Results 1 to 5 of 5

Thread: என் காவியக் காதலன் கண்ணன் - 3

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0

    என் காவியக் காதலன் கண்ணன் - 3

    மாண்பில் மயக்கம்

    நெடிய இரவை நீட்டி
    தாழம் பூக்களிடும் வாசனையை
    பகல் முழுவதும் நிரப்பி
    நீல விசும்பினைக் குடைந்து
    செய்த மோன மாளிகையில்
    அமர்ந்திருந்தேன்.

    என் உயிர்வலியின்
    ஒரு துமியெடுத்து
    பேரொளியின் ஒருப்பக்கம்
    அறைந்து விளித்ததைக்
    கண்டானோ கண்ணன்?

    நுண்ணொலிகள் கிழிய
    வாசலிடை வந்து நின்றான்

    நான் கொறித்த காற்றை நுகர்ந்து,
    உன் குதிகால் வெடிப்பில்
    ஒரு ரேகையாக இருக்கவிடு என
    விழி கணைகளால் தூதுவிட்டான்.

    பலிக்கவில்லை

    மூர்க்கம் மூக்கில் அமர
    மாளிகை நோக்கி வரலானான்

    மாட்சிமை பொருந்திய மாமதியாய்
    நான் அமர்ந்திருப்பதைக் கண்டு
    நாணம் மிகும் பெண்டிரைப் போல்
    நாணி மயங்கினான்

    அச்சமயம்
    என் தூரிகையின்
    வர்ணம் படா இழைகள்
    அவனென் மாண்பில் மயங்கியதை
    வரைந்துகொண்டிருந்தன.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வாவ்....பிச்சியின் அழகு தமிழில் ஒரு காதல் ராகம். 'நான் கொறித்த காற்று" வித்தியாசமான சிந்தனை. பத்திகளனைத்தும் வரி வரியாய் விமர்சிக்கத் தூண்டினாலும்....கணிணி பிரச்சனையால் என் சிக்கனமான பாராட்டைத் தங்கைக்கு நல்கி வாழ்த்துகிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    பிச்சி சகோதரி

    உங்க கவிதை அருமையானது. அழகான சொற்களால் வித்தியாசமான கருத்துக்களை வெளியிட்ட உங்களது திறமையைப் பாராட்டுகிறேன்.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  4. #4
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வாவ்....பிச்சியின் அழகு தமிழில் ஒரு காதல் ராகம். 'நான் கொறித்த காற்று" வித்தியாசமான சிந்தனை. பத்திகளனைத்தும் வரி வரியாய் விமர்சிக்கத் தூண்டினாலும்....கணிணி பிரச்சனையால் என் சிக்கனமான பாராட்டைத் தங்கைக்கு நல்கி வாழ்த்துகிறேன்.
    மிக்க நன்றி சிவாஜி அண்ணா உங்கள் பாராட்டுக்களே எனக்குப் போதும்.

    அன்புடன்
    பிச்சி
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  5. #5
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by மதுரை வீரன் View Post
    பிச்சி சகோதரி

    உங்க கவிதை அருமையானது. அழகான சொற்களால் வித்தியாசமான கருத்துக்களை வெளியிட்ட உங்களது திறமையைப் பாராட்டுகிறேன்.
    மிக்க நன்றி மதுரை வீரன் அண்ணா.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •