புதுமையாக என்ன செய்யலாம்? ஒன்றும் செய்யமுடியாததுதான்.. இருந்தாலும்...
நம் மன்றத்து கவிஞர்களுக்குக் காதல் என்றால் தேன். காதலை எப்படியும் வைத்து எழுத முடிபவர்கள்... அவர்களுக்கு இந்தத் திரி கொஞ்சமேனும் பயனுள்ளதாக இருக்குமானால் அது எனக்குப் பெருமை.
சரி, என்ன செய்யலாம்?
காதல் பல சூழ்நிலைகளில் பொருத்தி உங்களால் எழுத முடியும் என்பது நான் அறிந்தது. இங்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சூழ்நிலை தரப்படும். அதை மையப்படுத்தி காதல் கவிதைகள் எழுதவேண்டும்.. இதற்கு சில உதாரணங்களோடு நானே துவக்குகிறேன்.
இதோ :
தொடருங்கள் நண்பர்களே! காதல் கோவிலில் வளரட்டும்..மையப்பொருள் : காதல்
இடம் : கோவில் (கோவிலை, கடவுளை சுற்றி காதல் கவிதைகள் புனையலாம்..)
நீ கடவுளைத் தொழுகிறாய்
என்னை நினைத்துக் கொண்டே
கடவுள் அழுகிறான்,
பாவம்
ஒருமுறையாவது அவனை நினைத்துவிடு.
கற்பூரம் கறைந்து ஒழுகுவதைப் போல
உன் பக்தி அத் தெய்வத்தின் முன்
ஒழுகுகிறது.
அபிஷேக அர்ச்சனையால்
கண்களை சிமிட்டமுடியா துக்கத்தில்
அமர்ந்திருக்கிறது தெய்வம்.
பக்தியால் கண்மூடுகையில்
உன் காதணி ஆடக் கண்டேன்
அதன் காதல் ஊசலை அளந்து
வேகத்தைக் கணக்கிடுகிறேன்
அது
எனது இமையின் அசைவோடு
ஒத்துப் போகிறது.
(இத்திரிக்கு நல்ல தலைப்பு சொல்லுங்களேன்.. ப்ளீஸ்)
Bookmarks