Page 4 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast
Results 37 to 48 of 79

Thread: விஞ்ஞானி தொடர் கதை (இறுதி பாகம்):

                  
   
   
  1. #37
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    காற்றிலிருந்து தண்ணீர்...படிக்கவே ஆவலாக இருக்கிறது. சாத்தியப்பட்டால்...எத்தனை சந்தோஷம்? பல கண்டுபிடிப்புகள் சில எழுத்தாளர்களின் கற்பனையில் உதித்தவை என்று சரித்திரம் சொல்கிறது. உங்கள் எண்ணமும் ஈடேற வாழ்த்துகள். கதையை நன்றாகக் கொண்டு போகிறீர்கள். தொடருங்கள். உடன் வருகிறோம்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #38
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    முற்றிலும் வித்தியாசமான, நல்லதொரு தொடர்.
    ஆரம்பத்தில் மூலிகை ராமனோ என்று நினைத்தேன்.
    அறிவியல் குறிப்புகளோடும்,விளக்கப்படங்களோடும் கதை போன்ற வடிவில் சுவாரசியமாகப் போகிறது...தொடருங்கள் மதுரை வீரன்....வாழ்த்துக்கள்.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  3. #39
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மேற்கு நாட்டுப் பெயர்களோடு விஞ்ஞானி வந்தால் நம்பும் நம்மவர்கள்..
    உள்ளூர்ப் பெயரோடு வந்தால் நம்பத் தயங்குவார்கள்..

    இந்த சாபம் நம்மை விட்டு மெல்ல மெல்ல விலகும்..

    உங்கள் கதை அதற்கான கட்டியம்..

    வாழ்த்துகள் மதுரை வீரன்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #40
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நான்கு பாகங்களும் இணைக்கப்பட்டன..
    மதுரை வீரரே..
    படித்துச் சுவைத்த பிறகு எனது கருத்துகளைத் தூவுகின்றேன். உற்சாகம் குறையாமல் தொடருங்கள்..

  5. #41
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    அன்பு நண்பர்களே

    நான் புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியா செல்ல விருப்பதால் இந்த தொடர் கதையைத் தொடருவதில் சற்று தாமதம் ஏற்பட்டு விட்டது. மீதி பகுதியை விரைவில் பதிவு செய்வேன். தாமதத்திற்கு என்னை பொறுத்தருளவும். அனைவரது ஆதரவுக்கும் எனது நன்றி.

    பாகம் 5

    ராமன் மக்களுடன் கிராமத்தை நோக்கி நடக்கத் துவங்கியதும் கூட்டத்திலிருந்து பிரிந்து ஒருவன் மரத்திற்குப் பின் சென்று செல் போனை எடுத்துஇ " சார் ராமன் இந்த இயச்திரத்தை நிறுவப் போகிறார். அவரை ஒரு பைத்தியக்காரர் என்று மக்களிடையே நாம் பரப்பிய செய்தியை யாரும் நம்பவில்லை போலிருக்கிறது. ராமனின் பாட்டனாருக்கு கிராமத்து மக்களிடையே நல்ல செல்வாக்கு இருப்பதாலும் ராமன் அவர்களிடம் தான் ஒரு மன நோயாளி இல்லை என்று நம்ப வைத்து விட்ட தாலும் நமது திட்டம் பலிக்காது. நாம் இப்போது என்ன செய்யலாம்?" என்று மும்பையிலுள்ள தனது எஜமானரிடம் கூறினான்.

    அதற்கு அவர் " இப்போது ஒன்றும் செய்ய வேண்டாம். ராமன் அந்த இயந்திரத்தை நிறுவட்டும். அதற்கு பின் நாம் அவரை தூக்கிட்டு அந்த இயந்திரத்தைக் கைப்பற்றுவோம். இயந்திரம் நிறுவப்பட்டதும் எனக்கு தெரிவி. நான் அங்கு வந்து மற்றவைகளைப் பார்த்துக் கொள்கிறேன்" எனறார்.

    விருந்தாளிக்கான வீட்டை அடைந்ததும் அது சுத்தம் செய்யப் பட்டு ராமன் தங்குவதற்கு ஏற்ற வசதிகள் செய்யப் பட்டிருப்பதையும் கண்டு மூப்பனார் மகிழ்ச்சி அடைகிறார்.

    ராமனுக்கான சாப்பாடும் ஒரு வாழை இலையுடன் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மூப்பனார் ராமனிடம் " அப்ப நீங்க சாப்பிட்டு ஓய்வு எடுத்துக்கங்க. நான் உத்தரவு வாங்கிக்கிறேன்" என்றார். கூட வந்த ஒருவர் " ராமனுக்கு குடிக்க தண்ணீர் நாம் கொடுக்கத் தேவையில்லை. அதான் அவர் கிட்ட மெஷின் இருக்கே" என்று சொல்லி சிரித்தார்.

    அவர்களை வழி அனுப்பி விட்டபின் ராமன் சாப்பிட்டு பிரயாண களைப்பில் சற்றே கண்ணயர்ந்த சமயம் ஒரு உருவம் அந்த வீட்டுக்குள் நுழைந்தது. ராமனின் சூட்கேஸைத் திறந்து அந்த தண்ணீர் மெஷினை எடத்துக் கொண்டு வெளியேறியது அந்த உருவம். அது வேறு யாருமல்ல அஞ்சலையின் கணவனே.

    அஞ்சலையின் முன் அந்த மெஷினை வைத்து பெருமையாக மார் தட்டிக் கொண்டான் அவன். அஞசலைக்கு மிகுந்த கோபம் வந்தது. அவள் " அடப்பாவி. அந்த ஆளு கஷ்டப்பட்டு அந்த மெஷினைப் பண்ணினா அதை திருடிக்கிட்டு வந்திருக்கியேஇ வெட்கமாயில்லை உனக்கு. மெஷினை உடனே கொண்டு போய் திரும்ப வை. இல்லாட்டா காளியாத்தாவுக்கு பொலி போட்டுடுவேன் உன்னை" எனறதும் அவன் கதி கலங்கிப் பொய் விட்டான்.

    "கோவிச்சுக்காதே புள்ளை நான் விளையாட்டா இதை செஞ்சேன். இப்பவே கொண்டு போய் திரும்ப வச்சுடறேன்" என்றான் அவன்.

    நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த ராமன் திடீரென்று கண் விழிக்கையில் அங்கு அஞ்சலையின் கணவன் கையில் மெஷினுடன் இருப்பதைப் பார்த்து வியந்தார். " அய்யா என்னை மன்னிச்சுடுங்க. நீங்க தூங்கிகிட்டு இருக்கச்சே நான் இந்த மெஷினை அஞசலைக்கு காட்ட வேண்டி திருடிட்டேன்" என்றான் அவன்.

    ராமனோ சிரித்துக் கொண்டே " உனக்கு அந்த மெஷின் தானே வேணும். எடுத்துக்கோ" எனறார்.

    இதைக் கெட்டுக் கொண்டே அங்கு வந்த மூப்பனார் " இந்த மெஷினை ஒருத்தருக்கு மட்டும் கொடுப்பது சரியில்லை. அப்புறமா கிராமத்து சனங்க அத்தனை பேரும் ஆளுக்கொரு மெஷினைக் கேப்பாங்க. இந்த மெஷினை இந்த வீட்டு வாசலில் யாரும் எடக்கா வண்ணம் ஒரு கூண்டுக்குள் வைத்து இதிலுள்ள குழாயிலிருந்து தண்ணீரை மாத்திரம் குடிக்க ஏற்பாடு செஞ்சா நல்லாயிருக்கும்" என்றார்.

    ராமனும் இது நல்ல யோசனை என்று ஒப்புக் கொண்டார்.

    இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் போலீஸ் ஜீப் ஒன்று அந்த வீட்டு வாசலில் வந்து நின்றது.

    தொடரும்........

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  6. #42
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    புதிய இடத்தில் பணி,வாழ்வு சிறப்பாய் அமைந்திட வாழ்த்துகள் நண்பரே.

    ------------------------------------------------

    அறிவியல் அடித்தளம்.. வெள்ளந்தியான கிராமக் களம்.. பின்னணியில் கள்வர்கள் -

    சுவையான தொடர். நேரம் அமைந்து தொடர்ந்து முழுமையடைய வாழ்த்துகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    புதிய இடத்தில் பணி,வாழ்வு சிறப்பாய் அமைந்திட வாழ்த்துகள் நண்பரே.

    ------------------------------------------------

    அறிவியல் அடித்தளம்.. வெள்ளந்தியான கிராமக் களம்.. பின்னணியில் கள்வர்கள் -

    சுவையான தொடர். நேரம் அமைந்து தொடர்ந்து முழுமையடைய வாழ்த்துகள்!
    தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மன்றத்து இளைய ராஜா அவர்களே!

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  8. #44
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    விஞ்ஞானி (பாகம்-6):


    ஜீப்பிலிருந்து இறங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமன் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்தார். நுழைந்தவர் அங்கு இருந்த மூப்பனாரைக் கண்டு தெப்பியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு " ஐயா இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தர் இங்கிருக்கிற திரு. ராமனுக்கு எதிராக ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் ராமன் மும்பையில் உள்ள ஒரு மன நல மருத்துவ மனையிலிருந்து தப்பி வந்துள்ளதாகவும் அவரால் கிராம மக்களுக்கு தீங்கு விளையலாம் என்றும் ஆகவே அவரை கைது செய்து காவலில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்" என்றார்.

    போலீஸ் ஜீப் ராமன் தங்கியிருந்த வீட்டுக்கு முன்னால் நிற்பதைக் கண்டு அங்கு கூடிய கிராமத்து மக்கள் இன்ஸ்பெக்டர் கூறியதைக் கேட்டு " ராமனைக் கைது செய்யாதே. போலீஸ் அராஜகம் ஒழிக" என்று கோஷங்கள் இட்டனர். ஜனங்களின் கோஷங்களைக் கேட்டு தர்ம சங்கடத்துக்குள்ளான இன்ஸ்பெக்டர் மூப்பனாரிடம் " ஐயா திரு. ராமனால் ஒரு தீங்கும் விளையாது அப்படி நடந்தால் அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன் என்று நீங்கள் எழுதிக் கொடுத்தால் அதை ஏற்று ராமனை நான் கைது செய்ய மாட்டேன்" என்றார். மூப்பனாரும் அவ்வாறே எழுதிக் கொடுக்க இன்ஸ்பெக்டர் அங்கிருந்து விரைந்தார். கிராமத்து மக்களும் கலைந்து செனறனர்.

    மூப்பனாரும் விடை பெற்று சென்றபின் ராமனின் நினைவுகள் பின் நோக்கிச் சென்றன. மும்பை ஆய்வுக் கூடத்தில் அவரது காற்றிலிருந்து தண்ணீரை உருவாக்கும் பரிசோதனை வெற்றி அடைந்த நாள் நடைபெற்ற வேதனை தரும் நிகழ்வுகள் அவர் கண் முன் விரிந்தன.

    அவரது இயந்திரத்தில் முதல் முதலாக உருவாகிய தண்ணீரைக் கண்டு உற்சாகம் பெருகிய ராமன் அவரது மேலாளரது அறைக்குச் சென்று " சார் எனது காற்றிலிருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் மெஷின் வேலை செய்யத் துவங்கி விட்டது. இனி இந்தியாவின் கிராங்களில் உள்ள குடி நீர் பற்றாக்குறை நீங்கிவிடும். குறிப்பாக தமிழ்நாட்டின் காவிரி நீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணலாம்" எனறு ஆங்கிலத்தில் கூறினார் அந்த வட நாட்டு மேலதிகாரியிடம்.

    அனுபவம் மிகுந்த அந்த மேலதிகாரி சிரித்துக் கொண்டே " ராமன் நீங்க ரொம்ப உணர்ச்சி வசப் படறீங்க. நிதானமாக செயல்படுங்கள். அந்த மெஷினை முழு அளவில் சோதித்து விட்டீர்களா? உருவாகும் தண்ணீர் காற்றில் உள்ள ஈரப் பசை குறைந்தால் நின்று விடுமா? நீங்கள் முழு அளவில் பரிசோதித்து மெஷினைப் பற்றிய ஒரு அறிக்கையை எனக்கு சமர்ப்பியுங்கள். அடுத்து என்ன செய்வது என்பதை ஒரு தேர்ந்த குழு தீர்மானிக்கும்" என்றார். அவர் கூறியதில் இருந்த நியாயங்களை உணர்ந்த ராமன் இருந்தாலும் மேலதிகாரி தன்னை பாராட்டத் தவறியதை நினைத்து வருந்தியவராய் தனது பரிசோதனைக் சூடத்திற்கு திரும்பினார்.

    ராமன் அந்த மெஷினை பல் வேறு சோதனைகளுக்கு உட் படுத்தி ஒரு அறிக்கையை தயாரித்து மேலதிகாரியிடம் சமர்ப்பித்தார். மேலதிகாரி ஆய்வுக் கூடத்தைச் சேர்ந்த தேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்றை நியமித்து அவர்கள் முன் ராமனை அந்த அறிக்கையை சமர்ப்பிக்க சொன்னார். குறிப்பிட்ட நாளில் ராமன் அந்த அறிக்கையை சமர்ப்பித்த போது சிலர் தங்களுக்குள் பேசிக் கொண்டும் சிலர் கண்ணுறக்கம் கொண்டும் இருந்ததைப் பார்த்து மனம் வெம்பினார். ராமன் தனது அறிக்கையை முடித்ததும் ஒரு வயதான விஞ்ஞானி ராமனிடம் " இந்த மெஷினால் அப்படி என்ன பயன் விளையப் போகிறது?" என்று இளக்காரமாக கேட்டார். ராமன் பொறுமையாக காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையைப் பற்றியும் அதனால் பாதிக்கப்படும் விவசாயிகளின் நிலையைப் பற்றியும் இத்தகைய மெஷின்களைக் கொண்டு அப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்று கூறினார்.

    ஒரு விஞ்ஞானி " ராமன் சொல்வதைப் போல் செய்தால் கர்நாடக மக்கள் அதை எதிர்ப்பார்கள். மேலும் அவர்கள் தங்களுக்கும் இத்தகைய மெஷின்கள் வேண்டும் என்பார்கள். ஆகவே நாம் இந்த அறிக்கையை ஒரு ஆராய்ச்சி கட்டுரையாக ஒரு பத்திரிகையில் வெளியிட மட்டுமே வேண்டும். இந்த மெஷின்களை எங்கு நிறுவுவது என்பதை அரசாங்கத்திடம் விட்டு விடலாம் என்றார்".

    மற்றுமோர் விஞ்ஞானி இதை ஆமோதித்து " நான் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவன். எங்களது கட்ச் மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. ஆகவே முதலில் இந்த மெஷின்களை அங்கு தான் நிறுவ வேண்டும் என்றார்".

    இவ்வாறு பல விஞ்ஞானிகள் தங்களது வேறுபட்ட கருத்துக்களை கூறக் கேட்ட மேலதிகாரி " நமது ஆய்வுக் கூடம் ஒரு தேசீய நிறுவனம். நமக்கு மத்திய அரசாங்கத்திடமிருந்து பண உதவி கிடைக்கிறது. அரசாங்க அதிகாரிகள் இந்த மெஷினை அங்கீகாரம் செய்ய வேண்டும். மேலும் இந்த மெஷினை பெரும் அளவில் நிறுவத் தேவையான நிதி அரசாங்கமே தர முடியும். ஆகவே ராமன் இந்த மெஷினைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்". எனறார்.

    மேலதிகாரியின் பேச்சைக் கேட்டு மனமுடைந்த நிலையில் இருந்த ராமனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அப்போது அங்கு நுழைந்து பேசிய சக விஞ்ஞானி கிருஷ்ணனின் வார்த்தைகள்.

    " அனுமதி இல்லாமல் இங்கு நுழைந்ததற்கு உங்களது மன்னிப்பைக் கோருகிறேன். நான் இங்கு வந்ததின் நோக்கம் ராமனின் முகத்திரையைக் கிழிக்கவே. அவர் இங்கு சமர்ப்பித்த மெஷின் எனது முயற்ச்சியில் உருவானது. அதைத் திருடி இங்கு உங்கள் முன் தனது முயற்ச்சியாக சமர்ப்பித்துள்ளார்".


    தொடரும்........

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  9. #45
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    மீண்டும் வாருங்கள் மதுரை வீரன்.
    பணியிடத்தில் சேர்ந்தாகிவிட்டதா...??

    விட்ட இடத்திலிருந்து ஜிவ்வென்று ஆரம்பித்துள்ளீர் கதையை.. அடுத்தது என்னவென்று அறிய ஆவல். சீக்கிரமே தொடருங்கள்.!

  10. #46
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    அன்பு நண்பர் மதி அவர்களே

    எனது இக்கதையில் நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    நான் இன்னும் ஆஸ்திரேலியா சென்று அடைய வில்லை;. வாஷிங்டனிலிருந்து கிளம்பிய நான் வழியில் பீனிக்ஸ் நகரத்தில் மகளுடன் தங்கி உள்ளேன். இவ்வாரக் கடைசியில் ஆஸ்திரேலியா செல்கிறேன்.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    விஞ்ஞானி (பாகம்-7):

    ராமனின் உற்ற நண்பனான கிருஷ்ணனின் குற்றச்சாட்டு ராமன் நெஞசில் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது. ராமன் தனது அப்பாவித் தனத்தில் கிருஷ்ணனிடம் தன்னுடய ஆராய்ச்சியைப் பற்றி பேசியது நினைவுக்கு வந்தது. கிருஷ்ணனும் அவரை ஆதரிக்கும் சில விஞ்ஞானிகளும் ஒரு வர்த்தக நிறுவனத்தின் அதிபரின் வலையில் வீழ்ந்து விட்டது ராமனுக்கு தெரியாது. அந்த அதிபர் கிருஷ்ணன் மூலமாக ராமனின் காற்றிலிருந்து தண்ணீர் உரவாக்கும் ஆராய்ச்சி பற்றிய விவரங்களை அறிந்து அந்த மெஷின்களை தனது நிறுவனம் உருவாக்கினால் பெரும் பொருள் ஈட்ட முடியும் என்ற போராசை கொண்டு கிருஷ்ணனை அந்த மெஷின் பற்றிய விவரங்களை ராமனிடமிருந்து அறிய முடிக்கி விட்டார்.

    கிருஷ்ணனின் திடீர் பிரவேசத்தாலும் அவர் கூறியதைக் கேட்டு வந்த அதிர்ச்சியிலிருந்தும் மீண்ட ராமன் " இல்லை. இது பொய் குற்றச்சாட்டு. கிருஷ்ணன் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்கவேயில்லை. நான் இந்த ஆராய்ச்சியில் என் வியர்வை ரத்தம் சிந்தி இரவு பகலாக சிந்தித்து இந்த மெஷினை உருவாக்கினேன." என்று கத்தினார். ராமனின் மேலாளர் ராமனைப் பற்றி நன்கு அறிந்தவரானதால் அவர் கூறியதில் உண்மை இருக்கிறது என்று உணர்ந்தாலும் கிருஷ்ணனை ஆதரித்து பேசிய சில மூத்த விஞ்ஞானிகளை மறுக்க இயலாமல் போனார். அவர் ராமனிடம் " நீங்கள் இந்த ஆராய்ச்சி பற்றிய ஒரு கட்டுரை எழுதுங்கள். அதில் கிருஷ்ணனின பெயரையும் சேர்த்து விடுங்கள்" என்று சமாதானம் கூறினார். ராமனுக்கு என்ன சொல்வதென்றோ என்ன செய்வதென்றோ தெரியாமல் நின்றார். கிருஷ்ணனுக்கு மேலதிகாரியின் வார்த்தைகளால் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    ஆய்வுக் கூடத்தைவிட்டு வீடு நோக்கி நடந்த ராமனின் மனம் பெரும் சஞசலத்திற்குள்ளாகி இருந்தது. மனம் உடைந்த நிலையில் அவர் ரோட்டின் நடுவே நடக்க குறுக்கே வந்த வாகன ஓட்டிகள் அவரை " க்யா பாகல் ஹோ கயா க்யா? (என்ன பைத்தியமா பிடித்திருக்கு உனக்கு?)" என்று சரமாரியாக திட்டினர்.

    வீட்டை அடைந்த ராமன் காலிங் பெல்லை பல முறை அழுத்தியும் ஒரவரும் வந்து திறக்காதது வேறு அவரது ஏமாற்றங்களை அதிகப் படுத்தியது. வழக்கமாக அவர் பெல்லை அழுத்தியதும் அவரது மகளோ மனைவியோ உடன் வந்து திறப்பார்கள். தன்னிடமிருந்த வீட்டுச் சாவியைக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்த ராமனுக்கு வீட்டு விளக்குகள் ஏற்றப்படாதது இன்னும் வியப்பளித்தது. முன்னறையின் நடுவில் இருந்த மேசையில் இருந்த ஓர் காகிதம் அவரது கவனத்தை ஈர்த்து.

    அக்கடிதத்தை எழுதியிருந்தது அவரது மனைவி. அதில் அவர் " நான் இந்த முடிவை எடுத்தற்கு என்னை மன்னிக்க வேண்டும். கடந்த பல மாதங்களாக நீங்கள் ஒரு நிலையில் இல்லை. என்னை மட்டுமல்லாது நமது மகளையும் தாங்கள் புறக்கணித்து விட்டீர்கள். அவள் பாதி தூக்கத்தில் முழித்துக் கொண்டபோது நீங்கள் உஙகளுக்குள்ளாகவே பேசிக் கொண்டு இருந்ததை பல தடவை பார்த்து பயந்து விட்டிருக்கிறாள். மேலும் நீங்கள் உங்களது விஞ்ஞான தர்க்கங்களையும் வரை படங்களையும் அவளது ஸ்கூல் நோட் புத்தகங்களில் எழுத அதைப் பார்த்த அவளது டீச்சர் அவளைக் கண்டித்திருக்கிறாள். ஆகவே நான் உங்களை உங்களது விஞ்ஞான உலகத்திலேயே விட்டு விட்டு நமது மகளுடன் எனது பெற்றோர் வீட்டிற்கு செல்கிறேன். நீங்கள் பழைய நிலைக்கு திரும்பியவுடன் நாங்கள் திரும்ப உங்களுடன் வாழ வருகிறோம்" என்று எழுதியிருந்தார்.

    கடிதத்தைப் படித்த ராமன் தலை சுற்றி மயங்கி கீழே சரிந்தார். வெகு ரேம் கழித்து கண் முழித்த ராமன் ஏதோ தீர்மானத்திற்கு வந்தவராய் வீட்டை விட்டு ஆய்வுக் கூடத்தை நோக்கி நடந்தார். வாசலில் இருந்த காவலாளி அரைத் தூக்கத்தில் இருந்ததால் மெதுவே அவனுக்குத் தெரியாமல் தனது பரிசோதனை சாலைக்குச் சென்றார். அவரிடமிருந்த சாவியைக் கொண்டு உட் புகுந்த ராமன் பரிசோதனை சாலையின் நடுவே வீற்றிருந்த அந்த மெஷினைத் தொட்டு தடவி சோகம் மேலிட அழத் துவங்கினார்

    அரைத் தூக்கத்திலிருந்த காவலாளி எங்கிருந்தோ வந்த பலத்த சத்தத்தைக் கேட்டு அதை விசாரிக்க கிளம்பினார். ராமனின் பரிசோதனை சாலையிலிருந்து அந்த சத்தம் வரவே அங்கு சென்றடைந்த காவலாளி கண்ட காட்சி அவருக்கு அதிர்ச்சியைத் தந்தது.


    தொடரும்........

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  12. #48
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    இது பல விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆராய்ச்சி சுவாரஸ்யத்தில் குடும்பம் என்றே ஒன்றே மறந்துவிடும். பாவம் ராமன்... அடுத்த என்ன ஆயிற்று...??

Page 4 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •