Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 31

Thread: காதல் கவிதைகள் எழுத வாருங்கள்.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    காதல் கவிதைகள் எழுத வாருங்கள்.

    புதுமையாக என்ன செய்யலாம்? ஒன்றும் செய்யமுடியாததுதான்.. இருந்தாலும்...

    நம் மன்றத்து கவிஞர்களுக்குக் காதல் என்றால் தேன். காதலை எப்படியும் வைத்து எழுத முடிபவர்கள்... அவர்களுக்கு இந்தத் திரி கொஞ்சமேனும் பயனுள்ளதாக இருக்குமானால் அது எனக்குப் பெருமை.

    சரி, என்ன செய்யலாம்?

    காதல் பல சூழ்நிலைகளில் பொருத்தி உங்களால் எழுத முடியும் என்பது நான் அறிந்தது. இங்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சூழ்நிலை தரப்படும். அதை மையப்படுத்தி காதல் கவிதைகள் எழுதவேண்டும்.. இதற்கு சில உதாரணங்களோடு நானே துவக்குகிறேன்.

    இதோ :

    மையப்பொருள் : காதல்
    இடம் : கோவில் (கோவிலை, கடவுளை சுற்றி காதல் கவிதைகள் புனையலாம்..)

    நீ கடவுளைத் தொழுகிறாய்
    என்னை நினைத்துக் கொண்டே

    கடவுள் அழுகிறான்,
    பாவம்
    ஒருமுறையாவது அவனை நினைத்துவிடு.


    கற்பூரம் கறைந்து ஒழுகுவதைப் போல
    உன் பக்தி அத் தெய்வத்தின் முன்
    ஒழுகுகிறது.

    அபிஷேக அர்ச்சனையால்
    கண்களை சிமிட்டமுடியா துக்கத்தில்
    அமர்ந்திருக்கிறது தெய்வம்.


    பக்தியால் கண்மூடுகையில்
    உன் காதணி ஆடக் கண்டேன்

    அதன் காதல் ஊசலை அளந்து
    வேகத்தைக் கணக்கிடுகிறேன்
    அது
    எனது இமையின் அசைவோடு
    ஒத்துப் போகிறது.
    தொடருங்கள் நண்பர்களே! காதல் கோவிலில் வளரட்டும்..

    (இத்திரிக்கு நல்ல தலைப்பு சொல்லுங்களேன்.. ப்ளீஸ்)
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பெண்
    இடையும் இறைவனும் ஒன்றுதான்
    இரண்டும்
    இருந்தும் தெரிவதே இல்லை!

    - பா.விஜய் பாடல் இது!

    அபிஷேக நேரத்தில், தேவி ஸ்ரீதேவி, அப்பப்பா சரணம், ஸ்ரீதேவி என் வாழ்வில் - என கோவில் குறியீடுகளை அதிகம் குழப்பமாய் பயன்படுத்தியவர் நம் வாலி!

    கோவில், இறை, பக்தி - இவை களங்களாய், பின்புலமாய் இருக்க
    காதல் கவிதை எழுதணும் என்றால் -

    இதய சுத்தியும்
    கத்திபோல் கவனமும் வேணும்.


    ஆதவனின் ஆரம்பம் இங்கே...

    அடுத்தடுத்து இக்களத்தில் அடிபடாமல் கவி விளையாட
    யார் வருகிறார்கள்?

    கவனிப்போம்...
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0
    உயிரற்ற கல்லை
    பக்தியுடன் நோக்குகிறாய்.
    உயிருள்ள என் மேல்
    காதலுடன் நோக்காயோ!

    என்னுள்ளே கடந்தேன்
    உள்ளெல்லாம் உன் உருவம்
    உள்ளம் உருக்கும்
    உன் நினைவின் வெம்மை

    சுடரில் கரையும் கற்பூரம் போல்
    உன் மீது கொண்ட காதலில்
    கரையும் நான்

    நீ நடக்குந் தடங்கள்
    என் நெஞ்சில் விழுகின்றன

    உன்னைக் கடக்குங் கணங்களில்
    படபடக்கும் இதயம்

    என்னுயிர்ப் பறவை
    மெய்க்கு வெளியே
    பறந்து போய்
    தேவாலயம் உன்னில் வாழ்கிறது

    நடைப் பிணமாய்க் கிடக்கும்
    என்னை
    உன் காதல் நோக்கால்
    உயிர்த்தெழச் செய்ய
    உன்னால் மட்டுமே முடியும்

    என் கடவுள் நீ தானடி
    காதல் வரந்தர
    இன்னுமேன் தாமதம்!

    (ஆதவரின் முயற்சிக்கு என் ஆதரவு, நன்றி)
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    மிக்க நன்றி இளசு அண்ணா மற்றும் நாகரா அவர்களே!

    அடுத்தடுத்து யாரும் துவங்காத நிலையில் நான் மீண்டும் கவிதைகளோடு வருகிறேன்...

    கோயில் வளாகங்களை
    இந்த தெய்வங்கள்
    சுற்றுவதில்லை,

    நீ சுற்றுகிறாய்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் பாலகன்'s Avatar
    Join Date
    20 Apr 2008
    Location
    சென்னைக்கு அருகில்
    Posts
    1,636
    Post Thanks / Like
    iCash Credits
    11,081
    Downloads
    12
    Uploads
    0
    ரொம்ப நேரம் கடவுள்
    முன் நிற்காதே என் காதலியே
    உன் அழகில் அவன் மயங்கி
    எனக்கு வேட்டாகிவிட போகிறது

    உன் பூசை புனஸ்காரமெல்லாம்
    கடவுளுக்கு, அந்த மாலை மட்டும்
    எனக்க



    தலைப்பு இப்படி இருந்தால் எப்படி இருக்கும் = உலகம் சுற்றும் காதல்
    அன்புடன்
    பில்லா



    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    02 Jul 2007
    Posts
    308
    Post Thanks / Like
    iCash Credits
    22,159
    Downloads
    192
    Uploads
    0
    மாவிலை தொங்கும்
    கோவிலில்
    ஆவலாய் காத்திருந்தேன்
    பூவிதழ் பறந்து வந்தாள்!
    நாவில் வரவில்லை பேச்சு!!!
    எல்லோரையும் விட நான் அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்!
    எல்லோரையும் விட நான் அதிகம் உழைக்க விரும்புகிறேன்!!
    எல்லோரையும் விட நான் குறைவாகவே எதிர்பார்க்கிறேன்!!!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    வித்தியாசமான முயற்சி என்றால் ஆதவாதான்...
    மன்றத்தில் கவிதை என்றால் என்ன என்பது போல வலம் வந்த பலரையும் எழுத வைத்த பெருமை ஆதவருக்கு உண்டு...
    ஆதவா...
    இந்த களிமண்ணும் (என்னாதான் சொன்னேன்) உன் கையில் வைக்கிறேன்... சிலையாக்கி கொடு....
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    நச்சத்திரங்கள் மத்தியில் நீ..
    கோவிலினுள் நிலாச்சோறு
    திருகார்த்திகை பிரசாதம்...!!
    Last edited by பென்ஸ்; 05-08-2008 at 02:22 AM.
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    கண் மூடினேன்
    கோயிலில் கடவுளை நினைத்து
    பொன்மகளாக நீ வந்தாய்
    காசுகளை அள்ளி வீசினாய்
    கண்ணைத் திறந்தேன்
    காசுகளை வீசினர் பக்தர்கள்
    தாடி மீசையுடனான என்னை
    சாமியார் என்று நினைத்து

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தினமும் சந்திக்கலாம் கோவிலில்
    செக்யூரிட்டி பிரச்சனையில்லை
    ஆண்டவனிடம் அட்வான்ஸாய்
    அனுமதி வாங்கிவிட்டேன்...இது திருமணத்தில்தான்
    முடியுமென்ற உத்திரவாதம் கொடுத்து!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    இந்த இழை தொடர்பான கவிதை என்றவுடன் உடனே நினைவுக்கு வருவது தபூ சங்கர் கவிதை தான்..சூழல் நாயகி கோவில் கஞ்சி
    பகிர்கிறாள் ஏழைகளுக்கு

    அம்மனுக்குத் தானே
    கஞ்சி காய்ச்சி
    ஊற்றுவார்கள்
    இங்கு அம்மனே
    கஞ்சி ஊற்றிக்
    கொண்டிருக்கிறது

    நான் முயற்சித்த ஒன்று..

    ஆராதனை விபூதி
    பிரசாதம் எல்லாமுடன்
    உனக்குப் பின்
    அர்ச்சகர் என்னிடம் வர
    நெற்றிக் குங்குமத்தோடு
    உன்னையும் சேர்த்து
    இட்டுக் கொள்கிறேன்
    நெஞ்சத்தில்...





    பூர்ணிமா
    ==================
    தேமதுரத் தமிழோசை உலகெல்லாம்
    ஒலிக்கச் செய்வோம்....

  12. #12
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    10 Jul 2006
    Location
    சென்னை
    Posts
    522
    Post Thanks / Like
    iCash Credits
    8,948
    Downloads
    8
    Uploads
    0
    பலபெயர்களை
    கொண்டு அர்ச்சனை
    செய்கின்றனர்
    எனக்கு தெரிந்து
    ஒரே பெயரில்
    அர்ச்சனை செய்யலாம்
    அது
    உன் பேர் மட்டுமே.......

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •