Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: நான் - முட்செடி

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0

    நான் - முட்செடி

    நான் – முட்செடி

    செடிஎன்று என்னை இப்போதுச் சொல்லமுடியாது
    வெட்டப்பட்டு வீதியில் வீழ்ந்து கிடக்கிறேன்
    நட்டு வளர்த்ததில்லை யாரும் என்னை
    பாத்தி கட்டி நீரிறைத்துப் பார்த்து இரசித்ததுமில்லை
    என்னை விதைத்த அன்னை எங்கோ இருக்கிறாள்
    எங்கிருக்கிறாள என இன்றுவரைத் தெரியாது .. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை

    வான் கொடுக்கும் எனது வயிற்றுக்குணவு
    நானாக யாரிடமும் கையேந்தியதில்லை
    ஏந்தினாலும் எனைத் தேற்றிப் பார்ப்பவர்களும் இல்லை

    ஆனால் என்னைப் பார்ப்பவர்களுக்கு மட்டும் எப்போதும் பொறாமை
    சீராட்டிப் பாராட்டி வளர்க்கும் செடிகளெல்லாம்
    நோஞ்சானாக நோய்ப் பற்றியிருக்கும் போது
    பாதையோரத்தில் கிடக்கும் நான் மட்டும் எப்படி நன்றாகச் செழிப்பாக இருக்கிறேன் என…
    இதில் நான் செய்த பிழை என்னங்க?
    தன்செடி ஏன் வளரவில்லை எனக் கவலைப்படுவதை விட்டு விட்டு
    இவன் ஏன் இப்படி வளர்கிறான் எனக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்..

    எனக்கோ என்னைப் பற்றியும் கவலையில்லை
    பிறரைப்பற்றியும் கவலையில்லை
    இல்ல இல்ல தப்பாதான் சொல்லிட்டேன்
    கவலையில்லாமல் தான் இருந்தேன் …. நேற்று வரை

    கவலை மட்டுமென்ன ஆசையும் தான்.. எனக்கு எந்த ஆசையுமில்லை அந்த மரம்போல் வளர வேண்டுமென்றோ இந்தக் கொடி போல் படரவேண்டுமென்றோ.. எந்தவொரு ஆசையுமில்லை…
    எல்லாம் நேற்றுவரை தான்…

    ஆடிக்காற்றில் அம்மி பறக்குமாமே…
    அம்மி பறக்குமோ என்னவோ… ஆனால் நேற்றடித்தக் காற்றால் என் உயிர்க்காற்று இப்போது பறக்கப் போகிறது…

    நேற்றையக் காலை நன்றாகத்தான் விடிந்தது… பின்னிரவில் லேசாகப் பெய்திருந்த பனியின் ஈரத்தால் காலை உணவும் நன்றாகவே முடிந்தது…
    உடலும் மனமும் உற்சாகம் பெற காலை மஞ்சள் வெயிலில் உடலுக்குச் சக்தி சேர்த்துக் கொண்டிருந்தேன்…

    அப்போது தான் வந்துச் சேர்ந்தது அந்தப் பாழாய்ப்போனக் காற்று…
    இப்படி நான் திட்டினாலும் காற்றுக்கும் எனக்கும் அப்படி ஒன்றும் பெரும் பகையில்லை…
    நாங்கள் இருவருமே நெருங்கிய நண்பர்கள் தீராத விளையாட்டுப் பிள்ளைகள்…
    அன்றும் அப்படித்தான் காற்றுப்பட்டதும் உடலைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்தேன்.. வந்தவன் என்னை விளையாடக் கூப்பிட்டான். இருவருமாக ஓடிப்பிடித்து விளையாடத் துவங்கினோம் … விளையாட்டு வினையாகப் போவதுத் தெரியாமல்..
    (இந்த விளையாட்டும் வினையும் விடவே விடாது போலருக்கே… என்ன கொடுமை அமரன் இது…)

    அவன் போகும் இடமெல்லாம்.. அவனோடு கூட நானும் போனேன்… சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம் இருவரும்… நான் நின்ற படியேச் சுற்ற… அவன் என்னைச் சுற்றிச் சுற்ற… சுற்றிச் சுற்றி.. ஒருவழியாக சுற்றியது போதும் சற்று ஓய்வெடுக்கலாம் எனச் சுற்றுவதைச் சற்று நிறுத்தினேன்.
    (சுத்து கொஞ்சம் அதிகம் தான்…. தலை சுத்திராமப் படிங்க…)

    அப்போது வந்து என்னைச் சூழ்ந்தது அந்த அருமையான வாசம். காற்றிலாடியபடியே.. என்னை உரசிச் சென்றது அந்தச் சேலை…
    அதன் மென்மை எனக்குப் பிடித்திருந்தது… எனது முள் நிறைந்த உடலை ஆதரவாய் வருடியது அது. என் மனமும் உடலும் ஒரு சேர நிறைந்தது.. புது மகிழ்ச்சி புது இரத்தம் உடலெங்கும் பாய.. சூரியனின் சுட்டெரிக்கும் வெயிலெல்லாம் எனக்குக் குளிர்வது போன்றுத் தோன்றியது.

    அவ்வப்போது உரசிச் சென்றுகொண்டிருந்தச் சேலை… சற்று அழுத்தமாகப் பதிந்தது.. தடவிச் செல்லும் சேலையை நழுவவிட மனதில்லை.. நானும் தழுவிக்கொண்டேன் எனது முட்கரங்களால்.
    சேலையின் மென்மையோடு காற்றும் சேர்ந்துக் கொள்ள என்னைச் சுற்றி நன்றாகப் படர்ந்தது சேலை…
    காற்றிற்குப் பயந்ததோ… என நினைத்து நானும் நன்றாக பற்றிக் கொண்டேன். இறுக்கிப் பிடித்துக் கொண்ட சேலையால் சூரியனின் குளிரும் சுடவில்லை என்னை.

    காற்று நின்றது…

    அதுவரை என்னோடு அமைதியாகவிருந்தச் சேலை சட்டெனக் குரலெடுத்து அழவாரம்பித்தது…

    சத்தம் கேட்டுப் பலர் ஓடி வந்தனர். தங்களுக்குள் ஏதேதோப் பேசிக்கொண்டனர்.

    என்னிடமிருந்து சேலையைப் பிரிக்கத் துவங்கினர்.

    “மெதுவா பக்குவமா எடுங்க சேலை கிழிஞ்சிடப்போகுது…” யாரோ சொன்னார்கள் சேலையின் சொந்தக்காரர்கள் போலிருக்கிறது.

    எனக்குச் சேலையை விடமனதில்லை… அவர்கள் பிரிக்கும் போது அழுகையாக வந்தது.. அதுவரை நான் அழுததில்லை.. வாடியிருக்கிறென் உணவில்லாமல் பலநாள். அப்போது கூட அழுததில்லை. அழுதேன் ஆனால் என்னைக் கவனிப்பவர்கள் யாரும் இல்லை… எல்லோர் கண்ணும் சேலையின் மீதே…

    எனக்கோ சேலையைப் பிரிவதே பெருந்துயராக இருந்தது. இன்னும் வலிந்துப் பற்றிக் கொண்டேன்.

    “நல்லாச் சிக்கிக்கிச்சு கிளைய உடச்சாத்தான் எடுக்க முடியும் போலருக்கு…”
    என்ன சொல்கிறார்கள் எனக் கேட்டுச் சுதாரிப்பதற்குள். மளுக் என உடைந்தது ஒருக் கிளை.
    தாங்கமுடியாத வலி.. கத்தவில்லை நான்.
    கத்தினாலும் யார்காதிலும் கேட்கப் போவதில்லை…

    எங்கேச் சேலையை எடுத்து விடுவார்களோ என உடைந்த கிளையோடுச் சேர்த்து இன்னும் பலமாகப் பற்றினேன்.
    விடவில்லை அவர்கள். ஒன்றிரண்டு பேராக இருந்தவர்கள் பலராயினர்… ஆளாளுக்கு போட்டிபோட்டுக் கொண்டு இழுத்ததில் சேலைக் கிழிந்து என் மனதிலிருந்து இரத்தம் வடிந்தது.

    அதற்கு மேல் நான் பிடிக்கவில்லை.. விட்டு விட்டேன். ஆனாலும் அவர்கள் என்னை விடவில்லை… அதற்குள் எனது கிளைகள் பலவற்றை மண்ணைக் கவ்வ வைத்துவிட்டனர்.

    அதோடு விட்டிருக்கலாம். சேலையைத் தான் எடுத்து விட்டார்களே.. போக வேண்டியது தானே… ஆனால் போகவில்லை திரும்ப திரும்ப அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். புதிது புதிதாக கதைகள் முளைத்தன. அந்தக் கதைகளைக் கேட்கும் என்வலிகூட மரத்துப் போய் புன்முறுவல் வர ஆரம்பித்து விட்டது… அடடா இந்த மனிதர்களிடம் தான் என்ன ஒரு கற்பனைச் சக்தி…

    கூடிப் பேசிக்கொண்டிருந்தவர்கள் மத்தியிலிருந்து ஒரு குரல்…
    “ இந்தச் செடி இங்கருக்கிறதால தானே பிரச்சனை முதல்ல இத வெட்டி போடுங்கப்பா…”
    வெட்டி விட்டனர் என்னை அடியோடு… இதோ மண்ணில் வீழ்ந்து கிடக்கிறேன்.
    வீழ்ந்து கிடந்த என்னைப் பார்க்கக் கூட வரவில்லை சேலை… கூட்டத்தோடு போனது.. போகும் போது யாரோ சொன்னார்கள்..

    “நல்லவேள லேசாத்தான் கிழிஞ்சிருக்கு… தச்சிட்டு வெளியத் தெரியாத மாதிரிக் கட்டிக்கலாம்”

    சேலையைத் தைக்கலாம் மண்ணில் வீழ்ந்த என்னைத் தைப்பது யார்..?

    யாரோ என்னை மிதிக்கிறார்கள்… என்னால் மூச்சு விட முடியவில்லை… ஒரு முட்கரம் உடைகிறது… கவலையெதற்குக் கரத்தைப்பற்றி.. உயிரே போகப் போகிறது.
    ஏதோப் பேசுகிறார்களே என்ன அது…

    “ஸ்….ஸ்…. ஆ அம்மா…”

    “என்னப்பா ஆச்சு….”

    “முள்ளு குத்திருச்சும்மா….”

    உயிர் போகும் போதும் எனக்குச் சிரிப்பு வந்தது… வந்து மிதிச்சுட்டு முள்குத்திடுச்சுண்ணு என்மேலேயே பழி போடுறாங்க.

    சூரியன் மறுபடியும் வந்து விட்டான்… அதோ காற்றும் வந்து விட்டது…
    இப்போதுக் காற்று என் நண்பனாக வரவில்லை...
    இந்தக் காற்றுப்பட்டதும் என்னுடல் சிலிர்க்கவில்லை.. சூரியனோடு சேர்ந்து கொண்டு என் இரத்தத்தை உறிஞ்சுகிறான். நான் இறந்து கொண்டிருக்கிறேன்.
    நான் இறந்து விடுவேன் ஆனால் என்னை வெட்டும் போது என்னிலிருந்து சிதறிய விதைகள் இதோ என்னிலிருந்து உறியப்பட்ட இரத்தத்தால் மழைபொழியும் போது... மறுபடி முளைக்கும்.
    முடிந்தால் அவற்றையாவது காப்பாற்றுங்களேன்... வெட்டுப்படாமல்.
    Last edited by செல்வா; 19-07-2008 at 07:18 AM.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    அசத்தல் செல்வா! முள்மரம் தன் வரலாறு கூறுதல். முள்மரம் வரலாற்றைக் கூறுவதன் மூலம் வாழ்க்கையின் தத்துவங்களை அல்லவா கூறுகிறது. மிதித்து விட்டு குத்துகிறதாம்.. எப்பொழுதும் பழியை அடுத்தவர் மீது போட்டே பழக்கமான நமக்கு எப்பொழுதுதான் தெளியப் போகிறதோ. நல்ல கரு செல்வா. பாரதியார் கயிறு தன் வரலாறு கூறுவது போல கவிதை எழுதியுள்ளார். அந்தக் கயிறுக்கு காதலி கூட உண்டு. மீண்டும் என் பாராட்டுக்கள்.
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    முட்செடியிலும்
    மெல்லிய இருதயமா!
    செல்வரே!
    கவி நயத்தோடு எழுதிய கதையில்
    முட்செடிக்கு வந்தது அமர வாழ்வு!
    உம் சொல் முட்கள் தைத்ததால்
    என் நெஞ்சில் இன்ப வேதனை!

    வாழ்த்துக்கள் செல்வா!
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    முட்செடியின் கதையா...புலம்பலா...அங்கலாய்ப்பா...? எதுவாய் இருந்தாலும் சொன்னது நன்றாகவே இருக்கிறது.

    முள்மீது சேலை பட்டாலும், சேலைமீது முள் பட்டாலும் சேதாரம் சேலைக்குத்தானென விவரம் புரியாதவர்கள் சொல்லி வந்தார்கள். இங்கே சேலையால் தன் வாழ்வையே இழந்த முட்செடியைப் பார்த்தபின் சொன்னதைத் திருத்திக்கொள்வார்களோ.

    மிக அருமை செல்வா. அசத்திட்டீங்க. வாழ்த்துகள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    நண்பர் செல்வா

    மிக அருமையான கதை. உங்க கற்பனை அபாரம். இன்னும் நிறைய இது மாதிரி எழுதுங்க. வாழ்த்துக்கள்

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    அருமை செல்வா. சொல்ல வந்த கருத்தினை அழகாய் எடுத்தாண்டமை பாராட்ட வைக்கிறது. இடைச்செறுகலான சில கலாய்ப்புகளைத் தவிர்க்க, கதை இன்னும் பலம் பெறும். அத்தோடு, முடிவு வரிகள் அழுத்தமாக இல்லை. அப்படிக் கொண்டு சென்று அழுத்தமின்றி முடித்தமை சற்று சப்பென்று இருக்கிறது. அந்த இறுதி வரிகளை நீக்கிவிட்டு வேறு வரிகள் கொடுக்கலாம். செடி தன் வரலாறு கூறுவது போன்றவை புதுமையாக சொல்லமுடியாது என்றாலும் அதைச் சொல்லுவதற்கும் திறன் வேண்டும் அல்லவா.. அது வாய்த்திருக்கிறது உங்களுக்கு.

    இவ்வகையில் பாரதியார் கயிறுக்கு காதலி வைத்து பாடிய பாடலும் (காற்றடிக்குது....) கலைஞர் கருணாநிதி குப்பைத் தொட்டி கதை சொல்லுவது போலவும் எழுதியிருக்கிறார்.. இன்னும் பல இருக்கலாம். அவ்வகையில் இது போன்ற கதைகள் வரவேற்கத்தக்கது.
    பாராட்டுக்கள் திரு.செல்வா

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    முள்செடியாக மாறி.... உங்கள் கற்பனை அபாரம்.
    ஆனால் அதுவும் பெண் ஸ்பரிசத்தில் பூ மனமாகி புலம்புவதுதான் என்னவோ போல் இருக்கிறது

    கீழை நாடான்

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    சற்றும் எதிர்பாராத கோணத்தில் கதை..!
    வாடிய பயிரைக்கண்டு வருந்திய வள்ளலாராய் செல்வா...!!
    தொடர்ந்து உங்கள் எழுத்துக்களின் முன்னேற்றத்தை அளவிலா மகிழ்வுடன் பார்த்து வருகிறேன். இந்த முள் பட்டதில் இன்பவேதனை மட்டுமே செல்வா.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    முட்செடியின் கதையா...புலம்பலா...அங்கலாய்ப்பா...? எதுவாய் இருந்தாலும் சொன்னது நன்றாகவே இருக்கிறது.
    முள்மீது சேலை பட்டாலும், சேலைமீது முள் பட்டாலும் சேதாரம் சேலைக்குத்தானென விவரம் புரியாதவர்கள் சொல்லி வந்தார்கள். இங்கே சேலையால் தன் வாழ்வையே இழந்த முட்செடியைப் பார்த்தபின் சொன்னதைத் திருத்திக்கொள்வார்களோ.
    மிக அருமை செல்வா. அசத்திட்டீங்க. வாழ்த்துகள்.
    நன்றி அண்ணா.... என்ன உங்களுக்கு முதல் நன்றி என்று பார்க்கிறீங்களா?
    கதையின் உள்ளே புகுந்து எழுதியவனின் மனத்தைப் படித்த உங்களுக்கு தனிப்பட்ட நன்றிச் சொல்லவில்லையென்றால் தகுமா?
    எல்லாம் உங்கள மாதிரி ஜாம்பவான்களிடமிருந்துக் கற்றுக் கொண்டது தானே அண்ணா.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by mukilan View Post
    மீண்டும் என் பாராட்டுக்கள்.
    நன்றி அண்ணா.... தங்களைப் போன்ற கதாசிரியர்களின் பாராட்டு என்னை இன்னும் இன்னும் ஊக்குவிக்கும். மிக்க நன்றி.

    Quote Originally Posted by நாகரா View Post
    முட்செடியிலும்
    மெல்லிய இருதயமா!
    செல்வரே!
    வாழ்த்துக்கள் செல்வா!
    எல்லா முட்செடிக்குள்ளும் கனிந்த மனமிருந்கும் அண்ணா. காலத்தின் கோலத்தால் தான் கடினப்பட்டுவிடுகிறது.
    வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா.

    Quote Originally Posted by மதுரை வீரன் View Post
    நண்பர் செல்வா
    மிக அருமையான கதை. உங்க கற்பனை அபாரம். இன்னும் நிறைய இது மாதிரி எழுதுங்க. வாழ்த்துக்கள்
    நன்றி ஐயா... தங்கள் பாராட்டுக்களுக்கு.

    Quote Originally Posted by தென்றல் View Post
    அருமை செல்வா. சொல்ல வந்த கருத்தினை அழகாய் எடுத்தாண்டமை பாராட்ட வைக்கிறது. இடைச்செறுகலான சில கலாய்ப்புகளைத் தவிர்க்க, கதை இன்னும் பலம் பெறும். அத்தோடு, முடிவு வரிகள் அழுத்தமாக இல்லை. அப்படிக் கொண்டு சென்று அழுத்தமின்றி முடித்தமை சற்று சப்பென்று இருக்கிறது. அந்த இறுதி வரிகளை நீக்கிவிட்டு வேறு வரிகள் கொடுக்கலாம்.
    பாராட்டுக்கள் திரு.செல்வா
    மன்றத்திற்கு ஒரு அருமையான கதை விமர்சகர் கிடைத்துள்ளார். உங்களதுப் பின்னூட்டங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
    தங்கள் பின்னூட்ட விமர்சனங்கள் கண்டிப்பாக என்போன்று புதிதாக கதைஎழுத முயலும் கத்துக் குட்டிகளுக்கு மிகுந்த ஊக்கம் கொடுக்கும். அதோடு தவறுகளையும் திருத்திக் கற்றுக் கொடுக்கும் மிக்க நன்றி தென்றல் அவர்களே.
    நீங்கள் கூறியது போல் இறுதி வரிகள் நச்சென்று முடியவில்லை தான். இப்போது சிறிது மாற்றியிருக்கிறேன்.
    இடைச் செருகலான கலாய்ப்புகள் தனிக் கதையாகப் பிரிக்கும் போது இருக்காது. மன்றத்திற்கு மட்டும் தான்
    விமர்சனத்திற்கு மிக்க நன்றி தென்றல் அவர்களே...

    Quote Originally Posted by Keelai Naadaan View Post
    முள்செடியாக மாறி.... உங்கள் கற்பனை அபாரம்.
    ஆனால் அதுவும் பெண் ஸ்பரிசத்தில் பூ மனமாகி புலம்புவதுதான் என்னவோ போல் இருக்கிறது
    ஹா...ஹா... நன்றி கீழை நாடன். உங்களது தேடல் கதையைப் படித்துவிட்டு இன்னும் வியப்பிலிருந்து வெளிவரவில்லை என்மனம். அப்படிப்பட்ட அருமையானக் கதையைக் கொணர்ந்த தங்களிடமிருந்து பாராட்டுக்கிடைத்தது மிக மகிழ்ச்சி.
    முட்செடிக்கு மனம் பொருத்தியது தான் இந்தக் கதையே...
    சிவா.ஜி அண்ணாவின் பின்னூட்டத்தை சற்று வாசியுங்கள். அது தான் கதையே...

    Quote Originally Posted by பாரதி View Post
    சற்றும் எதிர்பாராத கோணத்தில் கதை..!
    தொடர்ந்து உங்கள் எழுத்துக்களின் முன்னேற்றத்தை அளவிலா மகிழ்வுடன் பார்த்து வருகிறேன். இந்த முள் பட்டதில் இன்பவேதனை மட்டுமே செல்வா.
    ஆஹா.... இந்தப் பாரதி அண்ணாவின் பாராட்டை அந்தப் பாரதியின் பாராட்டாகவேக் கொள்கிறேன்.
    மிக்க நன்றி அண்ணா.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    சமூக அடித்தட்டு இளைஞன்... ''அநாதை''!
    ''அந்தஸ்து'' மிக்க பெண்ணின் பார்வை அவன் மேல்..!

    பொறுக்குமா சமூகம்?
    நொறுக்கியது அவனை!
    இருப்பதே தவறாம்..
    மயக்கியதும் அவனாம்..

    சபையில் ஏறாத சொற்கள் மட்டுமே உள்ளவர்கள் -
    ஒரு வகையில் மரம், செடி போல் ஊமைகளே!

    மிக நல்ல படைப்புக்கு சிறப்பான பாராட்டுகள் செல்வா!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    சமூக அடித்தட்டு இளைஞன்... ''அநாதை''!
    ''அந்தஸ்து'' மிக்க பெண்ணின் பார்வை அவன் மேல்..!

    பொறுக்குமா சமூகம்?
    நொறுக்கியது அவனை!
    இருப்பதே தவறாம்..
    மயக்கியதும் அவனாம்..

    சபையில் ஏறாத சொற்கள் மட்டுமே உள்ளவர்கள் -
    ஒரு வகையில் மரம், செடி போல் ஊமைகளே!

    மிக நல்ல படைப்புக்கு சிறப்பான பாராட்டுகள் செல்வா!
    செல்வரின் கதையின் குறியீட்டுப் பரிமாணத்தை உணர வைக்கும் இளசு அறிஞர்!
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •