
தொடர்கதை எழுதுவதென்பது, இலகுவானதொன்றல்ல.
உறுதியும், ஊக்கமும் இருந்தாலே சாத்தியமானதாகும்.
அது உங்களிடம் நிரம்பவே, நிறைவாக இருந்தது.
அதற்கு முதலில் சபாஷ்...
ஒரு கிராமக் களத்திற் தொடங்கிய கதை,
பெரும் நகரங்களையும், உயர் விஞ்ஞான நுட்பங்களையும் சுற்றிவந்து,
மீண்டும் கிராமத்திலேயே நிறைவுபெற்றது.
அனைத்தையும் இணைத்ததில், இயல்பு இருந்தது.
அதற்கு அடுத்த சபாஷ்...
கதையில் சகல அம்சங்களும், சிறப்பாக விவரிக்கப்பட்டிருந்தன.
அவை உண்மையாகவும் இருந்தன.
அதற்கும் ஒரு சாபாஷ்...
உரையாடல்கள் இலக்கணத் தமிழில் இருப்பது,
கதையின் இயல்பையும், யதார்த்தத்தையும் சற்றே குறைப்பதாக எனக்குத் தோன்றுகின்றது.
உரையாடல்களின் போது பேச்சுவழக்குத் தமிழைப் பயன்படுத்தியிருப்பின்,
இந்த இயல்பும் யதார்த்தமும் முழுமை பெற்றிருக்கலாம்.
தொடரப்போகும் உங்கள் எழுத்துக்களைத் தொடரக் காத்திருக்கின்றேன்.
மிகுந்த பாராட்டுக்கள் மதுரையின் மைந்தரே...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
கதையை நான் முழுமையாக ஒரே இடத்தி்ல் இருந்து படித்து முடித்தேன்
மிகவும் நன்றாக உள்ளது கதை பாட்டனார் கூறியது போல்
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது
ஒருவருக்கு கிடைக்க வேண்டிய பாராட்டையும் புகழையும் யாரும்
தட்டிப்பறிக்க முடியது அப்படிப்பறித்தாலும் அது என்றும் அவரிற்கு
நிலைக்காது என்பதனை கதையின் மூலம் நன்றாக தெரிகிறது.
அருமையான கதை பாராட்டுக்கள்
super
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
அடுத்து என்ன என்று ஆர்வத்தினை தூண்டி மிக அருமையான எழுத்து நடையில் இறுதிவரை கொண்டு சென்ற தோழர் மதுரை மைந்தன் அவர்களுக்கு என் வாழ்த்து ..அதே நேரம் கதை சொல் பேச்சு நடை வழக்கில் இருந்திருந்தால் இன்னும் மெருகு கூடியிருக்கும் ..இன்னும் கொஞ்சம் என்று ஆர்வத்தினை தூண்டிய அருமையான அறிவியல் புதினம் ..
என்றும் அன்புடன்
நாஞ்சில் த.க.ஜெய்
..................................................................................
வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
...................................................................................
இன்றுதான் இக்கதையை முழுவதுமாய் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. ஒரே மூச்சில் முழுவதையும் வாசித்தேன். ஆராய்ச்சிக்கென தன்னை அர்ப்பணித்துவிட்டு, குடும்பத்தையும் மறந்து, புதிய கண்டுபிடிப்பொன்றை உருவாக்கிய ஒரு விஞ்ஞானிக்கு, அவர் துறையின் சக ஆய்வாளர்களின் போட்டி மனப்பான்மையினால் எதிர்கொள்ள நேரிடும் சிக்கல்களையும், பிரச்சனைகளையும் அருமையாய் விளக்கியுள்ளீர்கள்.
நன்றாயிருக்கும் ஒருவனைப் பைத்தியமாக்கவும் துணிந்துவிடுகிறது, புகழ்போதையும், பணத்தாசையும். ஒரு நல்ல விஞ்ஞானி சமுதாய நலனைக் கருத்தில் கொண்டே செயல்படுவான் என்பதை ராமன் மூலம் தெளிவாக்கியமை பாராட்டுக்குரியது. இறுதியில் ஆராய்ச்சியைக் கைவிட்டு ஆசிரியப் பணிக்கு ராமன் திரும்புவது சற்றே வருத்தமளிக்கும் திருப்பம்.
நல்லதொரு கருவை மையமாய்க் கொண்டு அறிவியல் தகவல்களையும் இடையில் தந்து, மனிதநேயம் கலந்து, கதையைக் கச்சிதமாய் முடித்தமைக்குப் பாராட்டுகள் மதுரை மைந்தன் அண்ணா. அரசியல் பின்னணியில் அலைக்கழிக்கப்படும் ஆராய்ச்சி முடிவுகள் பற்றிய விவரங்களையும் வெளிப்படுத்தியமை சிறப்பு.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks